ஒரு தேவ கணத்தில்,
காதலிக்கலாமா என்றேன்.
யோசித்தாய்.
காதலித்தேன்.
காதலித்தாய்.
ஒரு பாவப் பொழுதில்,
விலகிடுவோம் என்றாய்.
யோசித்தேன்.
விலகினாய்.
ஒரு தேவ கணத்தில்,
காதலிக்கலாமா என்றேன்.
யோசித்தாய்.
காதலித்தேன்.
காதலித்தாய்.
ஒரு பாவப் பொழுதில்,
விலகிடுவோம் என்றாய்.
யோசித்தேன்.
விலகினாய்.
மேகம் உடைந்து அழும் ஒரு மழை நாளில்
கூட்டம் சுமந்த பயணியர் நிழற்குடையில்
வருகிற பேருந்துக்காக காத்திருக்கும் நீ.
வந்த பேருந்தில் இறங்கிய நான்.
நம் நட்பு தூங்கிக் கொண்டு
நான் விழித்திருந்த
ஒரு கனவுப் பொழுதில்
எனக்குள் விழுந்தாய்.
எனக்கானவள் யாரெனத் தேடி
உனக்கானவன் நானென்ற முடிவில்
எனக்குள் விழுந்தது காதல்.
துயரங்களால் துவண்டு கிடக்கிறேன்.
சாய்ந்து கொள்ள ஒரு தோள் நோக்கி,
என் தேடல் தொடங்குகிறது.
அம்மா வருகிறாள்.
அவளுக்கே இதயம் பலவீனம்.
சாய்ந்து கொள்ள மனமில்லாமல் நடக்கிறேன்.
Recent Comments