தனது பெற்றோரின் நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் இடையில் நடந்தவையெல்லாம் ரசனையோடு பதிவு செய்யப்பட்டிருந்த அந்த டைரியைப் படித்துக் கொண்டிருந்தாள், அடுத்த நாள் தனது இருபத்தியோராவது பிறந்தநாளைகொண்டாட தனது அம்மாச்சி வீட்டுக்கு வந்திருக்கும் தமிழ். ஆனால் அந்த டைரியின் அடுத்தடுத்தப் பக்கங்களைப் புரட்ட புரட்ட எல்லாமே வெறுமையாய் இருந்தன. ஆர்வத்தோடு அந்தப் பழைய அலமாரியை அலசினாள். வேறு டைரிகள் எதுவும் இல்லாவிட்டாலும் ஒரு பழைய ஃபைல் கிடைத்தது. “Ilavarasi – Medical Reports” என்று மேலட்டையில் எழுதப்பட்டிருந்த அந்த ஃபைலை படிக்க ஆரம்பித்தாள். அவளுடைய அம்மா இளவரசியின் கர்ப்ப கால மருத்துவப் பரிசோதனைகளின் விவரம் அடங்கிய ஃபைல் அது.
Read Full Post »உன் வருகை தோறும்…
மலருமென் மனமொரு,
நிலவுகாந்தி!
திருமணத்திற்கு முந்தைய நாள் மாலைப்பொழுது.
திருமண மண்டபத்தில் உங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைகள் எல்லாம் உன் உறவினர்கள்/தோழிகளால் நிறைந்திருக்கின்றன.
உன்முகம் தேடியெடுத்துவர ரகசியமாய் என் பார்வைகளை அனுப்பி வைக்கிறேன்.
என்னைப் போல என் பார்வையும் நிலைகொள்ளாமல் அலைந்து உன் சாயலில் இருந்த உன் தங்கையை இழுத்து வருகிறது.
என்னை அடிக்க நீ கை ஓங்கும் போதெல்லாம்
கண்களை மூடிக்கொண்டு சுகிக்கதான் நினைக்கிறேன்.
ஆனால் நீ அடிக்க வரும் அழகைக் கண்டதும்
இமைக்காமல் நிற்கின்றன என் கண்கள்.
என்னை எதிர்பார்த்து அந்த வாய்க்கால் படித்துறையில் அமர்ந்திருக்கிறாய் நீ.
நீர் பருக வந்த மயில் ஒன்று படியிலேயே அமர்ந்துவிட்டதென மீன்களெல்லாம் உன்னையேப் பார்க்கின்றன.
என் ஆயுள் முழுவதுக்குமான
சந்தோசம்,
உன் அரை நொடிச் சிரிப்பில்
இருக்கிறது!
திருமண அழைப்பிதழ் அச்சடிக்க உங்கள் குடும்ப விவரம் வாங்கி வருவதற்காக உங்கள் வீட்டுக்கு வருகிறேன் நான்.
வரவேற்பறையில் நான் அமர்ந்திருக்க என்னோடுப் பேசிக்கொண்டிருக்கிறார் உன் அப்பா.
சகஜமாய் நான் உன்னைப் பார்க்க, நீயோ
பெண்பார்க்க வந்தபோது இருந்த நாணத்தை தேடிப்பிடித்து முகத்தில் பொய்யாகப் பூசிக்கொண்டு நிற்கிறாய்.
உதடு உன் அப்பாவோடு பேசிக் கொண்டிருக்க விழி உன்னோடுப் பேசப்பார்க்கிறது.
மறுமொழி பேச வேண்டிய உன் விழியோ குடையில் விழுந்த மழையாய் நழுவிக்கொண்டே போகிறது.
உன்னைச் செதுக்கியதில்
சிதறிய அழகுதான்,
வானத்தில் நிலவாய்…
இன்னும் விடியாத ஒரு முன் காலைப் பொழுது.
சந்தித்துக் கொண்ட காதலர்களைப் போல பிரிய மனமில்லாமல் காற்றும் பனியும் கைகோர்த்த படி இருக்கின்றன.
எப்போதும் விடிவதற்குமுன் நீ வரும் அந்த ஆவின் பால் கடைக்கருகேக் காத்திருக்கிறேன்.
Recent Comments