Dec 27

கல்லூரி – பாலாஜி சக்திவேலின் படம் என்பதால் கொஞ்சம் அதிகமான எதிர்பார்ப்போடு போனேன். நாயகியைத் தவிர மற்ற அனைத்து நடிக, நடிகையர்களும் புதுமுகமாம். ஆனால் எல்லோருமே நம்மோடு பழகிய பழைய முகங்கள் போலவே இருப்பது இயல்பு. ஏழ்மைப் பின்னணியில் இருந்து கல்லூரிக்குப் படிக்க வரும் அந்த பள்ளி கால நண்பர்களை, தம் வீட்டுத் துயரங்களை மறந்தும் சிரிக்க வைக்கிறது அவர்களுக்கிடையேயான நட்பு. பயணம், உணவு, துயரம், நெருக்கடி என எல்லா சூழலிலும் இணைபிரியாத அந்த நட்பு வட்டத்துக்குள் இழுக்கப்பட்டு அவர்களுக்குள் ஒருத்தியாக மாறுகிறாள், பணக்கார பின்னணியுடன் வரும் நாயகி. நாயகியாகவும் மற்ற பாத்திரங்களைப் போலவே இயல்பான ஒரு தமிழ்முகத்தையே நடிக்க வைத்திருந்தாலும் இந்தத் திரைப்படம் இப்போதிருக்கும் தரத்திலிருந்து எந்தவிதத்திலும் குறைந்திருக்காது என்பது என் எண்ணம். நட்புக்கும் காதலுக்கும் இடையில் நாயகனும், நாயகியும் தவித்துக்கொண்டிருக்க, படம் கல்லூரி காலநிகழ்வுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. நாயகி தோழியிடம், நாயகன் மீதான காதலை வெளிப்படுத்துகையில் பொசுக்கென கிளைமேக்ஸ் வந்து கதை முடிகிறது. ‘காதல்’ படத்தின் கிளமேக்ஸ் காட்சியில் அழுகை ஓவர்டோசாக இருந்தது. அதனைத் தவிர்க்க நினைத்தோ என்னவோ இதில் கிளைமேக்ஸில் அந்த காட்சிக்குரிய அழுத்தம் இல்லாமலிருப்பதாக எனக்குப் பட்டது. தனித் தனியாக எல்லாம் சரியாக இருப்பது போலத் தோன்றினாலும் ஏதோ ஒன்று குறைவது போல இருக்கிறதே என்று யோசிக்கும்போது, நண்பன் சொன்னான் – ‘மச்சான்… மொதல்ல கிளைமேக்ச முடிவு பண்ணிட்டு, அப்புறம் கதையெல்லாம் யோசிச்சிருப்பாங்களோ?’ இருக்கலாம். படம் முடிந்த பிறகும் நினைவில் நிற்கும் கதாபாத்திரங்கள் - கயல்விழியும், நாயகனின் தங்கையும்.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , , , ,

Aug 29

பெருமை + ஊர் = பேருர்

முதலில், ஈறு போதல் என்ற விதிப்படி நிலைமொழியின் ஈற்றில் உள்ள ‘மை’ அழிந்து பெரு + ஊர் ஆனது.
பின், உயிர் வரின் உ குறள் மெய் விட்டோடும் எனும் விதிப்படி வருமொழியில் ஊ எனும் உயிரெழுத்து வர நிலைமொழியீற்றிலுள்ள ரு எனுமெழுத்தில் ர் எனும் மெய்யெழுத்தைவிட்டு உகரம் அழைந்து பெர் + ஊர் ஆனது.
பின், ஆதி நீடல் எனும் விதிப்படி நிலைமொழியின் ஆதியெழுத்தான பெ என்பது பே என நீண்டு பேர் + ஊர் ஆனது.
பின், உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி ர் எனும் மெய்யெழுத்தோடு + ஊ எனும் உயிரெழுத்து ஒன்றி ரூ என்றாகி பேரூர் ஆனது.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Dec 15

நம்ம ஊர்ப்பக்கம் பாத்தீங்கன்னா நடு நெலம வாதின்னு சொல்லிக்கிட்டு
நெறயப்பேர் திரியறாங்க!
ஒரு தடவ மாமனுக்கும் மச்சானுக்கும் தகராறுன்னு நம்ம நடுநெலம
வாதியக் கூப்பிட ஊர் மக்க வந்திருந்தாங்க!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ

Dec 14

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சி/கூட்டணி ஆட்சி பீடம் ஏறும், எந்த கட்சி/கூட்டணி மண்ணைக் கவ்வும் என்பதைத் தேர்தல் முடிந்ததும் தெரிந்து கொள்ளலாம் :-)))
நமது கரையில் நடக்கும் தேர்தலில் நீங்கள் வெற்றி பெறும் கூட்டணியிலா, இல்லையா? என்று தெரிய பக்கத்தில் உள்ள வாக்குப் பெட்டியில் உங்கள் வாக்கைப் பதியும் படி கேட்டுக் கொள்கிறோம்! நன்றி வணக்கம் _/\_ வாக்குபோட —–>
-சந்திப்போம்.
updated 0n - 16 - 02 - 2008 :
இங்கு [...]

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ

Dec 01

களவும் – திருட்டு ( முதலான தீயப் பழக்கங்களை )
கற்று மற – எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு பிறகு மறந்து விட வேண்டும்……

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ

Nov 30

நேற்றைய என்னை
இன்றைய நான்
வெல்லத் துடிக்கிறேன்…

நாளைய என்னிடம்
இன்றைய நான்
தோற்கப்போவது தெரிந்திருந்தும் !
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ

Nov 27

ஈழ விடுதலைக்கு
உயிர்களை உரமாக்கிய
மாவீரர்கள் அனைவருக்கும்
அஞ்சலி!

படங்கள் : நன்றி - கூகிள்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

Nov 16

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

Nov 12

எல்லாருக்கும் வணக்கம்

உங்கள் கண் இனி கணினியில் தேட…
இதயம் இனி இணையத்தில் இணையப்…
புதிதாய் ஒரு வலைப்பூப் பூத்திருக்கிறது!

வாசம் நுகர வாருங்கள் தேனிக்கூட்டமாய்!
அனுபவத்தைத் தாருங்கள் பின்னூட்டமாய்!!

( பயந்துடாதீங்க மாமே (/மாமீ?) ஒரு கவுஜயோட ஆரம்பிக்கலாமேன்னு ஆச அம்புட்டுதேன் )

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ