Jun 11

சிகரெட் முதல்
கடல் குளியல்
ECR பயணம்
பெரிய ராட்டினத்தில் சுற்றுதல் வரை
உனது பயங்களுக்கு அடிபணிந்து

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

May 28

அர்த்தமிழந்த சொற்களை சுமக்கும்
உன் பழைய காதல் கடிதமொன்று
தன்னை அழித்துக்கொள்ள உயிரில்லாமல் தவிக்கிறது.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

May 14

தீப்பெட்டியென
நிலையாய் உன் நினைவு.
தீக்குச்சியாய்
உரசி உரசி எரியும் மனது.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , ,

Apr 23

கிழிக்க மனமின்றி
பத்திரப்படுத்திய உன் கடிதங்களை
வாசிக்கும்பொழுதெல்லாம் கிழிகிறது
மனம்.

*

நம் பிரிவுக்குப் பிறகு
128 முறை தூக்கியெறிந்திருக்கிறேன்
நீ பரிசளித்த

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

Mar 04

தொலைந்து போய் அழும்பிள்ளையின் துயரும்
தொலைத்துவிட்டுக் கதறும் தாயின் வலியும்
ஒன்றாகத் தந்தாய்.
பாதி உயிரை இழந்த உடலின் கதறலும்
உடல் நீங்கிய உயிரின் தவிப்பும்
ஒன்றாகத் தந்தாய்.
பார்வையற்ற கண்களின் இருமையும்
வாயில்லா இதயத்தின் வெறுமையும்
ஒன்றாகத் தந்தாய்.
இனிமைகொள்ள ஒரு நினைவும்
தனிமைகொல்ல ஒரு நினைவும்
ஒன்றாகத் தந்தாய்.
எடுத்துப்போன இதயத்தை மட்டும் ஏன்
இரண்டாகத் தந்தாய்?
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Feb 26

குருதி தோய்ந்த நகங்களை நாவால் நக்கியபடி,
உயிர் குடிக்கும் உக்கிரத்துடன்
பதுங்கி பதுங்கி திரும்பவும் வருகிறது.
சிக்கிவிட்ட இரையென நடுங்குகிறேன் நான்.
இரக்கமேதுமின்றி மீண்டுமொருமுறை
என்னைக் கொன்றுவிட்டு
சலனமேயில்லாமல்
என்னருகிலேயே படுத்துறங்குகிறது உன் நினைவு.
மறுபடியும் உயிரூட்டி
மரண

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Feb 19

எவருக்கும் அனுமதியற்ற
எனது அறைச்சுவரெங்கும்
ஆணியில்லாமல் தொங்குகின்றன
உனது புகைப்படங்கள்.

ஒன்றில் சிரிக்கிறாய்.
ஒன்றில் சிணுங்குகிறாய்.
ஒன்றில் பயப்படுகிறாய்.
ஒன்றில் முகம்புதைத்து அழுகிறாய்.
ஒன்றில் தூர விலகி நடக்கிறாய்.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Feb 14

இறுக்கி மூடிய இமைகளுக்குள்ளும்
எப்படியேனும் நுழைந்துவிடுகிறது உன் நினைவு!
*
எல்லா கணங்களும் உன் நினைவுதானென்று
பொய் சொல்லவில்லை. ஆனால்…
ஒரு நொடிக்கு குறைந்தது ஒரு முறையேனும்
உன்னைதான் நினைக்கிறேன்.
*
நீ பிரிந்தபிறகும் கூட
‘நீ பிரியாமல் இருந்தால்…’ எனத் துவங்கி
ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறது இதயம்!
*
இதயம் லேசாக்கிய உன் நினைவெல்லாம்
இன்று சுமக்க முடியா கனமாய் மாறுவதேன்?
*
உன்னை நினைத்துக்கொள்ள மறக்கும்வரை
பிரிந்துவிட்டதாய் சொல்வதெல்லாம் பொய்தான்!
*
முட்களை மட்டும்
பூக்கத் தெரிந்த ரோஜாச்செடி
என் காதல்!
*
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Jan 08

செடிகளைப் புறக்கணித்து செல்லும்
விரல்களின் பயணமொன்றை நிறுத்தி,
ரசிக்க வைத்தது,
இதுவரை பூக்காத பூஞ்செடியொன்று.

இலை கோதத் துவங்கி,
நீரூற்றவும், உரமிடவும்,
மண்பிடித்து விடவும்
பழக்கமானது விரல்களுக்கு.

விரலின் அருகாமையில் செடி சிலிர்த்துக்கொண்டும்
செடியின் ஸ்பரிசத்தில் விரல்கள் இளகிக்கொண்டும்

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

Nov 20

kaadhal sOgam 1

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,