Mar 06

அண்மைக்காலமாக
எனக்குள்ளும் புதிய மாற்றங்கள்
தென்படத் துவங்கியிருக்கின்றன.
என்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றுவது எனக்கேத் தெரிகிறது.
இராத்திரியின் நீளம் விளங்குகிறது.
நானும் கவுஜை ஜொள்ளுகிறேன்.
என் பிம்பம் விழுந்தே கண்ணாடிகள் உடைகின்றன.
கண்களிரண்டும் ஒளிகொள்வதாக நண்பன் சொல்கிறான்.
தலையணை நனைக்கிறேன்.
மூன்று முறை பல்துலக்குகிறேன்.
காத்திருக்கும்போது நிமிடங்கள் வருடங்களாகின்றன.
வந்துவிட்டால் வருடங்கள் நிமிடங்களாகின்றன.
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
தொண்டைக்கும் தலைக்கும்
உருவமில்லா உருண்டையொன்று உருளுகிறது.
உண்மையாகவே இருதயம் அடிக்கடி இடம்மாறித் துடிக்கிறது.
நிசப்த அலைவரிசைகளில்
எனது குரல் மட்டும் ஒலிபரப்பாகிறது மிக மிக சத்தமாக.
எனது நரம்பே நாணேற்றி எனக்குள் அம்புவிடுகிறது.
புதிய ஹார்மோன்கள் நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கின்றன.
எனினும் உதடுகள் மட்டும் சகாராவாகிறது.
வாழ்ந்துகொண்டே சாகவும் முடிகிறது.
செத்துக்கொண்டே வாழவும் முடிகிறது.
ஆம். நானும் காதலிக்கத் துவங்கியிருக்கிறேன்,
கண்ணாடிக் கோப்பையில் நிறைந்து கொண்டிருக்கும் இந்த மதுவை.
சியர்ஸ் :)

(கொலைவெறியோடு முறைக்காமல் இந்த மொக்கையையும் பார்த்துவிடுங்கள் ;-) )

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Related Posts...

written by அருட்பெருங்கோ \\ tags: , ,


12 Responses to “ஆம்.நானும் காதலிக்கத் துவங்கியிருக்கிறேன்.”

  1. 1. மங்களூர் சிவா Says:

    எதுக்கும் ஒரு ஃபுல் மெடிக்கல் செக்கப் பண்ணீட்டா என்ன பிரச்சனைன்னாலும் தெரிஞ்சிருமாம்!!

  2. 2. அருட்பெருங்கோ Says:

    /எதுக்கும் ஒரு ஃபுல் மெடிக்கல் செக்கப் பண்ணீட்டா என்ன பிரச்சனைன்னாலும் தெரிஞ்சிருமாம்!!
    /

    புரியுது தலைவா :)

  3. 3. இராம்/Raam Says:

    //கண்ணாடிக் கோப்பையில் நிறைந்து கொண்டிருக்கும் இந்த மதுவை.
    சியர்ஸ் :) //

    அது……………….

    சரக்கு அடி…. வாழ்க்கையை கொண்டாடு…. :)

  4. 4. பிரேம்குமார் Says:

    யோவ் ! யோவ் ! யோவ் ! ஏன் இந்தக் கொலவெறி………….????

  5. 5. அருட்பெருங்கோ Says:

    /அது……………….
    சரக்கு அடி…. வாழ்க்கையை கொண்டாடு…. :) /

    தலைப்பில்லாக் கவிதைகள்ல மூனாவது கவிதையப் படிச்சிடுங்க ராம் :)

  6. 6. கோபிநாத் Says:

    மாப்பி..நீ ரொம்ப நல்லவன்டா ;) )

    \\பிரேம்குமார் said…
    யோவ் ! யோவ் ! யோவ் ! ஏன் இந்தக் கொலவெறி………….????
    \\

    இதுல என்ன மாப்பி கொலவெறி…வார கடைசியில நடக்குறது தானே…என்ஜாய் மாப்பி ;) )

  7. 7. அருட்பெருங்கோ Says:

    / இதுல என்ன மாப்பி கொலவெறி…வார கடைசியில நடக்குறது தானே…என்ஜாய் மாப்பி ;) )/

    மாப்ள, முடிவே பண்ணிட்டியா? என்னோட ஒடம்புக்கு இதெல்லாம் தாங்காதுய்யா. ஒரு மொக்கை போடலாம்னுதான் இப்படியெல்லாம்!

  8. 8. Sri Says:

    good, keep writting like these tension brakers:-)

  9. 9. அருட்பெருங்கோ Says:

    /good, keep writting like these tension brakers:-)/

    கண்டிப்பா தொடரலாம்!!!

  10. 10. delphine Says:

    ஆசையா வந்தேன் தங்கள் காதலி யாரென்று தெரிந்துக்கொள்ள….
    முட்டாளாக்கிவிட்டீர்கள்.

  11. 11. அருட்பெருங்கோ Says:

    /ஆசையா வந்தேன் தங்கள் காதலி யாரென்று தெரிந்துக்கொள்ள….
    முட்டாளாக்கிவிட்டீர்கள்./

    மேடம், நாந்தான் ஏற்கனவே சொல்லியிருக்கேனே. எனக்கு யாரும் அந்த மாதிரி இல்லைனு!

  12. 12. Dhanaraj Says:

    Enna Arul

    U Have only One Lover Or Many…………….??????????????????????

Leave a Reply