முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
மழை பொழியும் பொழுதெல்லாம்
மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!

*

நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.

*

மழை வரும் நேரம்
தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
மல்லிகைச் செடி நீ!

*

பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
மரக்கிளை மழை போல
இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
உனது தூக்க முத்தங்கள்!

*

இதழெங்கும் தீக்காயங்கள்.
மழைக்காலத்தில் நீ சுட்ட
அனல் முத்தங்களால்…

*

ஒரு முக்கிய வேண்டுகோள் : சென்னையிலுள்ள ஐ.டி துறை நண்பர்கள் அனைவரும் இன்று மாலை 4 மணிக்கு டைடல் பார்க் எதிரே நடக்கும் ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான டி.சர்ட் பிரச்சார நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு மணி நேர நிகழ்வுக்கு அனைவராலும் வர முடியுமென்றும் நம்புகிறேன். உணர்வுள்ள நண்பர்கள் அடுத்தடுத்து திட்டமிடப்பட்டிருக்கும் கண்டன நிகழ்விலும் தங்களை இணைத்துக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மடலிடுங்கள் : arutperungo@gmail.com

Related Posts...

  • பேரலையும் மாமழையும்
    மழைநாளில் கடல் இரசிக்க வேண்டுமென நச்சரித்தாய். மழை துவங்கிய ஒரு மாலைப்பொழுதில் கடற்கரையில் அமர்ந்திருக்கிறோம்....
  • கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன
    உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே இனிப்பாய் இருக்கிறது. நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய் நினைத்துக்கொள்வது!...
  • காதல் (திங்)கள் (குரல் பதிவு)
    நீ நினைக்கிறேன். நான் பேசுகிறாய். நமக்குள் காதல் வராமல் என்ன செய்யும்? * பூக்களற்ற தீவுகளுக்கு மணம்வீசப் பயணிக்கிறது. உன் கூந்தலிலிருந்து பிரிந்த இழையொன்று....
  • ஜன்னல் வழியே வெட்கமின்றி ரசித்திருக்கிறேன்
    பால்யத்தின் காற்றுக் காலமொன்றில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த மாலைப்பொழுதில் ஆசையுடன் விளையாட அதுவும் வந்திருக்கிறது. விபத்தில் அடிப்பட்ட கல்லூரி நண்பனை மருத்துவமனை தூக்கிச்சென்ற பதற்றமான இரவில் என்னுடன் சேர்ந்து அழுதிருக்கிறது. ...
  • அன்பே காதல் இமை மழை குடை
    இந்த பதிவெழுதத் தூண்டிய அய்யனாருக்கு நன்றி :-)...

39 Responses to “மழைக்கால காதல்”

  1. Azhagesan.sundaram says:

    முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
    மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
    மழை பொழியும் பொழுதெல்லாம்
    மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!

    /// wow.

  2. Azhagesan.sundaram says:

    hi kadal..
    முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
    மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
    மழை பொழியும் பொழுதெல்லாம்
    மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!

    /// wow.

  3. velvizhi says:

    very very nice poetry……. i really enjoyed..

  4. amalanithish says:

    supar

  5. puji says:

    ela kavithaigalum arumai….. i luv so much tks sweet & lovely writers

  6. manikandan says:

    ok.thats all.

  7. uma says:

    பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
    மரக்கிளை மழை போல
    இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
    உனது தூக்க முத்தங்கள்!

    *

    இதழெங்கும் தீக்காயங்கள்.
    மழைக்காலத்தில் நீ சுட்ட
    அனல் முத்தங்களால்…

    masha allah…really superb aru…

  8. geetha says:

    இதழெங்கும் தீக்காயங்கள்.
    மழைக்காலத்தில் நீ சுட்ட
    அனல் முத்தங்களால்…
    this line is nice…………..

  9. Saravana kumar (tiruppur) says:

    All Kavithai r superb….

    Thanks…

Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout
Press F12 to toggle between English and Tamil
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD