தலைகோதி
கரம்பற்றி
துணையாக நானிருக்க,
நீ ஈனும் குழந்தையுடன்
மீண்டும் பிறக்கின்றன…
முத்தமிட்டு
தோள் சாய்ந்து
நீ பார்க்க,
நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்!
தலைகோதி
கரம்பற்றி
துணையாக நானிருக்க,
நீ ஈனும் குழந்தையுடன்
மீண்டும் பிறக்கின்றன…
முத்தமிட்டு
தோள் சாய்ந்து
நீ பார்க்க,
நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்!
காதல் வாங்கினால் முத்தம் இலவசம்!
நா செஞ்ச குத்தமென்ன?
பிறந்த நாள் வாழ்த்து!
அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு – 1
பிப்ரவரி 14(3) சிறப்புக் கவிதைகள் :-)
அன்புள்ள காதலிக்கு
ஆத்தா நான் Physics ல பாசாகிட்டேன்!!!
சென்னைக் காதலும், திருச்சிக் காதலும்
மாண்டு போனவள் உயிர்த்தெழுந்து வருகையில்…(சிறுகதை)
ஜனனி.. ஜனனி..
காதல் செ(ய்)வ்வாய்
முத்தம்
பேரலையும் மாமழையும்
குழந்தை கவிதை
இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்மழைநாளில் கடல் இரசிக்க வேண்டுமென நச்சரித்தாய்.
மழை துவங்கிய ஒரு மாலைப்பொழுதில்
கடற்கரையில் அமர்ந்திருக்கிறோம்.
முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்? முத்தம் கேட்டால் முறைக்கிறவள், முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?
அணிகலன் இல்லாத கோபத்தில்
என் முத்தமெடுத்து அணிந்து கொள்கின்றன
உன் இதழ்கள்.
கண்ணில் முத்தமிட வந்தேன்.
இமை ம(ப)றித்துக்கொண்டது.
“ஆயிரம் முத்தங்களுடன்,
_____”
என்று கையொப்பமிட்ட
அவளுக்கு ஒரு சிறிய குடை வாங்கிக் கொடுத்து,
நான் : தினமும் இத ஸ்கூலுக்கு எடுத்துப் போயிட்டு, வரும்போது மழை பேஞ்சுதுன்னா பிடிச்சுக்கனும் சரியா?
ஜனனி : அம்ப்ரல்லா எடுத்துட்டுப் போனா மிஸ் திட்டுவாங்க மாமா. நான் எடுத்துட்டுப் போக மாட்டேன். அம்மாதான் கொண்டு வரனும்.
நான் : மழ பேஞ்சா மிஸ்செல்லாம் அம்ப்ரல்லா எடுத்துட்டுதான் பாப்பா வருவாங்க. அதனால உன்னலாம் திட்டமாட்டாங்க.
ஜனனி : மிஸ்செல்லாம் அம்ப்ரல்லா எடுத்துட்டு வரமாட்டாங்க!
நான் : அப்பறம் எப்படி வருவாங்க?
ஜனனி : புடவ கட்டிட்டு வருவாங்க!
மாண்டு போனவள் உயிர்த்தெழுந்து வருகையில்…(சிறுகதை)
முந்தைய நட்சத்திர இடுகை மூன்று கால்கள் மட்டுமிருந்த அந்த நாற்காலிக்கு செங்கற்களை முட்டுக் கொடுத்து அதில் அவள் உட்காரவைக்கப்பட்டிருந்தாள். அவள் வயதுக்கு வந்தபோது உட்காரவைத்து சடங்கு செய்வதற்காக அவள் அப்பா குளித்தலை போய் வாங்கி வந்த நாற்காலியென முன்பொருமுறை சொன்னது நினைவிருக்கிறது. அவள் தாவணிப்பாவாடையணிந்து அந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கிற மாதிரி அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் கூட இன்னும் இருக்கிறது. எங்களுக்கு திருமணம் முடிந்து சென்னை வந்தபிறகு நைந்து போன அந்த கருப்பு வெள்ளைப்படத்தை ஏதோ பெரிய [...]
காதல் வாங்கினால் முத்தம் இலவசம்!
எதிர் வீடு காலியான +2 விடுமுறையில்
இதயத்துக்குள் குடி புகுந்தது ஒரு கனவு:
“இரண்டிலும் ஒரு தேவதை குடிவருவாளா?”
உறங்கிக் கொண்டிருக்கும்போதே உன் கனவு பலித்ததுண்டா?
நான் உறங்கிக்கொண்டிருந்த ஒரு பின்னிரவில்தான்
உன் குடும்பம் எதிர்வீடு புகுந்தது!
கல்மனசு உனக்குன்னு கவிதையில உளிசெஞ்சு,
கண்ணாடி செலயப் போல பக்குவமா நா செதுக்க…
கல்லுக்குள்ள உம்மனசோ பூக்காதப் பூப்போல!
தானாப் பூக்குமுன்னு நாம்பாத்துபாத்து நீரூத்த,
பூக்கும்போதே வாடிப்போச்சே, நா செஞ்ச குத்தமென்ன?
உன் பிறந்தநாளன்று மட்டும்,
என் டைரி வெறுமையாய் இருப்பது பார்த்து கோபிக்கிறாய்.
அது டைரியில் குறிக்க வேண்டிய நாளில்லையடி
என் உயிரில் பொறிக்க வேண்டிய நாள்!
அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு – 1
“I am Ilavarasi, Father is a businessman and Mom is a doctor. I m from Coimbatore only, had my schooling in GRD”
கல்லூரியின் முதல் நாளில் அவள் தன்னை அப்படித்தான் அறிமுகப் படுத்திக் கொண்டாள்.
அப்பா பெரிய பிஸினஸ்மேன் என்கிற பகட்டோ, மேல்தட்டுக்குரிய படோபடமோ இல்லாமல் அவள் எளிமையாய் இருந்தது, அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
ஆங்கிலத்தில் எப்படி சொல்ல வேண்டும் என்று அவள் சொன்னதை வைத்து மனதுக்குள் ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டு,
அவன் முறை வந்த போது சொன்னான் :
“ I am Arul, Father is a clerk and Mother is House wife. I m from karur, had my schooling in MHSS”
“MHSS?”
“Municipality Hr. Sec. School, sir”
பிப்ரவரி 14(3) சிறப்புக் கவிதைகள் :-)
நான் எழுதிய பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை
தமிழ் சிஃபியின் இன்றைய காதல் நாள் சிறப்பிதழில் வெளிவந்திருக்கிறது. தமிழ் சிஃபி ஆசிரியர் அண்ணா கண்ணன் அவர்களுக்கும் , ஷைலஜா அவர்களுக்கும் நன்றிகள்!
நீருக்கு நிறமில்லையென்பதெல்லாம் பூக்களைப் பார்க்காதவர்கள் சொல்லி வைத்தப் பொய்கள். ரோஜாவுக்கு ஊற்றிய நீர் சிவப்பாய்… மல்லிகைக்கு ஊற்றிய நீர் வெள்ளையாய்… நீரும் பூக்குமடி! பூக்களெல்லாம் பெண்களாம். வண்டுகள் எல்லாம் ஆண்களாம். எந்த மூடன் சொன்னது? பெண் வண்டு உட்காரும் பூ ஆண் பூவாய் இருக்கலாமே! பறிக்கப் போகிறாய் என்று தெரிந்தாலும் எப்படி சிரிக்க முடிகிறது இந்தப் பூக்களால்? பறித்தப் பிறகும் நீ சூடும் போது மட்டும் மறுபடி ஒருமுறை பூக்கிறதே எப்படி?
ஆத்தா நான் Physics ல பாசாகிட்டேன்!!!
“டேய் sam , ஹாஸ்டல்ல என்னடாப் பண்ணிட்டு இருக்க. உங்க batchக்கு இப்போ physics lab exam நடந்துட்டு இருக்கு. Professor உன்னக் கேட்டுட்டு இருக்கார். சீக்கிரம் lab க்கு போடா” – அப்படினு என்னோட பாசக்கார நண்பன் சொல்லிட்டு இருக்கும்போதே எனக்கு மண்டைக்குள்ள யாரோ ட்ரம்ஸ் வாசிக்கிற மாதிரி இருந்துது.
“மத்த நாலு பேரு போய்ட்டாங்களா” – என்ன இருந்தாலும் நாம க்ளாஸ் ரெப்பு இல்லையா.
“அவங்கலாம் பாதி experiment பண்ணிட்டாங்க, நீ மொதல்ல labக்குப் போடா” னு சொல்லி வச்சிட்டான். என்னத் தவிர எல்லாரும் வெவரமாதான் இருக்காங்க.
சென்னைக் காதலும், திருச்சிக் காதலும்
‘தப்பா நெனச்சுக்க மாட்டீங்கன்னா நீங்க என்ன காதலிக்கிறீங்களானு நான் தெரிஞ்சக்கலாமா?’
‘ம்ம்ம்…ஆமா காதலிக்கிறேன்’
‘அப்புறம், இவ்ளோ நாளா எதுவுமே சொல்லல’
‘அதிருக்கட்டும். நீங்க என்னக் காதலிக்கிறீங்களா’
‘ம்ம்ம்’
‘நீங்களும் ஏன் எதுவுமே சொல்லல’
நெடுநேரத்திற்கான ஓர் உரையாடல் மிக எளிதாக துவங்கியிருந்தது.
ஒரு கையில் புத்தகப்பையும்
மறுகையில் உணவுக்கூடையும் சுமந்துகொண்டு
பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறது
புடவையணிந்த குழந்தையொன்று.
இரு கையிலும் ஐஸ்க்ரீமைப் பிடித்துக்கொண்டு
அதட்டிக்கொண்டே வருகிறாள்
சீருடையணிந்த தாயொருத்தி!
இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்
கடவுளைக் கண்டுபிடித்தது காட்டுமிராண்டி என்றான்.
காதலைக் கண்டுபிடித்ததும் காட்டுமிராண்டிதான் என்றாள்.
காட்டுமிராண்டித்தனம் எனக்கும் பிடிக்குமென நாத்திகம் நழுவினான்.
அக்கா : ( புது வீடு கட்டிக்கொண்டிருக்கையில் பக்கத்தில் போட்டிருந்த கொட்டகை மீது நிறைய சுரைக்காய் காய்த்திருப்பதைப் பார்த்து ) இந்த சுரைக்காயெல்லாம் கடைல வாங்கினா முப்பது ரூபா நாற்பது ரூபா சொல்லுவாங்க…
ஜனனி : அப்படியாம்மா? அப்படின்னா நாம வீடு கட்டினதும் மொட்டமாடில சுரக்கா செடி வச்சிடலாம். சுரக்காயெல்லாம் வித்து வித்து நாம பணக்காரங்களா ஆகிடலாம்..
அக்கா : அடிப்பாவி.. நீ நல்லா படிச்சு பெரியாளாவன்னு பார்த்தா சுரக்கா வித்து பெரியாளாகலாங்கற…
மருதமலை படிகளில் இறங்குகையில் பார்த்தேன்.
ஐந்தாறு கிளி ஜோசியக்காரர்கள் இருந்தார்கள்.
“சரவணன் B.A” என்று அட்டை வைத்திருந்தவரைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தேன்.
(கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதறிக)
என் பெயருக்கு கிளி எடுத்த சீட்டில் இரட்டைப்பாம்பு படம் வந்திருந்தது.
வேளச்சேரி தரமணி சாலையை ஒட்டியிருந்த
ப்ளாட்பாரக் குடிசைகள் ஓரிரவில் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன.
அடுத்தடுத்த நாட்களில்
புத்தம்புதிய தார்ச்சாலை மினுமினுப்புடன் அகண்டு நீண்டிருந்தது..
ஆறேழு ஆட்டுக்குட்டிகளை விழுங்கிய
மலைப்பாம்பு படுத்திருப்பதைப் போல!
| © 2010 கவிதைகள் | Suffusion WordPress theme by Sayontan Sinha |

/*ya that is “காதல் கூடம்” only … Am I right ?? …Kokila help needed …*/
Athae than. Nichchayamaga…
Sakthi ungalukku epavum en atharavu undu..
Atharavu koduthamikku nanri … Mr. Arul intha kootani jeikrathum thokurathum unga “காதல் கூடம்” mudivula than iruku
Ippo enga join panni irukinga?
Aanalum ungalukku koluppu. Why did you quit when you did not have an offer before hand?
/* Ippo enga join panni irukinga?
Aanalum ungalukku koluppu. Why did you quit when you did not have an offer before hand? */
Is this comment is for me ;(
amazing one… really nice.
amazing one.. really nice!
supar king of love!
nice yaar
Muth thaakath thilaik kinra,Mookang Thaan kandu, pithaakip Poothajilee Thaanirukka, Ath thaane Nijennai Anpudané Anath thiduvaajii Yaanaal, Thap paamal oru kulanthai tharuveenenru, Enainookki ked dathanaal anroo, Thappaamal Ikkulanthai Tharukinreen, Nadpaakath Thalaikuninthu Naanam Mevidaak, Kavithai jithu Thaanunakku th Tharukinree neeriduviir. “EERIDU VIIR”-K.SIVA-(Fr)