உன்னில் வெட்கம் ஒளிந்திருக்கும் இடத்திலெல்லாம்
கோபமும் சேர்ந்தே ஒளிந்திருக்கிறது.
மெதுமெதுவாய் வந்து சட்டென மறையும்
உன் வெட்கத்தைப் போலன்றி
சட்டென வந்து மெதுமெதுவாய்த்தான் மறைகிறது
உன் கோபம்.
அந்த ஒரு நொடி
என் காதல் காயப்படுவதெல்லாம்
உன் கோபங்களுக்கு புரிவதில்லை.
ஆனாலென்ன?
மழையாக விழுந்தாலும்
வெள்ளமாக அடித்தாலும்
கடலாக அணைத்தாலும்
நிலத்துக்கு நீர் நீர் தான்!
ஊடலில் பிரிந்தாலும்
பேசாமல் மௌனித்தாலும்
கோபமாக முறைத்தாலும்
எனக்கு நீ நீ தான்!
துயரம் தானென்றாலும்
உன் கோபங்களை வரவேற்க
என் கோபங்களுக்கு என்றும் அனுமதியில்லை.
ஒரு மௌனம்
ஒரு மன்னிப்பு
ஒரு சின்னக் காதல்
எப்பொழுதும் இவை மட்டுமே
என்னிடமிருந்து எட்டிப்பார்க்கும்.
கோபங்கள் களையப்பட்டு
நிர்வாணமான உன் மனம்
காதலையணிந்து கொண்டு கெஞ்சும் :
‘இனிமே கோபமாப் பேச மாட்டேண்டா’
அடிப்போடி…
உனக்கிருக்கும் காதலுக்கு
நீ இன்னும் நூறு மடங்கு கோபிக்கலாம்!
Related Posts...
- உன் வெட்கத்துக்கு வெட்கமில்லையா? [ 50 வது பதிவு :) ]
உன் முக்கால் வாசி அழகு
ஆடைக்குப் பின்னே மறைந்து கிடக்கிறது.
மீதியும் இப்படி வெட்கத்துக்குப்
பின்னால் ஒளிந்து கொண்டால்
நான் என்ன செய்வது?... - இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்
கடவுளைக் கண்டுபிடித்தது காட்டுமிராண்டி என்றான்.
காதலைக் கண்டுபிடித்ததும் காட்டுமிராண்டிதான் என்றாள்.
காட்டுமிராண்டித்தனம் எனக்கும் பிடிக்குமென நாத்திகம் நழுவினான்.... - போடா கருவாயா
அலமு பிறந்ததுமே எனக்குதானென அம்மாச்சி சொன்னாளாம்.
சித்திரைத் திருவிழாவுக்கு வந்திருந்த பெரியம்மாவும் அத்தையும் பேசிக்கொண்டார்கள்.
கேட்டதிலிருந்து எனக்கு ஒட்டப்பல் அலமு தெத்துப்பல் சிரிப்பழகியாகக் தெரிந்தாள்.
அம்பாளுக்கு பால்குடம் எடுத்துவரும்போது ... - களவாடிய கவிதைகள்
மொட்டுக்கள் பூக்கட்டுமென நீரில் விட்டுவைக்கிறாய்.
உன் கூந்தலேறியதும் அவை இளமை திரும்பி
மீண்டும் மொட்டுக்களாவது உனக்கு தெரியுமா?
o0o
கடலுக்கும் கரைக்குமான எல்லையை
வரைய முடியாமல் தத்தளிக்கிறது அலை...
நட்புக்கும் காதலுக்குமான எல்லையை
வரையறுக்... - அவளால் சுமாரான கவிதைகள்
எல்லோருக்கும்
முகம் காட்டும் கண்ணாடி
உனக்கு மட்டும்
நிலவு காட்டுவதெப்படி?...
last lines are tooo gud.:)
கார்த்திக், ஜேப்பி, செல்வா, லக்ஷ்மணராஜா,
அனைவருக்கும் நன்றிகள்!
Kadhalum kovamum kavithai superb…..kovam irunthal than kadhalum irukkum…arputhamana varthaigalal oru muthusarathai kavithai korthu irukinga…keep it up
நன்றிங்க சிந்துசுபாஷ்!