Apr 30

பிறருடைய காதல் கதைகளை விளக்கமாக கேட்பதில் எனக்கு விருப்பமில்லாததால் ( வேறென்ன பொறாமைதான் ), அத்துடன் அமைதியானேன். லோயர் பரேலில் இறங்கும்போது அவரைப் பார்த்தால், கண்களில் ஒரு சோகம் வந்திருந்தது. கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்டேனோ? ஒருவேளை ஊரைவிட்டு ஓடிவந்து திருமணம் செய்து கொண்டிருப்பார்களாயிருக்கும். பிறிதொருநாள் சந்தித்தால் பேச்சுவாக்கில் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம் என்றபடி அலுவலகம் நோக்கி நடக்கத் துவங்கினேன்.

நாந்தாங்க பழனிச்சாமி. பம்பாய்க்கு வந்த இந்த பாஞ்சு வருசத்துல பழசெல்லாம் மறந்துட்டுதான் பொழப்பு ஓடிட்டிருக்கு. அன்னைக்கு ரயில்ல மொத தடவ பாத்தப்பவே காதல் கல்யாணமானு பட்டுனு அருளு கேட்டுட்டாப்ல. எனக்கு பழசெல்லாம் நாவத்துக்கு வந்து கண்ணெல்லாங்கூட கொஞ்சம் கலங்கிப் போயிருச்சு. அதுக்கப்புறம் ஒருநா சாயங்காலம்

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , ,

Apr 29

அணிகலன் இல்லாத கோபத்தில்
என் முத்தமெடுத்து அணிந்து கொள்கின்றன
உன் இதழ்கள்.

கண்ணில் முத்தமிட வந்தேன்.
இமை ம(ப)றித்துக்கொண்டது.

“ஆயிரம் முத்தங்களுடன்,
_____”
என்று கையொப்பமிட்ட

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Apr 27

“என்னைப் பத்தி ரெண்டே வார்த்தையில் சொல்லத் தெரியுமா?”

“எத்தன வேணும்? சொல்…”

“தெரிஞ்ச வரைக்கும் சொல்லுப் போதும்… எனக்குப் பிடிச்சது கிடைக்குதான்னுப் பார்க்கறேன்”

நடக்கும் பூங்கா
ஒளிரும் இசை
கைவீசும் கவிதை
ஓய்வில்லா ஓவியம்
தென்றலின் தேகம்

இதயமுள்ள இரக்கம்
பகல் நிலா
கலவரக் கண்வீச்சு
புன்னகைப் பூங்கொத்து
அன்பின்

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Apr 24

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு
தாத்தா காலத்தில் கட்டப்பட்ட வீடு அது.
மச்சு வீடென்றால் எல்லோருக்கும் தெரியும்.

அத்தைப்பெண், மாமன்மகனான
அம்மாவும் அப்பாவும்
சிறுவயது முதல் விளையாண்ட வீடு.
அவர்களின் திருமணமே அந்த வீட்டில்தான்

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Apr 23

கிழிக்க மனமின்றி
பத்திரப்படுத்திய உன் கடிதங்களை
வாசிக்கும்பொழுதெல்லாம் கிழிகிறது
மனம்.

*

நம் பிரிவுக்குப் பிறகு
128 முறை தூக்கியெறிந்திருக்கிறேன்
நீ பரிசளித்த

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

Apr 22

24 பதிவுகளை இறக்கியதும் வேர்ட்பிரஸ் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடுகிறது. அதற்கு மேல் நகரவில்லை. உதவி மன்றங்களில் தேடிப்பார்த்ததில் பதிவின் தலைப்பில் special character (தமிழில்?) இருந்தால் வேர்ட்பிரஸ் கோபித்துக்கொள்ளும் என்று சொல்லப்பட்டிருந்தது. அப்படி அந்த 25 –வது பதிவுக்கு என்னதான் தலைப்பு கொடுத்திருந்தேன் என்று பார்த்தால் நானும் ஒரு தெலுங்குப்படமும் – 2 என்று தான் கொடுத்திருந்தேன். இதில் எதுவும் special character இல்லையென்றாலும், தலைப்பில் அந்த ‘- 2’ என்பதை நீக்கினாலும் வேலை செய்யவில்லை. கடைசி முயற்சியாக பிளாக்கரிலிருந்து அந்த பதிவையே தூக்கிவிட்டு முயற்சி செய்தபோது 24 ஐ கடந்துபோனது! மகிழ்ச்சியில் விசிலடிக்க விரலெடுக்கும்போதே 59 வது பதிவில் மீண்டும் வேர்ட்பிரஸ் களைப்படைந்து விட்டது. 60 வது பதிவு என்னவென்று பார்த்தால் ‘அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - 2’ இருந்தது. அநேகமாக என் கதைகளின் இரண்டாம் பாகம் மட்டும் வேர்ட்பிரசுக்கு பிடிக்கவில்லையென்று

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , , ,

Apr 18

‘எனக்கு உன்னைப்போல
கவிதையெழுதத் தெரியாது’ என்கிறாய்.
எனக்கும்தான் உன்னைப்போல
கவிதை பேசத் தெரியாது!

*
கல்லூரியில் கூட
யாரையும் பார்த்து தேர்வெழுதியதில்லை.
காதலில் மட்டும்

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Apr 12

ஒருநாள் பேசாவிட்டாலும்
கோபிக்கிறது காதல்.
யுகம் கடந்து பேசினாலும்
குதூகலிக்கிறது நட்பு!

*

நெடும்பயணத்துக்கான வழியனுப்புதலில்
வண்டி கிளம்பியபின் நீ ஓடிவந்து நீட்டிய

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , , ,

Apr 08