எவருக்கும் அனுமதியற்ற
எனது அறைச்சுவரெங்கும்
ஆணியில்லாமல் தொங்குகின்றன
உனது புகைப்படங்கள்.
ஒன்றில் சிரிக்கிறாய்.
ஒன்றில் சிணுங்குகிறாய்.
ஒன்றில் பயப்படுகிறாய்.
ஒன்றில் முகம்புதைத்து அழுகிறாய்.
ஒன்றில் தூர விலகி நடக்கிறாய்.
இன்னும் பலவற்றில் இன்னும் பல மாதிரி.
என்னை வெறுமைக்கு துரத்துகிற பாவனையில்
தினமொன்றாய்ச் சேர்ந்து கொண்டே இருக்கிறது.
உன்னிடமிருந்து தப்பிக்கும் முடிவுடன்
எல்லாப் படங்களையும் மூட்டைகட்டி
கொல்லைப்புற ஆழத்தில் புதைத்துவிட்டு திரும்புகிறேன்.
புகைப்படங்கள் இருந்த இடத்திலெல்லாம்
உன்னை இன்னுமதிகமாய் நினைவூட்டியபடி
இப்பொழுது தொங்கிக்கொண்டிருக்கிறது
அவற்றை மூட்டைகட்டிய கணம், கனமாய்!

காதல் வாங்கினால் முத்தம் இலவசம்!
நா செஞ்ச குத்தமென்ன?
பிறந்த நாள் வாழ்த்து!
அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு – 1
பிப்ரவரி 14(3) சிறப்புக் கவிதைகள் :-)
அன்புள்ள காதலிக்கு
ஆத்தா நான் Physics ல பாசாகிட்டேன்!!!
சென்னைக் காதலும், திருச்சிக் காதலும்
மாண்டு போனவள் உயிர்த்தெழுந்து வருகையில்…(சிறுகதை)
ஜனனி.. ஜனனி..
காதல் செ(ய்)வ்வாய்
முத்தம்
பேரலையும் மாமழையும்
குழந்தை கவிதை
இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்
dera arul,
vaazhthukal,nachunu eruththu
ram
உணர்வுகளின் வெளிப்பாடு….
அருமை அருள்!
அடப்போப்பா உனக்கு இதே வேலையா போச்சு தானும் பொலம்பி அடுத்தவனையும் பொலம்ப உடுற
ராம், மணி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!
ஸ்ரீ,
என்னைய என்ன பண்ண சொல்ற? அலுவலகத்துலயும் பொலம்பத்தான் விடறாங்க. புலம்பாம என்ன பண்றது?
azhagiya kavidaigalal thamizhai melum azhagu paduthugirir.
adhu enna anaithu kadhailum ila enra kadhapathiram
/azhagiya kavidaigalal thamizhai melum azhagu paduthugirir.
adhu enna anaithu kadhailum ila enra kadhapathiram/
கருத்துக்கு நன்றிங்க நண்பரே. இளா எல்லாக்கதைக்கும் பொதுவான ஒரு கற்பனை கதாபாத்திரம்.
ஆழமான உணர்வின் பதிவு…
அருமை நண்பரே…
தினேஷ்
நன்றிங்க தினேஷ்!