Feb 29

தினமும் பார்வையை வாங்கிக்கொண்டு
வெட்கத்தைக் கொடுக்கிறேன்.
மறுநாள் சந்திப்பிலோ வாங்கிய பார்வை அவனிடமும்
கொடுத்த வெட்கம் என்னிடமுமே மிஞ்சுகிறது.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , ,

Feb 26

குருதி தோய்ந்த நகங்களை நாவால் நக்கியபடி,
உயிர் குடிக்கும் உக்கிரத்துடன்
பதுங்கி பதுங்கி திரும்பவும் வருகிறது.
சிக்கிவிட்ட இரையென நடுங்குகிறேன் நான்.
இரக்கமேதுமின்றி மீண்டுமொருமுறை
என்னைக் கொன்றுவிட்டு
சலனமேயில்லாமல்
என்னருகிலேயே படுத்துறங்குகிறது உன் நினைவு.
மறுபடியும் உயிரூட்டி
மரண

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Feb 25

நடந்து வந்து வீட்டுக்குமுன் படுத்துவிட்ட ஓவியம்போல
பக்கத்துவிட்டுப் பெண் தீட்டிவைத்த வாசல்கோலம்
மாலை வெயில் பட்டு மினுங்கிக் கொண்டிருக்கிறது.

எதிரில் வீடு கட்டுவதற்காய்க் குவித்து வைத்த ஆற்றுமணலில்
மணல்வீடு கட்டும் சிறுமிகளின் கைகளில் வழிந்துகொண்டிருக்கிறது
அடுத்த சிறுமியின் வீட்டுக்கான மணலும் அன்பும்.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

Feb 24

‘காலைவணக்கம்’ சொல்லிக்கொண்டு வந்த மடலில்
சிரித்தபடி அமர்ந்திருந்தது ஒரு குழந்தை.

குழந்தையைப் பார்த்ததும்
பால்யம்…
பள்ளிக்கூடம்…
தமிழய்யா…
தமிழ்…
என்றும்,

தமிழை நினைத்ததும்
கவிதை…
இலக்கியம்…

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Feb 19

எவருக்கும் அனுமதியற்ற
எனது அறைச்சுவரெங்கும்
ஆணியில்லாமல் தொங்குகின்றன
உனது புகைப்படங்கள்.

ஒன்றில் சிரிக்கிறாய்.
ஒன்றில் சிணுங்குகிறாய்.
ஒன்றில் பயப்படுகிறாய்.
ஒன்றில் முகம்புதைத்து அழுகிறாய்.
ஒன்றில் தூர விலகி நடக்கிறாய்.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Feb 18

பால்யத்தின் காற்றுக் காலமொன்றில்
பட்டம் விட்டுக்கொண்டிருந்த மாலைப்பொழுதில்
ஆசையுடன் விளையாட அதுவும் வந்திருக்கிறது.

விபத்தில் அடிப்பட்ட கல்லூரி நண்பனை
மருத்துவமனை தூக்கிச்சென்ற பதற்றமான இரவில்
என்னுடன் சேர்ந்து அழுதிருக்கிறது.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Feb 18

“யாருன்னே தெரியல இந்த நம்பர்ல இருந்து மிஸ்டு கால் வந்துட்டே இருக்குடா”
“ஒரு ரூபா காயின்ஸ் இருக்கா?”
“இருக்கு”
“எடுத்துட்டு வா!”
***
“ஹலோ யார் பேசறது?”
“நான் பாரதியார் பேசறேன்”
“யாரு?”
“பாரதியார் தெரியாதா? சரி அங்க திருவள்ளுவர் இருக்காரா?”
“திருவள்ளுவரா?”
“திருவள்ளுவர் இல்லையா? இந்த நம்பர் கொடுத்து கால் பண்ண சொன்னதே அவர்தாங்க…”
“அப்படிலாம் யாரும் இங்க இல்ல…”
“ஹலோ ஹலோ”
கொஞ்ச நேரம் கழித்து…
“ஹலோ யாரு?”
“நான் திருவள்ளுவர் பேசறேன்”
“என்னது?”
“திருவள்ளுவர தெரியலையா? சரி விடுங்க… என்னக் கேட்டு கொஞ்ச நேரம் முன்னாடி பாரதியார் கால் பண்ணாரா?”
“ஹலோ உங்களுக்கு இப்போ என்ன வேணும்?”
“என்ன மீட் [...]

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

Feb 14

இறுக்கி மூடிய இமைகளுக்குள்ளும்
எப்படியேனும் நுழைந்துவிடுகிறது உன் நினைவு!
*
எல்லா கணங்களும் உன் நினைவுதானென்று
பொய் சொல்லவில்லை. ஆனால்…
ஒரு நொடிக்கு குறைந்தது ஒரு முறையேனும்
உன்னைதான் நினைக்கிறேன்.
*
நீ பிரிந்தபிறகும் கூட
‘நீ பிரியாமல் இருந்தால்…’ எனத் துவங்கி
ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறது இதயம்!
*
இதயம் லேசாக்கிய உன் நினைவெல்லாம்
இன்று சுமக்க முடியா கனமாய் மாறுவதேன்?
*
உன்னை நினைத்துக்கொள்ள மறக்கும்வரை
பிரிந்துவிட்டதாய் சொல்வதெல்லாம் பொய்தான்!
*
முட்களை மட்டும்
பூக்கத் தெரிந்த ரோஜாச்செடி
என் காதல்!
*
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Feb 13

காதலைக் காதலிக்கிற யாவருக்கும் காதல்நாள் வாழ்த்துகள்!
கடந்த வருடம் இதே நாள்

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , ,

Feb 12

kaadhal vaaram 3 kavidhai 1

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: