Jan 09

கடந்த ஆண்டு முன் திட்டமெதுவுமில்லாமல் கங்கைகொண்டசோழபுரத்திற்கு சென்றபொழுதொன்றில் எடுக்கப்பட்டது இந்தப்படம். கோயில் வளாகத்தின் மையத்தில் இருந்த ஒரு கோபுரத்தையும், அதற்கு சற்றுத் தள்ளியிருந்த ஒரு கோபுரத்தையும் ஒரே கட்டடமாகப் படத்தில் காட்டலாம் என முயற்சி செய்து எடுத்தப் படம். படம் கொஞ்சம் சாய்வாகவும், தென்னங்கீற்றுகள் கொஞ்சமாய் மறைத்தபடி இருந்தபோதும் எடுத்தப் படங்களிலேயே இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்களும் பார்த்து சொல்லுங்கள் எப்படி இருக்கிறதென்று.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,