Aug 29
பெருமை + ஊர் = பேருர்
முதலில், ஈறு போதல் என்ற விதிப்படி நிலைமொழியின் ஈற்றில் உள்ள ‘மை’ அழிந்து பெரு + ஊர் ஆனது.
பின், உயிர் வரின் உ குறள் மெய் விட்டோடும் எனும் விதிப்படி வருமொழியில் ஊ எனும் உயிரெழுத்து வர நிலைமொழியீற்றிலுள்ள ரு எனுமெழுத்தில் ர் எனும் மெய்யெழுத்தைவிட்டு உகரம் அழைந்து பெர் + ஊர் ஆனது.
பின், ஆதி நீடல் எனும் விதிப்படி நிலைமொழியின் ஆதியெழுத்தான பெ என்பது பே என நீண்டு பேர் + ஊர் ஆனது.
பின், உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி ர் எனும் மெய்யெழுத்தோடு + ஊ எனும் உயிரெழுத்து ஒன்றி ரூ என்றாகி பேரூர் ஆனது.
Read Full Post »
அழியாத அன்புடன், அருட்பெருங்கோ
| tags: புணர்ச்சி இலக்கணம், காதல் கூடம்
Aug 28
நம் பிரிவை விட
ஒரு வயது குறைவான சிறுவனுக்குத்
தாயெனும் தகுதியில் நீயும்,
நம் காதலைப் போல
புறக்கணிக்கப்பட்ட
அகதியெனும் நிலையில் நானும்,
எதிர்பாராமல்
எதிரெதிர் பார்க்க நேர்ந்தும்,
சலனமின்றி விலகிச் செல்கையில்,
Read Full Post »
அழியாத அன்புடன், அருட்பெருங்கோ
| tags: புலம்பல், மௌனம்
Aug 27
புன்னகை, கண்சிமிட்டல்,
உதட்டுசுழி, கன்னக்குழியென
விதவிதமானப் பூக்கள் பூத்து
முகத்திலொரு பூங்கா சுமந்தபடி நீ.
தொலைதூரப்பூங்காவை
தொடுதூரத்தில் பார்க்க,
இமைகளை சிலையாக்கி
கண்களை தொலைநோக்கியென
மாற்றியபடி நான்.
இருபுறமும் வீடுகள் அடைத்த வீதியாய்
நடுவில் கிடக்கிறது நீண்ட இடைவெளி.
இடப்பக்க முதல் மேசையில் வலது ஓரமாய் நீ.
வலப்பக்க இறுதி மேசையில் இடது ஓரமாய் நான்.
உன்னைப் பார்த்தபடியே ஒடியும்,
என் நிமிடங்களின் எல்லா நொடியும்.
இடைவெளியெங்கும் நிரம்பிக்கிடக்கும்
உனக்கான என் பார்வைகள்.
இடையூறின்றி விலகிச் செல்லும்
காற்று.
Read Full Post »
அழியாத அன்புடன், அருட்பெருங்கோ
| tags: காதல் கூடம்
Aug 21
ஒரு தேவ கணத்தில்,
காதலிக்கலாமா என்றேன்.
யோசித்தாய்.
காதலித்தேன்.
காதலித்தாய்.
ஒரு பாவப் பொழுதில்,
விலகிடுவோம் என்றாய்.
யோசித்தேன்.
விலகினாய்.
Read Full Post »
அழியாத அன்புடன், அருட்பெருங்கோ
| tags: பிரிவு, புலம்பல்
Aug 19
அடுத்த ஆண்டு பள்ளியின் முதல் நாள்.
காத்திரு என்று நானும்
காத்திருக்கிறேன் என்று நீயும்
சொல்லிக் கொண்டதில்லை.
ஆனாலும் காலைதோறும் காத்திருப்பாய்
ஆற்றுப்பாலத்தில் மிதிவண்டி துணையோடு.
காலைக் கதிரவனுக்கு
உன்னை ரசிக்க ஒருகண் போதவில்லை.
ஆற்றுநீர் பிம்பமாய்
மறுகண்ணும் மையலில்.
Read Full Post »
அழியாத அன்புடன், அருட்பெருங்கோ
| tags: காதல் கூடம்
Aug 15
நம் காதல் தேசத்தில்…
நீ…
தேசிய மலர்!
உன் கைக்குட்டை…
தேசிய கொடி!
உன் பிறந்தநாள்…
தேசிய தினம்!
உன் பாதச்சுவடு…
தேசிய சின்னம்!
என்று கொண்டாடினேன்.
இன்றோ…
உன் மௌனமே…
தேசிய கீதமானது!
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Read Full Post »
அழியாத அன்புடன், அருட்பெருங்கோ
| tags: புலம்பல், மௌனம்
Aug 12
அந்தப் பாதையெங்கும்
உன் மிதிவண்டி வேகத்தில்
நீர்க்கோலங்களை வரைந்தவண்ணம் செல்கிறது,
உன் கூந்தல் அருவி சிந்தும்
தலைக்குளியல் நீர்.
உன் வருகையை எதிர்பார்த்து
கர்ப்பகிரகத்துக்கும், வாசலுக்கும்
நடையாய் நடந்து கொண்டிருக்கிறாள் அம்மன்.
நீ நெருங்கியதும்,
உன் நுதலில் சிறுபிறையென
குங்குமத்தை அவள் கீற்ற,
கொஞ்சமாய்ச் சிவந்தது,
குங்குமம்!
Read Full Post »
அழியாத அன்புடன், அருட்பெருங்கோ
| tags: காதல் கூடம்
Aug 09
உதடுகள்
கொடுத்துக்கொண்டே இருக்க
சோர்ந்து போகிறது
முத்தம்.
*
நீயிறங்கி குளிக்கும்போது,
நீர்த்தொட்டி - பூந்தொட்டி.
முடிக்கும்போது தேன்தொட்டி
Read Full Post »
அழியாத அன்புடன், அருட்பெருங்கோ
| tags: நொடிக் கவிதைகள்
Aug 07
தனிமையான சில கணங்களில்
இதயத்தின் நான்கு அறைகளிலிலும்
சூழ்ந்து கொள்ளும் வெறுமையின் கனம்
தாங்க முடியாததாய் இருக்கிறது.
Read Full Post »
அழியாத அன்புடன், அருட்பெருங்கோ
| tags: புலம்பல்
Aug 05
அஞ்சாப்பு படிக்கும்போது
பென்சில் இல்லாதவங்கள
திலகா டீச்சர் முட்டிப் போட சொல்ல…
என்னோட பெரிய பென்சில
பாதியா ஒடச்சு ஒனக்கு கொடுத்ததுல
எம்பென்சில் சிறுசாப்போச்சு…
Read Full Post »
அழியாத அன்புடன், அருட்பெருங்கோ
| tags: நண்பர்கள் தினம், மொக்கை
Recent Comments