மேகம் உடைந்து அழும் ஒரு மழை நாளில்
கூட்டம் சுமந்த பயணியர் நிழற்குடையில்
வருகிற பேருந்துக்காக காத்திருக்கும் நீ.
வந்த பேருந்தில் இறங்கிய நான்.
தனது பெற்றோரின் நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் இடையில் நடந்தவையெல்லாம் ரசனையோடு பதிவு செய்யப்பட்டிருந்த அந்த டைரியைப் படித்துக் கொண்டிருந்தாள், அடுத்த நாள் தனது இருபத்தியோராவது பிறந்தநாளைகொண்டாட தனது அம்மாச்சி வீட்டுக்கு வந்திருக்கும் தமிழ். ஆனால் அந்த டைரியின் அடுத்தடுத்தப் பக்கங்களைப் புரட்ட புரட்ட எல்லாமே வெறுமையாய் இருந்தன. ஆர்வத்தோடு அந்தப் பழைய அலமாரியை அலசினாள். வேறு டைரிகள் எதுவும் இல்லாவிட்டாலும் ஒரு பழைய ஃபைல் கிடைத்தது. “Ilavarasi – Medical Reports” என்று மேலட்டையில் எழுதப்பட்டிருந்த அந்த ஃபைலை படிக்க ஆரம்பித்தாள். அவளுடைய அம்மா இளவரசியின் கர்ப்ப கால மருத்துவப் பரிசோதனைகளின் விவரம் அடங்கிய ஃபைல் அது.
Read Full Post »ஓர் இடம்
ஒரு சொல்
ஒரு காட்சி
ஒரு பாடல்
ஒரு கனவு
உன் வருகை தோறும்…
மலருமென் மனமொரு,
நிலவுகாந்தி!
திருமணத்திற்கு முந்தைய நாள் மாலைப்பொழுது.
திருமண மண்டபத்தில் உங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைகள் எல்லாம் உன் உறவினர்கள்/தோழிகளால் நிறைந்திருக்கின்றன.
உன்முகம் தேடியெடுத்துவர ரகசியமாய் என் பார்வைகளை அனுப்பி வைக்கிறேன்.
என்னைப் போல என் பார்வையும் நிலைகொள்ளாமல் அலைந்து உன் சாயலில் இருந்த உன் தங்கையை இழுத்து வருகிறது.
…உலகத்துல எத்தனையோ கண்டம் இருக்கு. அதுல ரொம்பப் பெருசு நம்ம ஆசியாக்கண்டம்தான் அப்படிங்கறதும் சில அறிவுஜீவிகளுக்குத் தெரிஞ்சிருக்கும். அந்தப் பெரிய கண்டத்துல பல நாடுக இருந்தாலும் இந்தியாவ மட்டும்தான் துணைக்கண்டம்னு சொல்லுவாங்களாம். அதுல பல மொழிகள் பேசப்பட்டாலும் ரொம்பப் பழமையான மொழிகள்ல இந்தத் தமிழும் ஒன்னு. பழசா இருக்கிற அளவுக்கு அது புதுசாவும் இருக்குனு சொல்லுவாங்க.(பதிவு சரியான மொக்கையா இருக்கேன்னு இதோட நீங்கப் போயிட்டா அதுவும் இந்தப் பதிவோட வெற்றி தான்;))
Read Full Post »நம் சந்திப்புகள்
இரவில் வேண்டாமென நிந்திக்கின்றன…
நம் நிழல்கள்!
*
கதை சொல்கிறேனென சொல்லி
நீ சொல்வதெல்லாம் கதை.
செய்வதெல்லாமோ கவிதை!
“டேய் sam , ஹாஸ்டல்ல என்னடாப் பண்ணிட்டு இருக்க. உங்க batchக்கு இப்போ physics lab exam நடந்துட்டு இருக்கு. Professor உன்னக் கேட்டுட்டு இருக்கார். சீக்கிரம் lab க்கு போடா” – அப்படினு என்னோட பாசக்கார நண்பன் சொல்லிட்டு இருக்கும்போதே எனக்கு மண்டைக்குள்ள யாரோ ட்ரம்ஸ் வாசிக்கிற மாதிரி இருந்துது.
“மத்த நாலு பேரு போய்ட்டாங்களா” – என்ன இருந்தாலும் நாம க்ளாஸ் ரெப்பு இல்லையா.
“அவங்கலாம் பாதி experiment பண்ணிட்டாங்க, நீ மொதல்ல labக்குப் போடா” னு சொல்லி வச்சிட்டான். என்னத் தவிர எல்லாரும் வெவரமாதான் இருக்காங்க.
Read Full Post »இருள் கவிந்த ஒரு மாலைநேரம்.
உன் வருகையை
ஊருக்கே சொல்லிக்கொண்டு
மணக்கிறது உன் கூந்தலின் மல்லிகை.
என்ன மல்லிகையோ…
உன் புன்னகையைப் போல
ஒளிரத்தெரியவில்லை.
Recent Comments