அது ஓர் அழகிய நிலாக்காலம்.
கவலை வெயில் சுடாத இனிய இரவைப்போன்றது.
இரவின் மடியில் இனிய உறக்கத்தில் நான்.
என்னைத் தேடி மெல்ல வருகிறது ஒரு கனவு.
ஆனால், கலைகிற கனவுகள் எனக்குப் பிடிப்பதில்லை.
கனவைத் துரத்தி விடுகிறேன் நான்.
அதன் வருகையும் என் துரத்தலும் தொடர்கதை.
கனவைத் துரத்தி துரத்தி கடைசியில் கனவின் பின்னே நான்.
அதனை விரட்டும் முயற்சியில் தொடங்கிய என் துரத்தல்
எப்படியாகினும் அதனை பிடித்து விடுகிற முயற்சியில் முடிகிறது.
ஓர் பௌர்ணமி இரவில் அந்தக் கனவும் கை (கண்?) கூடுகிறது.
கனவுக்கே உண்டான இயல்போடு
அது கலைந்து விட முயலும்போதெல்லாம்
நனவாகும் ஆசைகாட்டி அதனை என்னோடு இருத்திக் கொள்கிறேன்.
இறுதியில், தான் நனவாகப் பிறக்கவில்லை
தான் கலைவதற்காக தான் பிறந்ததாக
எனக்கந்த கனவு சொல்கிறபோது
நான் மரணிக்கிறேன்.
கலைகிற கனவுகள் எனக்குப் பிடிப்பதில்லை.
இப்போதும் என் கனவு கலையவில்லை.
கனவு காண்கையிலேயே,
எனக்கு தான் நிகழ்ந்துவிட்டது…
மரணம்!

காதல் வாங்கினால் முத்தம் இலவசம்!
நா செஞ்ச குத்தமென்ன?
பிறந்த நாள் வாழ்த்து!
அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு – 1
பிப்ரவரி 14(3) சிறப்புக் கவிதைகள் :-)
அன்புள்ள காதலிக்கு
ஆத்தா நான் Physics ல பாசாகிட்டேன்!!!
சென்னைக் காதலும், திருச்சிக் காதலும்
மாண்டு போனவள் உயிர்த்தெழுந்து வருகையில்…(சிறுகதை)
ஜனனி.. ஜனனி..
காதல் செ(ய்)வ்வாய்
முத்தம்
பேரலையும் மாமழையும்
குழந்தை கவிதை
இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்
// அருட்பெருங்கோ said…
/ஒரு கனவு போயின்
மறு கனவு
காண்பதற்கு
இரவும் உண்டு
உறக்கமும் உண்டு
கலையும் கனவுக்கு
காவு கொடுப்பதா
ஏற்கோம் ஏற்கோம் /
ராகவன்,
ஒரு கனவு போயின்
மறு கனவு
காண்பதற்கு
இரவும் உண்டு
உறக்கமும் உண்டு தான்…
ஆனால் கண்கள்???
கலைகிற கனவின் பின்னே
அலைகிற கண்கள்…
கனவு கலைவதை காண்ச் சகியாமல்
இயக்கம் நிறுத்தும் மூளை…
கனவைப் போலவே
கலைந்து போகிற மனசு…
சவமாகிறது…உடல்! //
எந்தக் கண்களும்
கண்டதில்லை கனவை
கண்டவைகள் கனவல்ல
எந்தக் கண்களும்
கண்டதில்லை மனதை
காணாத கூட்டணிக்குக்
காணும் கண்களையும்
வாழும் வாழ்க்கையையும்
படையல் போட
மடையலாக வேண்டுமோ!
கசப்பென்றாலும்
களிம்பைத் தின்பவன்
நலம் பெறுவான்
நஞ்சென்று புரிந்தும்
கசப்பைத் தின்பவன்?
//வந்தார் காதல் இளவரசன்..
//
அழகிய கவிதையோடு.
நன்றி மை ஃப்ரெண்ட்…
/எந்தக் கண்களும்
கண்டதில்லை கனவை
கண்டவைகள் கனவல்ல
எந்தக் கண்களும்
கண்டதில்லை மனதை
காணாத கூட்டணிக்குக்
காணும் கண்களையும்
வாழும் வாழ்க்கையையும்
படையல் போட
மடையலாக வேண்டுமோ!
கசப்பென்றாலும்
களிம்பைத் தின்பவன்
நலம் பெறுவான்
நஞ்சென்று புரிந்தும்
கசப்பைத் தின்பவன்?
/
நன்றி ராகவன்.
பலியிடப்பட்டதை
இனியெங்கே படையல் போட?
எப்டி இருக்கீங்க உங்களுக்கென ஒரு அழைப்பு .. பதிவு போடுங்க.
http://theyn.blogspot.com/2007/06/7-9.html
வித்தியாசமான கவிதை. ஆனாலும் மனசு பாரமாச்சு.
/ எப்டி இருக்கீங்க உங்களுக்கென ஒரு அழைப்பு .. பதிவு போடுங்க./
சிறில்
பதிவு போட்டாச்சு
/ வித்தியாசமான கவிதை. ஆனாலும் மனசு பாரமாச்சு./
நன்றிங்க நளாயினி…
கொஞ்சம் சோகக்கவிதை முயற்சி பண்ணினேன்…அதான்…
கலைகிற கனவுகள் எனக்குப் பிடிப்பதில்லை.
இப்போதும் என் கனவு கலையவில்லை.
கனவு காண்கையிலேயே,
எனக்கு தான் நிகழ்ந்துவிட்டது…
மரணம்!
ShareThis
ennatha solvathu…arut…
சொல்ற மாதிரி ஒன்னுமில்லங்கறீங்களா?