Feb 08

உன்னை எனக்குக் காட்டியதால்
கோடிமுறை நன்றி சொல்லியிருப்பேன் என் கண்களுக்கு…
நீ பிரிந்ததும் என்னைக் காண மனமில்லாமல் அவை
கண்ணீரால் தம் முகம் மறைக்கின்றன!

கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது.

தீராத இக்காமநோய் கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க காட்டிய கண்கள் தாமே இப்போது அழுவது ஏன்?

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: