Feb 04

பசும்பால் தருகிறாய். தேனும் தருகிறாய்.
“இரண்டும் கலந்து தா” என்றால்…
முத்தமிட்டு விட்டு ஓடுகிறாய்!

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்.

மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர், பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: