Feb 27

எல்லாவற்றையும் பங்கிடுவோம் என்றாய்.
நான் காதலைக் கொண்டு வந்தேன்.
நீ பிரிவைக் கொண்டு வந்தாய்.
கொண்டு வந்த பிரிவை என்னிடம் கொடுத்து விட்டு,
காதலை மட்டும் நீ வாங்கிக் கொள்ளவே வில்லை!

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

Feb 26

நீ காதல் பறவை.
எனக்குள்
காதல் பற்ற வை!

*

அழகால் கொத்தும்
அதிசயப் பறவை நீ!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

Feb 22

உன்னையே எதிர்பார்த்து
என் கண்ணெறிந்த கனலால்
வீதியில் தீ.

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.

வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

Feb 20

தவமாய்த் தவமிருந்து
தான் பெற்ற மகளும்
தாயாகிவிட்டப் பரவசம்
அம்மாவின் முகத்தில்…

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

Feb 19

கண் நடிக்கிறது.
ஆனால் காதல்
கண்ணடிக்கிறது.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

Feb 18

உன்னைக் காணும் வரை,
காதல் எனக்கு “கனவு காணும்” விஷயம் மட்டுமே!
ஆனால் இப்போதோ,
என் கனவுகளில் எல்லாம் காதலே நிறைகிறது!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

Feb 18

நீயிருந்தவரை உனக்கு அடங்கிக் கிடந்துவிட்டு
நீ பிரிந்ததும் என்னையே அடக்குகிறது
காதல்.

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றது.

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

Feb 17

காதல் நோய்க்கு
காரணம் யாரெனக் கேட்டால்
உன்னைக் காட்டியது…
மருந்து என்னவென்று கேட்டாலும்
உன்னையேக் காட்டுகிறது
உன்னைப் போல தான் குறும்பு செய்கிறது
இந்த மனமும்!

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கு மருந்து.

எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா?

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

Feb 15

மனதில் பூகம்பம்.
மோதியது,
ஒரு பூக் கம்பம்!
~
உன் பூவிதழ்.
முத்த
அழைப்பிதழ்!

Read Full Post »

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

Feb 15