நான், ஆதாம் ஏவாள் காலத்து
பழைய ஜோக்குகளை
அள்ளி விட்டாலும்
அன்று புதிதாய்க் கேட்பது போல்
பகீரென சிரிக்கிறாய்…

வாக்கியங்களைத் திருப்பிப் போட்டு
நான் வார்த்தைகளில் கிறுக்கியதையெல்லாம்
கவிதையென
சொல்லி சொல்லி இரசிக்கிறாய்…

உனது Good Morning SMS இல்லாமல்
எனது நாட்கள் விடிந்ததுமில்லை…

உனது Good Night SMS இல்லாமல்
எனது இரவுகள் தொடங்கியதுமில்லை…

12 மணிவரை விழித்திருந்து
முதல் ஆளாய் எனது பிறந்த நாளுக்கு
வாழ்த்துச் சொல்கிறாய்…

உனது சின்ன சின்ன சந்தோஷங்களையும்
பகிர்ந்து கொள்ள
என் மனம் தேடுகிறாய்…

உனது எல்லா பாரங்களையும்
இறக்கி வைக்க
என் தோள் சாய்கிறாய்…

என்னை மறக்க வில்லையென உணர்த்த
இத்தனையும் செய்வதற்குப் பதிலாக
என்னிடம் வாங்கிய கடனைத்
திருப்பிக் கொடுத்து விடேன்டா நண்பா!

© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD