விட்டுப்போன ஒன்று! +2 காதல் - 1
May 14

நம் காதலை
நீ முதலில் சொல்வாய் என நானும்
நான் முதலில் சொல்வேன் என நீயும்
காத்திருக்கிறோம்.
யாரோ ஒருவர் சீக்கிரம் சொல்லுங்களேன்
எனத் தவிக்கிறது
நம் காதல்!

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

6 Responses to “யார் முதலில்?”

  1. Anonymous Says:

    துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
    எப்பவும் வரலாம் எவர் கண்டார்.

    அன்புடன்
    துபாய் ராஜா

  2. சத்தியா Says:

    துடிக்கிறது இதயம் காதலில் தவித்து..
    தடுக்கிறது தயக்கம் ஏற்றுக் கொள்ளுவானோ என எண்ணி…

  3. அருட்பெருங்கோ Says:

    ராஜா,

    வருகைக்கு நன்றி!

    இப்போதெல்லாம் தும்முவது கூட அநாகரிகமாக அல்லவாப் பார்க்கப் படுகிறது!!

  4. அருட்பெருங்கோ Says:

    சத்தியா உங்கள் கருத்து எனக்கு சரியாகப் புரிய வில்லை…

    நான் புரிந்து கொண்டது இப்படி…

    துடிக்கிறது இதயம் காதலில் தவித்து..
    தடுக்கிறது தயக்கம் மறுத்து விடுவாளோ என்றஞ்சி…

    அன்புடன்,
    அருள்.

  5. சத்தியா Says:

    “துடிக்கிறது இதயம் காதலில் தவித்து..
    தடுக்கிறது தயக்கம் மறுத்து விடுவாளோ என்றஞ்சி…”

    ம்…ம்… இதுவேதான். நன்றி அருள்.

  6. அருட்பெருங்கோ Says:

    காதலின் கனம் அதிகமாகும்போது,
    தயக்கம் தானே உடைபடும்!

    அன்புடன்,
    அருள்.

Leave a Reply