ஹலோ யார் பேசறது? - 2 தப்பித்துச் சென்று சிறைபடுதல்
Feb 18

பால்யத்தின் காற்றுக் காலமொன்றில்
பட்டம் விட்டுக்கொண்டிருந்த மாலைப்பொழுதில்
ஆசையுடன் விளையாட அதுவும் வந்திருக்கிறது.

விபத்தில் அடிப்பட்ட கல்லூரி நண்பனை
மருத்துவமனை தூக்கிச்சென்ற பதற்றமான இரவில்
என்னுடன் சேர்ந்து அழுதிருக்கிறது.

அலுவலகத்துக்கு இரு சக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்த
ஒரு திங்கட்கிழமையின் பரபரப்பான காலையில்
என்வேகத்தில் என்னருகிலேயே பயணித்திருக்கிறது.

நெருங்கிய உறவின் மரணமொன்றில்
சுடுகாட்டிலிருந்து திரும்பும்வழியிலேயே
எங்களைக் குளிக்க வைத்திருக்கிறது.

அப்பொழுதெல்லாம் சபித்துவிட்டு
வீட்டின் அறைக்குள்
நாற்காலியில் சாய்ந்துகொண்டு,
சூடான தேநீரைப் பருகியபடி
ஜன்னல் வழியே வெட்கமின்றி ரசித்திருக்கிறேன்
அதன் பொழிவை!

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

22 Responses to “ஜன்னல் வழியே வெட்கமின்றி ரசித்திருக்கிறேன்”

  1. Anonymous Says:

    arumai arumai…
    kaadhal ulagatha vittu konjam veliya vandhu irukeenga pola…
    vaazhthukkal

  2. ram Says:

    dear arul,

    unga kavithai etha week vegadan la vanthuruku ,valthukal, kalkunga,

    ram

  3. சகாதேவன் Says:

    வெயில்தானா?
    நான் என்னமோ நினைச்சேன்.

    சகாதேவன்.

  4. கோபால் Says:

    மழைதானே அருட்பெருங்கோ?

  5. Veerasundar Says:

    ரொம்ப நல்லாருக்கு, உங்க மழை..

  6. கருணா Says:

    உங்கள் கவிதை “மழை” எங்களை குளிரச்செய்தது.

    ஆனந்த விகடனில் உங்கள் கவிதையை பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
    வாழ்த்துக்கள்….
    இது இன்னும் தொடரட்டும்….

    கருணா..

  7. ஜ்யோவ்ராம் சுந்தர் Says:

    எனக்குப் பிடிச்சிருக்கு இந்தக் கவிதை.

  8. கோபிநாத் Says:

    நல்லாயிருக்கு ராசா ;))

    வாழ்த்துக்கள் ;))

  9. கயல்விழி முத்துலெட்சுமி Says:

    குளிக்கவைத்த அப்படிங்கற வரை என்னது அதுன்னு ஒரு கேள் வி இருந்தது.. அப்பறம் தான் மழைன்னு தெரிந்தது.. நல்லாருக்கு.. :))

  10. அருட்பெருங்கோ Says:

    @அனானி,
    வாழ்த்துகளுக்கு நன்றிங்க அனானி!

    @ராம்,
    நன்றி ராம்!

  11. aruna Says:

    ஐயோ மழை!!!
    மிகச் சந்தோஷமாக நனைந்தேன் உங்க மழையில்!!
    அருமை!
    அன்புடன் அருணா

  12. அருட்பெருங்கோ Says:

    @கயல்விழி முத்துலெட்சுமி,
    நன்றிங்க்கா. வழக்கம்போல போரடிக்காம நல்லாருக்குனு சொல்ற மாதிரி எழுதிருக்கேன் போல :)

    @அருணா,
    நன்றிங்க அருணா மழை வாசிச்சதுக்கும் வாழ்த்துக்கும்!!!

  13. Dreamzz Says:

    mazhaiya pathiya azhagaana kavidhai. kalakunga :)

  14. இராம்/Raam Says:

    நல்லாயிருக்குய்யா…. :)

  15. அருட்பெருங்கோ Says:

    @ட்ரீம்ஸ்,
    நன்றிங்க ட்ரீம்ஸ்.

    @இராம்,
    நன்றி தல!!!

  16. Mani Says:

    தல, பின்னிடீங்க போங்க…………

    நன்றிகளுடன்

    ஈசுவரன். மணி

  17. அருட்பெருங்கோ Says:

    கருத்துக்கு நன்றிங்க மணி!!!

  18. Anonymous Says:

    Nandraga irunthathu tholare,
    um veetin jannalil ,,
    thangal partha malaiai,
    en veettu kanippori jannalil..
    indru naan parkail…
    ennavendru solvathu..

    mana magilchi adainthen,,
    illatha KADAVUL
    ungalul Irukkirar,

  19. அருட்பெருங்கோ Says:

    /Nandraga irunthathu tholare,
    um veetin jannalil ,,
    thangal partha malaiai,
    en veettu kanippori jannalil..
    indru naan parkail…
    ennavendru solvathu..

    mana magilchi adainthen,,/

    எனக்கும் மகிழ்ச்சி நண்பரே! நன்றிகள்.

    /illatha KADAVUL
    ungalul Irukkirar,/

    :-)))
    அது சரிங்க. ஏன் எல்லாரும் பெயர் சொல்லாமலே வந்து கருத்து சொல்றீங்க.

  20. பூபதி Says:

    மிகவும் அருமை..
    அருட்பெருங்கோ நீ
    கவிப்பெருங்கோ

    இவண்
    பூபதி

  21. பூபதி Says:

    வெட்கமின்றி ரசித்திருக்கிறேன் உன் கவிகளை…

  22. அருட்பெருங்கோ Says:

    நன்றிங்க பூபதி.
    வெட்கமின்றி ரசிச்சீங்களா? ரசிக்கிறதுக்கும் வெட்கத்துக்கும் என்ன சம்பந்தம்?

Leave a Reply