|
Nov
17
|
முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
மழை பொழியும் பொழுதெல்லாம்
மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!
*
நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.
*
மழை வரும் நேரம்
தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
மல்லிகைச் செடி நீ!
*
பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
மரக்கிளை மழை போல
இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
உனது தூக்க முத்தங்கள்!
*
இதழெங்கும் தீக்காயங்கள்.
மழைக்காலத்தில் நீ சுட்ட
அனல் முத்தங்களால்…
*
ஒரு முக்கிய வேண்டுகோள் : சென்னையிலுள்ள ஐ.டி துறை நண்பர்கள் அனைவரும் இன்று மாலை 4 மணிக்கு டைடல் பார்க் எதிரே நடக்கும் ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான டி.சர்ட் பிரச்சார நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு மணி நேர நிகழ்வுக்கு அனைவராலும் வர முடியுமென்றும் நம்புகிறேன். உணர்வுள்ள நண்பர்கள் அடுத்தடுத்து திட்டமிடப்பட்டிருக்கும் கண்டன நிகழ்விலும் தங்களை இணைத்துக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மடலிடுங்கள் : arutperungo@gmail.com
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
November 17th, 2008 at 10:28 am
Me the first?
November 17th, 2008 at 10:32 am
எல்லா கவிதைகளும் அருமை..
November 17th, 2008 at 10:33 am
//நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.//
இது மிக அழகு..
November 17th, 2008 at 10:38 am
//நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.//
அழகான கற்பனை
November 17th, 2008 at 10:38 am
//மழை வரும் நேரம்
தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
மல்லிகைச் செடி நீ!//
November 17th, 2008 at 11:24 am
//மழை வரும் நேரம்
தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
மல்லிகைச் செடி நீ!//
அடடடடடடடாஆஆஆஆஆ. சூப்பர்.
November 17th, 2008 at 4:55 pm
//பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
மரக்கிளை மழை போல
இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
உனது தூக்க முத்தங்கள்!//
அழகான கவிதை
November 17th, 2008 at 5:18 pm
//மழை வரும் நேரம்
தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
மல்லிகைச் செடி நீ!//
Arumai ….
November 17th, 2008 at 10:28 pm
//நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது//
எல்லோருக்கும் பிடிச்ச கவிதை தான் எனக்கும் பிடிச்சது
காதல் முரசு கோ is Back
November 18th, 2008 at 3:27 am
semaiya irukkuthu ellaa kavithaiyum… muthal kavithaithaan naan romba rasiththa ondru…
November 18th, 2008 at 4:59 am
//முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
மழை பொழியும் பொழுதெல்லாம்
மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!
நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.//
கவிதை அழகு..மழையைப் போல
November 18th, 2008 at 6:57 pm
வாங்க வாங்க!!!
சென்னை வந்து முதல் பதிவு அதுவும் காதல் மழையாய் பொழியுது என்ன் விசயம் கோ!!!!
கவிதகள் எல்லாம் மழைத்துளியாய் நனைத்து விட்டு செல்கிறது அனைத்தும் அருமை!!!!
தொடருங்கள் வாழ்த்துகள் கோ!!!
November 20th, 2008 at 5:12 pm
arumaiyana kavithagal… romba nalla irukku !!
November 20th, 2008 at 5:20 pm
கவிதைகள் மிக அருமை…
வாழ்த்துக்கள்….
Pradeep
November 21st, 2008 at 12:37 pm
நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது
kavithai varikal arumai
December 1st, 2008 at 6:24 pm
பெருமழையென…
அழகான கனவு…well done
December 1st, 2008 at 6:40 pm
எல்லாமே வழக்கம்போல அருமை.. முதல் கவிதை ரொம்பவே பிடிச்சது..
December 30th, 2008 at 3:49 pm
Kavithaikal arumai
May 26th, 2009 at 6:06 pm
Nee Alli Mutham Itta Kutti Mazhai Thaan
Kadal Serntha Pinnum
Alaiyena Vanthu
Un Kaal Nanaithu Konjugirathu
Thangalin Kavithai Varigal Anaithum ARUMAI
IVAN
NRRAMESH