இது காதல் பூக்கும் மாதம் - முதல் பகுதி
“உன்னை எனக்குப் பெயர் வைக்க சொன்னால்
என்ன பெயர் வைப்பாய்?” என்று கேட்பவளிடம்,
‘மதுமதி’ என்றேன்.
போதை தரும் நிலவுக்கு
வேறென்ன பெயர் வைக்க முடியும்?
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
உன் காதலின் முன்னே போட்டியிட முடியாமல்
உன்னிடம் சரணடைகின்றன
என் சின்னக் கோபங்கள்!
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.
“உன்னோடுப் பேச மாட்டேன்” என்று சொல்லி விட்டு
கண்களால் இத்தனைக் காவியம் வடிப்பதற்கு பதில்
நீ வாயைத் திறந்தே பேசி விடலாம்!
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.
நீ என்னோடு கா(ய்) விட்டுப்
பேசாமல் இருக்கும் பொழுதுகளில்
மேலும் கனிந்து விடுகிறது
என் காதல்.
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதென் னெஞ்சு.
என்னைப் பிரிந்து விட்டதற்காக நீயும்
உன்னைப் பிரிய விட்டதற்காக நானும்
வருத்தப் பட்டுக் கொண்டிருக்கையில்…
அமைதியாக நம்மை சேர்த்து வைக்கிறது
நம் காதல்!
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
பழிகாணேன் கண்ட இடத்து.
நீ விலகியதில்
என் காதலுக்கு உன் மேல் வருத்தம்!
மீண்டும் நீ வந்ததும்
அத்தனை வருத்தங்களும் அரைநொடியில் மாறிப் போயின…
அழகானக் காதலாய்!
காணேன் தவறல் லவை.
உன்னோடு
நான் போடும் சண்டையெல்லாம்
உன்னிடம் தோற்பதற்கே!
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
பிரிவிற்குப் பின்னான நம் முதல் சந்திப்பில்
எந்தக் காரணமும் சொல்லாமல்
என் மார்பில் முகம் புதைத்து
நீ வடித்தக் கண்ணீரில்
மேலும் சுத்தமாகிறது என் காதல்!
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.
இப்படியெல்லாம் இறுக்கிப் பிடிக்காதே
என் காதல் மிக மிக மென்மையானது
உன்னைப் போல!
செவ்வி தலைப்படு வார்.
பார்வையில் கோபத்தீ மூட்டுகிறாள்.
மன்னிப்பு கேட்க நெருங்கினால்..
கட்டியணைத்துக் காதல் தீ மூட்டுகிறாள்!
என்னினும் தான்விதுப் புற்று.
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
March 7th, 2007 at 1:58 am
Unmaya epdi evlo thathroobama ezhuthringa….. great…. Azhgana kuraluku azhagana Vilakam….
March 7th, 2007 at 2:01 am
Ithai vida supera kuraluku kavithai….. Yosika thonala… Romba nalla iruku…
March 7th, 2007 at 4:09 am
வாங்க சுபா,
/Unmaya epdi evlo thathroobama ezhuthringa….. great…. Azhgana kuraluku azhagana Vilakam…. :)/
உண்மையா? அப்படின்னு யார் சொன்னது? பிரேம் சொல்றத எல்லாம் நம்பாதீங்க :-)))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க…
March 7th, 2007 at 4:17 am
/Ithai vida supera kuraluku kavithai….. Yosika thonala… Romba nalla iruku…/
என்னங்க நானே குறளக் காப்பியடிச்சுட்டு இருக்கேன்…சரி சரி கவிஞர்கள் காதுல விழுந்தா சிரிக்கப் போறாங்க…சத்தம் போடாதீங்க…. :-)))
March 7th, 2007 at 2:11 pm
அன்பு அருள்….காதல் பூக்கும் மாதம் இன்னும் வருமா!!!
தொடருங்கள்…
\\இப்படியெல்லாம் இறுக்கிப் பிடிக்காதே
என் காதல் மிக மிக மென்மையானது
உன்னைப் போல!\\
அட..அட..பின்னிட்டீங்க..
March 7th, 2007 at 9:04 pm
உங்கள் கவிதையை இப்போது ஒரு நிமிடத்துக்கு முன்பு ஒலி FM-இல் கேட்டேன்! மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியில்… வாழ்த்துக்கள்!
அன்புடன் குழுமத்திலிருந்து 3 பேர் பங்கேற்கின்றனர்:
(பதிவர்) நா.கண்ணன்
(பதிவர்) ரசிகவ் ஞானியார்
கவிஞர் புகாரி
http://www.olifm.com/liveradio.php
மறு ஒலிபரப்பு நேரம் குறித்த தகவல் வேண்டுமானால் தெரிவிக்கவும்.
March 7th, 2007 at 11:10 pm
//அன்பு அருள்….காதல் பூக்கும் மாதம் இன்னும் வருமா!!!
தொடருங்கள்…//
இன்னும் ஒரு 4 அதிகாரங்கள் மிச்சம் இருக்கின்றன…அவற்றையும் முடிக்க வேண்டுமில்லையா?
\\இப்படியெல்லாம் இறுக்கிப் பிடிக்காதே
என் காதல் மிக மிக மென்மையானது
உன்னைப் போல!\\
அட..அட..பின்னிட்டீங்க..//
நன்றிங்க :-)))
March 7th, 2007 at 11:21 pm
//உங்கள் கவிதையை இப்போது ஒரு நிமிடத்துக்கு முன்பு ஒலி FM-இல் கேட்டேன்! மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியில்… வாழ்த்துக்கள்! :-)//
… ஆனால் கவிதையைக் கேட்டு விட்டு நீங்கள் வாழ்த்துவது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது :)))
நன்றிங்க சேதுக்கரசி!!! இந்திய நேரப்படி காலை 7:30 மணிக்கு என்றதால் என்னால் கேட்க இயலவில்லை
//அன்புடன் குழுமத்திலிருந்து 3 பேர் பங்கேற்கின்றனர்:
(பதிவர்) நா.கண்ணன்
(பதிவர்) ரசிகவ் ஞானியார்
கவிஞர் புகாரி //
அன்புடன் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்…
/http://www.olifm.com/liveradio.php
மறு ஒலிபரப்பு நேரம் குறித்த தகவல் வேண்டுமானால் தெரிவிக்கவும்./
சொல்லுங்க… மாலையிலாவது கேட்க முடியும் என்று நினைக்கிறேன்…
March 8th, 2007 at 3:39 am
//Deekshanya has left a new comment on your post “இது காதல் பூக்கும் மாதம் - 200″:
கையக் கொடுங்க, brilliant words!
my choice:
//பிரிவிற்குப் பின்னான நம் முதல் சந்திப்பில்
எந்தக் காரணமும் சொல்லாமல்
என் மார்பில் முகம் புதைத்து
நீ வடித்தக் கண்ணீரில்
மேலும் சுத்தமாகிறது என் காதல்!//
&
//என்னைப் பிரிந்து விட்டதற்காக நீயும்
உன்னைப் பிரிய விட்டதற்காக நானும்
வருத்தப் பட்டுக் கொண்டிருக்கையில்…
அமைதியாக நம்மை சேர்த்து வைக்கிறது
நம் காதல்!//
நன்றிங்க தீக்ஷண்யா…
கருத்தை வள்ளுவனிடமும், சொல்லைத் தமிழிடமும் கடன் வாங்கிக் கொள்கிறேன்!
March 9th, 2007 at 11:29 pm
//சொல்லுங்க… மாலையிலாவது கேட்க முடியும் என்று நினைக்கிறேன்//
2 நாளைக்கப்புறம் இன்னிக்கு தான் வரேன்
ஆனா ஒலி FM பொதுவா ஒரு 6 முறை ஒலிபரப்புவாங்க 24 மணிநேரத்தில். அந்த நேரங்களின் பட்டியலை எனக்குக் கொடுத்திருந்தாங்க.
March 11th, 2007 at 12:45 am
Kuraluku azhaga vilakkathoda Ezhuthurigna… Atha than apdi sonnen…Antha anony naane..! yaarum sirika mattanga.. Santhosha paduvanga…
November 7th, 2007 at 11:57 pm
kavithaikalum … mokkaihalum mattum endre ninaithen… kuralukum kuda kavithaikal… arumai miha aurmai… menmelum ungal ezhuthu pani thodara manamaardha vazzhthukal arul…
hats off!!!
November 12th, 2007 at 4:01 am
/Kuraluku azhaga vilakkathoda Ezhuthurigna… Atha than apdi sonnen…Antha anony naane..! yaarum sirika mattanga.. Santhosha paduvanga…/
இல்லீங்க Mrs. பிரேம்…
விளக்கமெல்லாம் கலைஞரோடது…
கிறுக்கல் மட்டும் தான் என்னோடது
( நீங்க மார்ச்சுல போட்ட கமெண்டுக்கு நவம்பர்ல வந்து பதில் சொல்லிருக்கேன்..
)
November 12th, 2007 at 4:03 am
/kavithaikalum … mokkaihalum mattum endre ninaithen… kuralukum kuda kavithaikal… arumai miha aurmai… menmelum ungal ezhuthu pani thodara manamaardha vazzhthukal arul…
hats off!!!/
கவிதைகள்னு நெனச்சு நான் எழுதறதே மொக்கைனுதான் நண்பர்கள் கலாய்க்கறாங்க
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் மரகதவள்ளி!!!
September 2nd, 2008 at 4:49 pm
அட்ரா சக்க.. அட்ரா சக்க..
October 23rd, 2008 at 6:11 pm
Arumai arumai
Vzhga nin kadhal
vzhga nin kottram……………..