என்னப் பார்வையடி அது? இதயத்தின் எடை 50300 கிராம்!
Aug 10

என் ஈர விழிப் பார்வை
உன்னை அசைப்பது கூட இல்லை!
உன் ஓர விழிப் பார்வையோ
என்னை ஆட்டி வைக்கிறது!
அப்படிப் பார்ப்பதற்கு எனக்கும் சொல்லிக்கொடேன்!

~

அதெப்படி உன்னால் மட்டும்
ஒரே சிரிப்பால்
என்னைக் கொல்லவும் முடிகிறது,
என் காதலை வளர்க்கவும் முடிகிறது?

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

15 Responses to “அதெப்படி உன்னால் மட்டும்?”

  1. Indrajith Says:

    என்னமோங்க… கவித நல்ல இருக்கோ இல்லயோ… என் பிகர் போட்டோவப்போட்டு ஒப்பேத்திட்டீங்க… என் பிகருக்கு ஒரு பெரிய நன்றிய போட்டுட்டு.. வுடு ஜூட்….!!

  2. ப்ரியன் Says:

    /*அதெப்படி உன்னால் மட்டும்
    ஒரே சிரிப்பால்
    என்னைக் கொல்லவும் முடிகிறது,
    என் காதலை வளர்க்கவும் முடிகிறது?*/

    இது நல்லா இருக்கு அருள்…ஒரு 5 கவிதைகளவது இருக்கும் னு ஓடியாந்தேன் ரெண்ட்டே ரெண்டு போட்டு ஏமாத்திட்டியே மக்கா

  3. Naveen Prakash Says:

    ஓரவிழிப்பார்வை ஜாக்கிரதை அருள் !!

    அதுவே கொல்லும்
    அதுவே வளர்க்கும் :))

    நன்று அருள் !

    ஜெனிலியா விசிரியா நீங்கள்??:))

  4. தேவ் | Dev Says:

    என்ன் அருள்… என்ன சேதி.. ரெண்டு பதிவா ஒரே படம்… ம்ம்ம் நடத்துங்க.

  5. Anitha Pavankumar Says:

    nice one

  6. சத்தியா Says:

    “என் ஈர விழிப் பார்வை
    உன்னை அசைப்பது கூட இல்லை!
    உன் ஓர விழிப் பார்வையோ
    என்னை ஆட்டி வைக்கிறது!
    அப்படிப் பார்ப்பதற்கு எனக்கும் சொல்லிக்கொடேன்!”…

    சீச்சீ… ஓரவிழிப் பார்வை உங்களுக் கெல்லாம் நல்லாவே இருக்காது அருள். அது பெண்களுக்கு மட்டுமே நல்லா இருக்கும்.(பகிடிக்கு)

    நல்ல கவிதை. வாழ்த்துக்கள் அருள்!

  7. அருட்பெருங்கோ Says:

    /என்னமோங்க… கவித நல்ல இருக்கோ இல்லயோ… என் பிகர் போட்டோவப்போட்டு ஒப்பேத்திட்டீங்க… என் பிகருக்கு ஒரு பெரிய நன்றிய போட்டுட்டு.. வுடு ஜூட்….!! /

    உங்கப் பாராட்டை அப்படியே அம்மணிக்கிட்ட சொல்லிட்றேன்…

    இனிமேல் கவிதைக்கு எந்தப் படமும் போடப் போவதில்லை!!! :))

  8. அருட்பெருங்கோ Says:

    /இது நல்லா இருக்கு அருள்…ஒரு 5 கவிதைகளவது இருக்கும் னு ஓடியாந்தேன் ரெண்ட்டே ரெண்டு போட்டு ஏமாத்திட்டியே மக்கா /

    அப்படியா ப்ரியன்??

    இனி ஐந்து ஐந்தாகவே போட்டு விடுகிறேன்..

    பாராட்டுக்கு நன்றிங்க…

  9. சுதர்சன்.கோபால் Says:

    //அதெப்படி உன்னால் மட்டும்
    ஒரே சிரிப்பால்
    என்னைக் கொல்லவும் முடிகிறது,
    என் காதலை வளர்க்கவும் முடிகிறது?//

    ஹூம்…

    ந..ட..க்..க…ட்…டு….ம்….

  10. அருட்பெருங்கோ Says:

    நவீன்,

    /ஓரவிழிப்பார்வை ஜாக்கிரதை அருள் !!

    அதுவே கொல்லும்
    அதுவே வளர்க்கும் :)) /

    அனுபவசாலிகள் சொன்னால் கேட்டுக்கொள்ள வேண்டியதுதான் ;))

    /நன்று அருள் !/
    நன்றி நவீன்!!

    /ஜெனிலியா விசிரியா நீங்கள்??:))/

    ஜெனிலியாதான் எனக்கு விசிறின்னு சொன்னா நம்பவாப் போறீங்க??? ;)))

  11. yal_ahathian Says:

    arul- nalla -varikal-
    ora- kan- parvaigul- impoddu -samasaram- irukerathu -enru- inruthan -nanum -terinthu -konden -
    thudarunkal- unkal -kavithakali- athuvarai- yal_ahathian

  12. கார்த்திக் பிரபு Says:

    nalla iruku thalaivaa thodarndhu kalakkungal

  13. அருட்பெருங்கோ Says:

    தேவ்,

    /என்ன் அருள்… என்ன சேதி.. ரெண்டு பதிவா ஒரே படம்… ம்ம்ம் நடத்துங்க. /

    அட எனக்கு உலாமடல் ல வந்த படத்ததாங்க போட்ட்டிருக்கேன்..

    வேற ஒன்னும் சிறப்புக் காரணமெல்லாம் கிடையாது ;))

  14. அருட்பெருங்கோ Says:

    yal ahathian,

    /arul- nalla -varikal-
    ora- kan- parvaigul- impoddu -samasaram- irukerathu -enru- inruthan -nanum -terinthu -konden -
    thudarunkal- unkal -kavithakali- athuvarai- yal_ahathian/

    நன்றிங்க… தொடர்ந்து வாசிப்பதற்கும் பாராட்டுவதற்கும்…

  15. அருட்பெருங்கோ Says:

    கார்த்திக்,

    /nalla iruku thalaivaa thodarndhu kalakkungal /

    நன்றி நண்பா… தொடர்ந்து பதிந்து கொண்டுதான் இருக்கிறேன்…

Leave a Reply