அவர்வயின் விதும்பல் - காதல் பூக்கும் மாதம் - 180 குறிப்பறிவுறுத்தல் - காதல் பூக்கும் மாதம் - 190
Feb 26

நீ காதல் பறவை.
எனக்குள்
காதல் பற்ற வை!

*

அழகால் கொத்தும்
அதிசயப் பறவை நீ!

*

இந்த உதடுகள் மோசம்.
முத்தம்
தருகிறதா? பெறுகிறதா?

*

உன்னுதடு தொடும் என்னுதடு.
தடுப்பதென்றால்
உதட்டால் தடு!

*

காதல் தேவதை.
காதலித்தே வதை!

*

முத்தங்களால் நிறைகின்றன.
காதல் மடலும், காது மடலும்.

*

நான்
உன் காதல் கண்ட
கனவன் - கணவன்!

*

நீ
என் காதல் பாடத்தின்
மாணவி - மனைவி!

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

31 Responses to “ஒரு நொடிக் கவிதைகள் - 3”

  1. Anonymous Says:

    கொஞ்சும் தமிழில் காதல் சொட்டுகின்றது…

  2. பிரேம்குமார் Says:

    தோழா, ஒரு நொடியில் நெஞ்சில் பதிந்துபோயின இக்கவிதைகள்.

    அனைத்துமே அருமை.. முக்கியமாக முத்தக்கவிதைகள்

  3. Gunasekar Kolandasamy Says:

    hi Arut..
    kadalae vathithalthan..(sugama sumaya..?)
    enakaga adutha pathivukal pirivu thuyar patri eluthuveerkala…
    anbudan …Guna

  4. enbee Says:

    Classic

  5. தேவ் | Dev Says:

    அருட் மூணாம் பாகம் கொஞ்சம் சுதி கம்மி தான் :-)

  6. Bremavathi Says:

    hello sir,

    All your poems are simply supper

  7. மாசிலா Says:

    ஹூம்!
    ரொம்பவும் முத்தி போச்சுப்ல.
    இது எங்க போய் முடியப் போவுதோ?
    ம்!ம்!
    நடத்துங்க!

    காதல் தோல்வியோ?

  8. padma Says:

    aha aha arumai nambare .blog ulagil muthal kaladi pathitthu irukiren. thenai chottum vaarthaigal.theiveega kathalin iyalbu.ulagame azhinthalum minjuvathu kaathal .athai rasithu rasithu varainthurukeerregal.i shall read all.en valai ezhuthaiyum satru parkavum .poovodu serum narum sirithu manam peratum
    http://padmareaches.blogspot.com/

  9. அருட்பெருங்கோ Says:

    வாங்க பிரேம்,

    / தோழா, ஒரு நொடியில் நெஞ்சில் பதிந்துபோயின இக்கவிதைகள்.

    அனைத்துமே அருமை.. முக்கியமாக முத்தக்கவிதைகள்/

    நன்றி நண்பா… முத்தமும் காதலைப் போலதான் கொடுத்தாலும் இன்பம் பெற்றாலும் இன்பம் ;-)))

  10. Deekshanya Says:

    சொல்ல வார்த்தை இல்லை. வாழ்த்துக்கள், அருமையான சிந்தனைகள், மீண்டும் காதல் மேல் நீர் கொண்டுள்ள காதல் தெரிகிறது! காதல் அழகானது!

  11. அருட்பெருங்கோ Says:

    வாங்க குணா,

    / hi Arut..
    kadalae vathithalthan..(sugama sumaya..?)
    enakaga adutha pathivukal pirivu thuyar patri eluthuveerkala…
    anbudan …Guna/

    காதல் வதைத்தல் தான்… வதைபடாமல் வாழ்க்கை எப்படி இனிக்கும்?

    பிரிவுத்துயரில் ஏற்கனவே ஏராளம் இருக்கே… இன்னொரு சோகக்கவிதை வேண்டுமா? ம்ம்ம்…

    http://blog.arutperungo.com/2007/02/7.html
    http://blog.arutperungo.com/2007/02/80.html
    http://blog.arutperungo.com/2007/02/90.html
    http://blog.arutperungo.com/2007/02/100.html
    http://blog.arutperungo.com/2007/02/120.html
    http://blog.arutperungo.com/2007/01/543210.html
    http://blog.arutperungo.com/2006/12/blog-post_22.html
    http://blog.arutperungo.com/2006/12/blog-post.html
    உங்களுக்கு வேணும்ங்கற அளவுக்கு இதுல சோகம் இருக்கு !!!

  12. அருட்பெருங்கோ Says:

    வாங்க என்பி (பேர் சரியா?)

    / Classic/

    :-))) நன்றி!!!

  13. அருட்பெருங்கோ Says:

    வாங்க தல,

    / அருட் மூணாம் பாகம் கொஞ்சம் சுதி கம்மி தான் :-)/

    எந்த சுதிய சொல்றீங்க?;-)

    என்ன பண்றது ஒரு நாள் போல மறு நாள் இருப்பதில்லையே :-(

  14. அருட்பெருங்கோ Says:

    வாங்க பிரேமாவதி,

    / hello sir,

    All your poems are simply supper /

    சாரா? நான் ரொம்ப சின்னப் பையன்ங்க!!!

    வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிகள்!!!

  15. அருட்பெருங்கோ Says:

    வாங்க மாசிலா

    / ஹூம்!
    ரொம்பவும் முத்தி போச்சுப்ல.
    இது எங்க போய் முடியப் போவுதோ?
    ம்!ம்!
    நடத்துங்க!/

    :-)))

    /காதல் தோல்வியோ? /

    என்னங்க எப்பவும் சோகமானக் கவிதைல தான் இந்தக் கேள்விய கேட்பாங்க… இதுல சோகமா எதுவும் நான் எழுதலையே… இதுல கேட்டுட்டீங்க?

  16. அருட்பெருங்கோ Says:

    வாங்க பத்மா,

    /aha aha arumai nambare .blog ulagil muthal kaladi pathitthu irukiren. thenai chottum vaarthaigal.theiveega kathalin iyalbu.ulagame azhinthalum minjuvathu kaathal .athai rasithu rasithu varainthurukeerregal.i shall read all./

    நன்றி !!! காதல்ல தெய்வீகம், புனிதம் எல்லாம் இருக்கிற மாதிரி எனக்கு தோன்றவில்லை… அதை மிக மிக இயல்பானதாக இருக்கும் என்பதே என் நம்பிக்கை!!

    /en valai ezhuthaiyum satru parkavum .poovodu serum narum sirithu manam peratum
    http://padmareaches.blogspot.com//

    என்னங்க இங்கிலீசுல எழுதியிருக்கீங்க..
    எனக்கு தமிழே தகிடுதத்தம்…சீக்கிரம் தமிழுக்கு மாறுங்க… பூ , நார் என்பதெல்லாம் ஓவரா இருக்கு :-)))

  17. அருட்பெருங்கோ Says:

    வாங்க தீக்ஷன்யா,

    / சொல்ல வார்த்தை இல்லை. வாழ்த்துக்கள், அருமையான சிந்தனைகள், மீண்டும் காதல் மேல் நீர் கொண்டுள்ள காதல் தெரிகிறது! காதல் அழகானது!/

    வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!

    யார்தான் காதலைக் காதலிக்காமல் இருக்க முடியும்? ஆனால் காதல் சிலரை தான் காதலிக்கிறது!!!

    காதல் அழகானது தான் முட்கள் நிறைந்த ரோஜாவைப் போல!!!

  18. ஜி Says:

    ஐயா அருட்பெருங்கோ…

    உங்களுக்கு எத்தனக் காதலி சொல்லுங்க???

    இப்படிப் போட்டுத் தாக்குறீங்களே…

    இதெல்லாத்தையும் படிக்கும்போது நானும் ஏதாவது பள்ளத்தாக்குல விழுந்திடுவேனோன்னு பயமா இருக்குதுயா…

  19. கோபிநாத் Says:

    அருள்..

    உங்கள் காதல் சூத்திரங்கள் எல்லாம் அருமை…

  20. சினேகிதி Says:

    aha..nalla iruku!

  21. கோவி.கண்ணன் Says:

    நொடிக் கவிதைகள் அருமை அருமை !

    “அவள் இமை அசைந்ததும்
    என் எழுதுகோல் உயிர்பெற்றது !”

  22. மாசிலா Says:

    //”அவள் இமை அசைந்ததும்
    என் எழுதுகோல் உயிர்பெற்றது !”//

    இதுல ஏதோ பொடி வெச்சி இருக்கிற மாதிரி தெரியுதே!!!
    :-)

  23. கோவி.கண்ணன் Says:

    // மாசிலா said…
    //”அவள் இமை அசைந்ததும்
    என் எழுதுகோல் உயிர்பெற்றது !”//

    இதுல ஏதோ பொடி வெச்சி இருக்கிற மாதிரி தெரியுதே!!!
    :-)
    //

    பொடி இல்லிங்க,

    அவள் விழி அசைவில் எழு புவி அசையும் வைரமுத்துவின் வரி போன்றுதான் இதுவும் !
    :)

  24. மாசிலா Says:

    அது இல்லீங்க அருட்ஸ்

    எழுது கோளுங்களுக்கு இப்படி இலவசமா விளம்பரம் தர்ரீங்களே அதை சொல்ல வந்தேன்!
    :-)

  25. அருட்பெருங்கோ Says:

    ஜி,

    / ஐயா அருட்பெருங்கோ…

    உங்களுக்கு எத்தனக் காதலி சொல்லுங்க???

    இப்படிப் போட்டுத் தாக்குறீங்களே…/

    ஆகா ஒன்னுக் கிடைக்கிறதுக்கே உன் பாடு என்பாடு னு இருக்கு… இதுல எத்தனக் காதலினு நக்கல் வேறையா? நல்லாருங்கப்பா…

    /இதெல்லாத்தையும் படிக்கும்போது நானும் ஏதாவது பள்ளத்தாக்குல விழுந்திடுவேனோன்னு பயமா இருக்குதுயா…/

    ஹி ஹி பயமா இருக்கா ஆசையா இருக்கா ;-)

    கோபி,

    / அருள்..

    உங்கள் காதல் சூத்திரங்கள் எல்லாம் அருமை…/

    காதலில் எல்லாமே அருமைதான் :-)

    சிநேகிதி,

    / aha..nalla iruku!/

    ரொம்ப நன்றிங்க!!!

  26. அருட்பெருங்கோ Says:

    வாங்க கோவி,

    / நொடிக் கவிதைகள் அருமை அருமை !

    “அவள் இமை அசைந்ததும்
    என் எழுதுகோல் உயிர்பெற்றது !”/

    நன்றி நன்றி!!!

    இமை அசைத்ததற்கு கூட கவிதையா? நீங்க பெரிய கவிஞர் தான்!!!

    வாங்க மாசிலா,

    / //”அவள் இமை அசைந்ததும்
    என் எழுதுகோல் உயிர்பெற்றது !”//

    இதுல ஏதோ பொடி வெச்சி இருக்கிற மாதிரி தெரியுதே!!!
    :-)/

    பொடி வச்சவர் கோவி!!! வெடி வைக்காம பொடி மட்டும் வச்சாரே… அதுவரைக்கும் சந்தோசம்!!!

  27. அருட்பெருங்கோ Says:

    @ கோவி,

    /பொடி இல்லிங்க,

    அவள் விழி அசைவில் எழு புவி அசையும் வைரமுத்துவின் வரி போன்றுதான் இதுவும் !
    :)/

    அதனாலதான் நானும் சொன்னேன் நீங்க பெரிய கவிஞர்னு!!! :-)

    @ மாசிலா,

    /அது இல்லீங்க அருட்ஸ்

    எழுது கோளுங்களுக்கு இப்படி இலவசமா விளம்பரம் தர்ரீங்களே அதை சொல்ல வந்தேன்!
    :-)/

    ஹிஹிஹி சொன்னது கோவி நான் இல்ல!!!
    இலவசமா விளம்பரம் தர்றார்னா அது முக்கியமானவங்களுக்குப் பிடிச்சதா இருக்கும் ;-)

  28. நவீன் ப்ரகாஷ் Says:

    நொடிக்கவிதைகள் அனைத்துமே அருமை அருள் :))))

  29. அருட்பெருங்கோ Says:

    //நொடிக்கவிதைகள் அனைத்துமே அருமை அருள் :))))//

    அத்தனையயும் வாசித்து கருத்து சொன்னதற்கு நன்றி நவீன்!!!

  30. Anonymous Says:

    Hi fren, i dont think so ur kavithai’s r very super.itz very simple yar…keep it up.ok.dont get angry….

  31. அருட்பெருங்கோ Says:

    / Hi fren, i dont think so ur kavithai’s r very super.itz very simple yar…keep it up.ok.dont get angry…./

    இத கவிதைனு சொன்னதே சந்தோசங்க :))) நன்றி!!!

Leave a Reply