ஒரு காதல் பயணம் - 8 இவர்களுக்காகவே
Feb 19
கண் நடிக்கிறது.
ஆனால் காதல்
கண்ணடிக்கிறது.
~
உன் மார்பில்
தாவணி.
என் மார்பில்
தாவ நீ.
~
இயல்பாய் சிரித்தாய்.
என் முத்தம் உறங்க
இதழ் பாய் விரித்தாய்.
~
உன்னைப்பார்த்து
‘ஓ’ வென வியக்கிறது
ஓவியம்.
~
உன் கண் பார்த்து
ஆடிப்போனது
கண்ணாடி.
~
என்னில் விழுந்தாய்.
எனக்கே விழுதாய்.
~
முத்தம் இடு.
பின்
முத்தம் எடு.
~
நீ கவிதை.
தலைப்பு?
தலை பூ!
~
காதல்
உனக்கு வலி.
எனக்கு வலிமை.
~
காதல்
என்னில் ஊஞ்சலாடுகிறது.
உன்னில் ஊசலாடுகிறது.

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

22 Responses to “ஒரு நொடிக் கவிதைகள் - 2”

  1. பிரேம்குமார் Says:

    மறுபடி ஆரம்பம் ஆகிவிட்டது காதல் விளையாட்டு.

    //இயல்பாய் சிரித்தாய்.
    என் முத்தம் உறங்க‌
    இதழ்பாய் விரித்தாய்

    கண் நடிக்கிறது
    ஆனால் காதல்
    கண்ணடிக்கிறது//

    அருமை அருமை….

  2. கோபிநாத் Says:

    ஆஹா..அருமை கவிஞரே…அருமை…

    எல்லா நொடிகளும் ரொம்ப நல்லயிருக்கு…

  3. அருட்பெருங்கோ Says:

    வாங்க பிரேம்,

    / மறுபடி ஆரம்பம் ஆகிவிட்டது காதல் விளையாட்டு./

    ஹி ஹி சும்மா விளையாட்டுக்கு… :-)

    //இயல்பாய் சிரித்தாய்.
    என் முத்தம் உறங்க‌
    இதழ்பாய் விரித்தாய்

    கண் நடிக்கிறது
    ஆனால் காதல்
    கண்ணடிக்கிறது//

    /அருமை அருமை…./

    நன்றி நன்றி!!!

  4. நான் Says:

    அருட்பெருங்கோ,

    எல்லாமே அருமை கவிஞரே! இன்னும் தொடருங்கள்.

  5. .:: மை ஃபிரண்ட் ::. Says:

    எல்லாமே நல்லா இருக்கு!

    இதுல ரொம்ப பிடிச்சது:

    கண் நடிக்கிறது
    ஆனால் காதல்
    கண்ணடிக்கிறது

  6. அருட்பெருங்கோ Says:

    வாங்க கோபி,

    / ஆஹா..அருமை கவிஞரே…அருமை…

    எல்லா நொடிகளும் ரொம்ப நல்லயிருக்கு…/

    நன்றி கோபி,,, நொடி நொடி யா சேர்த்தாதானே “மணி” கிடைக்கும் :-)

  7. அருட்பெருங்கோ Says:

    வாங்க நான் (நான் சொல்லும்போது நீங்க னு சொல்லிடட்டுமா? ;-) )

    / அருட்பெருங்கோ,

    எல்லாமே அருமை கவிஞரே! இன்னும் தொடருங்கள்./

    கண்டிப்பாகத் தொடர முயல்கிறேன்….

    வருகைக்கு நன்றிங்க!!!

  8. அருட்பெருங்கோ Says:

    வாங்க மை ஃப்ரெண்ட்,

    / எல்லாமே நல்லா இருக்கு!

    இதுல ரொம்ப பிடிச்சது:

    கண் நடிக்கிறது
    ஆனால் காதல்
    கண்ணடிக்கிறது/

    நன்றி நன்றி… இன்னும் இருக்கு… மெதுவாக வரும்!!!

  9. ஜி Says:

    அருமை நண்பரே….

    அசால்ட்டா காதல் கவிதைகளை அள்ளித் தெளிக்கிறீங்களே எப்படி?

    உங்களுக்கு காதல் கவிதை மட்டும்தான் வருமா??? ;)))))

    காதலல்லாதவர்களுக்காக ஒரு கவிதைய எழுதுங்க அப்பு…

  10. நான் Says:

    //வாங்க நான் (நான் சொல்லும்போது நீங்க னு சொல்லிடட்டுமா? ;-) )//

    கவிஞருக்கே உண்டான குசும்பு :-)…. நீங்க எப்பிடி வேணும்னாலும் கூப்பிடலாம்ணா

  11. Anonymous Says:

    தல உங்கல பட்றி வந்ருக்கு http://www.dinamalar.com பார்த்தீங்கல

    SURESH

  12. கார்த்திக் பிரபு Says:

    என்னயா ஆச்சு உமக்கு சும்மா எழுதிக்கிட்டே போறீரு ..இதெல்லாம் ஓவ்ரு ஆமா

  13. அருட்பெருங்கோ Says:

    /கவிஞருக்கே உண்டான குசும்பு :-)…. நீங்க எப்பிடி வேணும்னாலும் கூப்பிடலாம்ணா/

    சரிங்க நீங்க என்கிற நான்!!!

  14. அருட்பெருங்கோ Says:

    / தல உங்கல பட்றி வந்ருக்கு http://www.dinamalar.com பார்த்தீங்கல

    SURESH/

    நன்றி சுரேஷ்… காலையில் அலுவலகம் வந்ததும் உங்கள் மூலமாக ஓர் இனிய செய்தி!!!
    மகிழ்ச்சியை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்!!!

  15. துர்கா|thurgah Says:

    ஒரு நொடிக் கவிதையாக இருந்தாலும் அழகு கவிதை.

  16. G.Ragavan Says:

    // காதல்
    என்னில் ஊஞ்சலாடுகிறது
    உன்னில் ஊசலாடுகிறது //

    ஊஞ்சலும் ஆடுவதுதான்
    ஊசலும் ஆடுவதுதான்
    ஊஞ்சலோ முன்னும் பின்னும்
    அழகிய காமத்தைப் போல
    ஊசல் பக்க வாட்டில்
    பயந்து விழிக்கும் உன் கண்களைப் போல

  17. G.Ragavan Says:

    http://blog.arutperungo.com/2007/02/2_20.html

    // காதல்
    என்னில் ஊஞ்சலாடுகிறது
    உன்னில் ஊசலாடுகிறது //

    ஊஞ்சலும் ஆடுவதுதான்
    ஊசலும் ஆடுவதுதான்
    ஊஞ்சலோ முன்னும் பின்னும்
    அழகிய காமத்தைப் போல
    ஊசல் பக்க வாட்டில்
    பயந்து விழிக்கும் உன் கண்களைப் போல

  18. அருட்பெருங்கோ Says:

    /ஒரு நொடிக் கவிதையாக இருந்தாலும் அழகு கவிதை. /

    நன்றி துர்கா!!!

  19. அருட்பெருங்கோ Says:

    வாங்க ஜிரா,

    /ஊஞ்சலும் ஆடுவதுதான்
    ஊசலும் ஆடுவதுதான்
    ஊஞ்சலோ முன்னும் பின்னும்
    அழகிய காமத்தைப் போல/

    :-)))

    /ஊசல் பக்க வாட்டில்
    பயந்து விழிக்கும் உன் கண்களைப் போல/

    இதென்னது புதுக் கதையா இருக்கு?

  20. mani Says:

    arumi….arumi….

  21. Anonymous Says:

    super ooooo super….Sir…. I have visited ur blog through premkumar’s blog. By… Subha…

  22. அருட்பெருங்கோ Says:

    /super ooooo super….Sir…. I have visited ur blog through premkumar’s blog. By… Subha…/
    வாழ்த்துக்கு நன்றி சுபா!!!

Leave a Reply