Aug 09
உதடுகள்
கொடுத்துக்கொண்டே இருக்க
சோர்ந்து போகிறது
முத்தம்.
*
நீயிறங்கி குளிக்கும்போது,
நீர்த்தொட்டி - பூந்தொட்டி.
முடிக்கும்போது தேன்தொட்டி
*
பாறையில் முளைத்தது பூஞ்செடி.
மொட்டை மாடியில் நீ!
நம் சந்திப்பின் முற்றுப்புள்ளி,
நீ வைக்கும் முத்தப்புள்ளி!
*
நீ
ஓவியமாக்க வேண்டிய கவிதையா?
கவிதையாக்க வேண்டிய ஓவியமா?
*
வதைத்தே கொல்லும்
தேவதை நீ!
*
உனக்குள் இருக்கும் எனக்குள்
நீ எப்போது நுழைந்தாய்?
*
என் இரவு.
நீ கனவு.
என் பகல்.
நீ நினைவு.
*
எங்கு முத்தம் வாங்கினாலும்,
இதழ்வரிகளில் செலுத்த வேண்டும்…
இதழ் வரி.
*
உன் பார்வை,
கண்காட்சியா?
மலர்க்காட்சியா?
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
August 9th, 2007 at 9:18 pm
நொடிக்குள் பல ஆண்டுகளை புகுத்த உங்க கிட்டேதான் கத்துக்கனும்
August 9th, 2007 at 9:22 pm
இளா,
/ நொடிக்குள் பல ஆண்டுகளை புகுத்த உங்க கிட்டேதான் கத்துக்கனும் :)/
இந்த மாதிரி நீங்க ட்ரிபிள் மீனிங்ங் ல பேசினா நான் என்ன பண்றது?
August 9th, 2007 at 9:57 pm
அட்ரா அட்ரா அட்ரா
இந்த மாதிரியெல்லாம் எப்படி எழுதுறதுன்னு ஒரு ட்யூஷன் எடுப்பீங்களா காதல் முரசே?
August 9th, 2007 at 10:22 pm
/ அட்ரா அட்ரா அட்ரா
இந்த மாதிரியெல்லாம் எப்படி எழுதுறதுன்னு ஒரு ட்யூஷன் எடுப்பீங்களா காதல் முரசே?/
தல,
கமலினி கவிதை ட்யூசன் எடுக்கறாங்களாம்…
சனி, ஞாயிறு மாலை 4 - 5 … வர்றீங்களா?
August 9th, 2007 at 10:33 pm
எல்லாமும் சூப்பர் !!!
August 9th, 2007 at 11:44 pm
/ எல்லாமும் சூப்பர் !!!/
்நன்றிங்க கோவி
“எல்லாமே” கமலினியையும் சேர்த்தா?
August 10th, 2007 at 12:02 am
//இந்தப்பதிவுக்கு எத்தனை * கொடுக்க விரும்புகிறீர்கள்->//
கவிதைகளுக்கு 4..கமலினிக்காக +1
August 10th, 2007 at 12:08 am
/கவிதைகளுக்கு 4..கமலினிக்காக +1 ;)/
கப்பி, மாத்தி சொல்லாதப்பா
உன்னோட இன்ஸ்பிரேஷன் எனக்கு தெரியாதா?
August 10th, 2007 at 12:16 am
உங்கள வெளியே விட்டுட்டாங்களா? பாத்து ஐயா. மறுபடியும்….உள்ளே தள்ளிட போறாங்க!
//நீ குளிக்கும்போது …
… தேன் தொட்டி.// இது கொஞ்சம் அழுக்கா இருக்குதப்பா.
ஐயா, அருட்பெருங்கோ, இது மாதிரியெல்லாம் ஒசத்தியா தூக்கி வெச்சி எழுதியே அவங்களுக்கு ரொம்ப மண்டகணம் கொடுக்கறீங்க.
கொஞ்சம் அடக்கி வாசிங்கய்யா.
தங்கள இந்த அளவுக்கெல்லாம் லூசுத்தனமா இரசிக்கிற லூசுங்கல்லாம் இருக்குதான்னு தெரிஞ்சா, அப்புறம் சுத்தமா ஆம்பிள்ளைகள திரும்பி கூட பாக்க மாட்டாங்க. வேணாம்யா, விட்டுடுய்யா.
ஹி!ஹி! ச்சும்மா தமாஷுக்குதான் சொன்னேன்.
கவிதைகள் ஓரளவுக்கு பரவாயில்லை.
//உனக்குள் இருக்கும்
எனக்குள்
நீ எப்போது
நுழைந்தாய்?// மனதில் நின்றவை.
நன்றி.
August 10th, 2007 at 1:29 am
/ உங்கள வெளியே விட்டுட்டாங்களா? பாத்து ஐயா. மறுபடியும்….உள்ளே தள்ளிட போறாங்க!
;-)/
நான் எப்போ உள்ள போனேன்???
//நீ குளிக்கும்போது …
… தேன் தொட்டி.// இது கொஞ்சம் அழுக்கா இருக்குதப்பா. /
சரி அதுல மொத ரெண்டு வரியோட நிறுத்திடுவோம் :-)))
/ஐயா, அருட்பெருங்கோ, இது மாதிரியெல்லாம் ஒசத்தியா தூக்கி வெச்சி எழுதியே அவங்களுக்கு ரொம்ப மண்டகணம் கொடுக்கறீங்க.
கொஞ்சம் அடக்கி வாசிங்கய்யா./
அட விடுங்க பொண்ணுங்களுக்கு பொய் சொன்னா புடிக்குமாம்
/தங்கள இந்த அளவுக்கெல்லாம் லூசுத்தனமா இரசிக்கிற லூசுங்கல்லாம் இருக்குதான்னு தெரிஞ்சா, அப்புறம் சுத்தமா ஆம்பிள்ளைகள திரும்பி கூட பாக்க மாட்டாங்க. வேணாம்யா, விட்டுடுய்யா./
‘லாசாடா நீ?’ னு நேரடியாகவே கேட்டிருக்கலாம்
/ஹி!ஹி! ச்சும்மா தமாஷுக்குதான் சொன்னேன்./
ஹி ஹி சரிங்கண்ணே
/கவிதைகள் ஓரளவுக்கு பரவாயில்லை.
//உனக்குள் இருக்கும்
எனக்குள்
நீ எப்போது
நுழைந்தாய்?// மனதில் நின்றவை.
நன்றி./
நன்றிங்க மாசிலா… அடுத்தமுறை இன்னும் கொஞ்சம் நல்லா எழுதிட்றேன்!!!
August 10th, 2007 at 2:14 am
//நான் எப்போ உள்ள போனேன்??? :-?// நான் சொல்ல வந்தது ரூம்ல இருந்து எப்ப வெளியில வந்தீங்கனு. இது மாதிரி கவித எல்லாம் எழுதும்னா ரூம் போட்டுதானே யோசிப்பீங்க?
ஹி!ஹி!
//அட விடுங்க பொண்ணுங்களுக்கு பொய் சொன்னா புடிக்குமாம் ;-)//
ஏய் பொன்னுங்களா! நம்ம அருட்ஸ் இவளோ காலம் உட்டுன்னு வந்தது எல்லாம் வெறும் புருடாவாம். அவரே அத ஒத்துக்கினாரு.சாக்கிரதையா இருங்கம்மா!
;-D
//அடுத்தமுறை இன்னும் கொஞ்சம் நல்லா எழுதிட்றேன்!!!// எனக்கும் மட்டுந்தானுங்க சுமாரா இருக்குது. மத்தவங்களுக்கு ரொம்ப நல்லாவே பிடிச்சிடிருக்கு போல. உங்க பாணியிலேயே தொடர்ந்து எழுதுங்க ஐயா.
நன்றி.
August 10th, 2007 at 2:46 am
//பாறையில் முளைத்தது
பூஞ்செடி
மொட்டை மாடியில்
நீ//
சேற்றில் முளைத்த செந்தாமரையோ?
August 10th, 2007 at 3:00 am
சூப்பரு காதல்முரசு ஐயா…
August 10th, 2007 at 3:03 am
/ நான் சொல்ல வந்தது ரூம்ல இருந்து எப்ப வெளியில வந்தீங்கனு. இது மாதிரி கவித எல்லாம் எழுதும்னா ரூம் போட்டுதானே யோசிப்பீங்க?
ஹி!ஹி!
/
ரூமுக்குள்ள உட்காந்தா கவிதை எப்படி வரும் தல? வெளிய வந்து சில பல (இயற்கை) காட்சிகளப் பாத்தாதான கவிதை வரும்?
/ ஏய் பொன்னுங்களா! நம்ம அருட்ஸ் இவளோ காலம் உட்டுன்னு வந்தது எல்லாம் வெறும் புருடாவாம். அவரே அத ஒத்துக்கினாரு.சாக்கிரதையா இருங்கம்மா!
;-D /
அட அவங்களும் பொய் னு தெரிஞ்சேதாம்ப்பா ரசிப்பாங்க… என்ன நீங்க உலகம் தெரியாத ஆளா இருக்கீங்க
//அடுத்தமுறை இன்னும் கொஞ்சம் நல்லா எழுதிட்றேன்!!!// எனக்கும் மட்டுந்தானுங்க சுமாரா இருக்குது. மத்தவங்களுக்கு ரொம்ப நல்லாவே பிடிச்சிடிருக்கு போல. உங்க பாணியிலேயே தொடர்ந்து எழுதுங்க ஐயா.
நன்றி./
அப்படியே ஆகட்டும் பாஸ் :)))
August 10th, 2007 at 3:04 am
/ //பாறையில் முளைத்தது
பூஞ்செடி
மொட்டை மாடியில்
நீ//
சேற்றில் முளைத்த செந்தாமரையோ?/
இன்னைக்கு ஒரு ஃபார்ம்ல தான் இருக்கீங்க போல..
ஆமாங்க மாசிலா,
மொட்டை மாடியின்
தரையில் முளைத்த தாமரை?
August 10th, 2007 at 3:05 am
/ சூப்பரு காதல்முரசு ஐயா…/
நன்றிங்க ராயல் இராம் அவர்களே
August 10th, 2007 at 5:00 am
aarambamae aasathalungo !!!Rendume azhagana kavidhai dhan….he hehehehehe..kamalini yum searthu !!!
August 10th, 2007 at 5:07 am
கவிதை ப்ரியன்,
/ aarambamae aasathalungo !!!Rendume azhagana kavidhai dhan….he hehehehehe..kamalini yum searthu !!!/
கவிதைய பார்த்து பார்த்து படிச்சிருக்கீங்க
August 10th, 2007 at 2:41 pm
அருள்
கவிதையும் அருமை…
அப்புறம் யாருங்க அந்த பெண்ணு???
(இவுங்க தான் அவுங்களா?)
August 11th, 2007 at 6:37 am
arumai
August 11th, 2007 at 8:48 am
என்ன தலைவரே உங்க கவிதைக்கு முன்னே பாவம் கமலினி புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
அழகோடு(கமலினி) பேரழகையும்(அருளோட நொடிக்கவிதை) கொடுத்துட்டீங்க கலக்குங்க நானும் அப்பப்ப வந்து தலை கிட்ட தலய காட்டிக்கிறேன்.
அசராம அடிங்க ஆதரவா நாங்க இருக்கோம்ல
தோழமையுடன் மீறான் அன்வர்
August 12th, 2007 at 10:11 pm
்கோபி,
/ அருள்
கவிதையும் அருமை… /
நன்றிங்கோ…
/அப்புறம் யாருங்க அந்த பெண்ணு???
(இவுங்க தான் அவுங்களா?) ;-)/
அவங்களா??? எங்க பக்கத்து வீட்டு பொண்ணுங்க
நெனப்புதான் பொழப்ப கெடுக்குமாம்
August 12th, 2007 at 10:12 pm
/ arumai/
நன்றிங்க என்பீ!!!
August 12th, 2007 at 10:20 pm
/என்ன தலைவரே உங்க கவிதைக்கு முன்னே பாவம் கமலினி புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்/
அடப்பாவி… கமலினி பாவம்யா
/அழகோடு(கமலினி) பேரழகையும்(அருளோட நொடிக்கவிதை) கொடுத்துட்டீங்க கலக்குங்க நானும் அப்பப்ப வந்து தலை கிட்ட தலய காட்டிக்கிறேன்.
அசராம அடிங்க ஆதரவா நாங்க இருக்கோம்ல
தோழமையுடன் மீறான் அன்வர்/
இதென்னமோ வெட்டப்போற கிடாவுக்கு மாலை போட்ற மாதிரி இருக்கே
August 15th, 2007 at 7:55 am
அருட்,
உங்கள் கவிதைகள்…
-ஒரு நொடி மழை-
-ஒரு நொடி தென்றல்-
-ஒரு நொடி நிலவொளி-
-ஒரு நொடி முத்தம்-
August 16th, 2007 at 5:21 am
/ அருட்,
உங்கள் கவிதைகள்…
-ஒரு நொடி மழை-
-ஒரு நொடி தென்றல்-
-ஒரு நொடி நிலவொளி-
-ஒரு நொடி முத்தம்-/
:-)))) ரொம்ப படுத்திட்டனோ???
நன்றிங்க செந்தில்!
August 16th, 2007 at 5:42 am
//பாறையில் முளைத்தது
பூஞ்செடி
மொட்டை மாடியில்
நீ//
வளமான கற்பனை!!!
வாழ்த்துக்கள் !!!!
August 16th, 2007 at 5:51 am
/
வளமான கற்பனை!!!
வாழ்த்துக்கள் !!!!/
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நாடோடி இலக்கியன் (பேர் நல்லாருக்குங்க
)
August 16th, 2007 at 7:56 am
//வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நாடோடி இலக்கியன் (பேர் நல்லாருக்குங்க
//
நன்றி இப்போதான் எழுத துவங்கி இருக்கேன் அருட்பெருங்கோ,
நேரம் கிடைத்தால் இங்கே க்கிளிக்குங்கள் http://naadody.blogspot.com
August 16th, 2007 at 11:41 pm
/நன்றி இப்போதான் எழுத துவங்கி இருக்கேன் அருட்பெருங்கோ,
நேரம் கிடைத்தால் இங்கே க்கிளிக்குங்கள் http://naadody.blogspot.com/
கண்டிப்பாக வாசிக்கிறேன் நண்பரே!!!
November 26th, 2007 at 11:44 am
i am reading your blog for the past two days. really they are superb. yaaruppa andha ponnu? unga lover? introduce pannalame?!
November 26th, 2007 at 9:52 pm
/ i am reading your blog for the past two days. really they are superb./
ரொம்ப நன்றிங்க சந்த்ரா!!!
/ yaaruppa andha ponnu? unga lover? introduce pannalame?! /
அந்த பொண்ணு யாருன்னு தெரியலையா??? அவங்கதான் கமலினி முகர்ஜி. வேட்டையாடு விளையாடு படத்துல கூட பார்த்த முதல் நாளே பாட்டுக்கு வருவாங்களே..அவங்களேதான்!!!