Apr 23

உலகின்
எந்த மூலைக்குப் போனாலும்
உன்னைப் பார்த்துக் கொண்டே இருந்திருப்பேன்…
நீ மட்டும்
நிலவைப் போல பிறந்ததற்குப் பதிலாக…
நிலவாகவேப் பிறந்திருந்தால்!

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Related Posts...

written by அருட்பெருங்கோ \\ tags: ,


30 Responses to “நீ மட்டும்”

  1. 1. .:: மை ஃபிரண்ட் ::. Says:

    Kadhali veliyoorukku poyirukkaanggala Sam? ;-)

  2. 2. G.Ragavan Says:

    பார்த்துக்கொண்டே எப்படி இருக்க முடியும்? நிலவோ இரவில் மட்டுந்தான். அதிலும் மாதத்தில் ஓர் நாள் விடுமுறை. ஒருநாள் மட்டுமே முழு நிலவு. மற்ற நாட்களிலெல்லாம் தேய்தலும் வளர்தலும். அப்புறமெப்படி? ;-)

  3. 3. Nandha Says:

    வழக்கம் போல நல்லா இருக்கு…
    என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்?

  4. 4. chitra Says:

    sir unga kavithai ellam super.enaku romba pidichi iruku sir so nice

    chithu

  5. 5. chitra Says:

    ella kavithaum super

    chithu

  6. 6. தேவ் | Dev Says:

    வாய்யா காதல் முரசு… ஜி.ரா. கவிதை என்பது லாஜிக் இல்லாத மேஜிக்… இதுல்ல போய் டெஸ்ட் கேஸ் ரன் பண்ணப் பார்த்தா தகுமா?

  7. 7. கோபிநாத் Says:

    அருமையான கவிதை ;)

    அருள் என்ன சோகம் ன்னு வகைப்படுத்தியிருக்கிங்க? என்ன ஆச்சு?

  8. 8. அருட்பெருங்கோ Says:

    வாங்க மை ஃபிரெண்ட்,

    என்னது… காதலி வெளியூருக்குப் போயிருக்காங்களாவா?
    யாரோட காதலி?

  9. 9. அருட்பெருங்கோ Says:

    வாங்க ஜிரா,

    /பார்த்துக்கொண்டே எப்படி இருக்க முடியும்? நிலவோ இரவில் மட்டுந்தான்./

    மாலையில் தான் பிரிவுத் துயர் வாட்டுமாம்… காதலிக்கிறவங்க சொல்லுவாங்கக் கேட்டுப் பாருங்க ;)

    / அதிலும் மாதத்தில் ஓர் நாள் விடுமுறை./

    ஒருநாள் தான? சமாளிச்சுக்கலாம்… ஒவ்வொரு நாளும் பிரிந்திருப்பதுதானே துயரம்?

    /ஒருநாள் மட்டுமே முழு நிலவு. மற்ற நாட்களிலெல்லாம் தேய்தலும் வளர்தலும். அப்புறமெப்படி? ;-) / முழு நிலவோ, பிறைநிலவோ கொஞ்சமேனும் பார்க்க முடிகிறதே!!!

    இங்க பாருங்க ஜிரா கவிதை (அப்படின்னு வச்சிக்குவோம்) சொன்னா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது ;-)

  10. 10. அருட்பெருங்கோ Says:

    வாங்க நந்தா,

    எப்படி இருக்கீங்க?

    /வழக்கம் போல நல்லா இருக்கு…/
    நன்றிங்க!!!

    /என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்?/
    அந்தக் கொடுமைய ஏன் கேட்கறீங்க…நம்மள தான் மும்பைக்கு அனுப்பி வச்சிட்டாங்களே… தமிழ்மணம் பக்கம் வந்தே ஒரு மாசம் கிட்ட ஆகப் போகுது… அதுக்குள்ள என்னென்னமோ நடந்திருக்கு…

    யாராவது என்ன நடந்துச்சு/நடக்குதுன்னு சுருக்கமா ஒரு மெயில் அனுப்புங்க :)

  11. 11. அருட்பெருங்கோ Says:

    வாங்க சித்ரா,

    என்ன சார்னு சொல்லிட்டீங்க? நான் ரொம்ப சின்னப் பையன்ங்க!!!

    கவிதையப் பத்தி உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி!!!

  12. 12. அருட்பெருங்கோ Says:

    வாங்க தல,

    /வாய்யா காதல் முரசு…/

    நான் வர்றேன்னு தான் கதறுறேன்… யாரும் கன்டுக்க மாட்டேங்கறாங்க…

    / ஜி.ரா. கவிதை என்பது லாஜிக் இல்லாத மேஜிக்… இதுல்ல போய் டெஸ்ட் கேஸ் ரன் பண்ணப் பார்த்தா தகுமா? /

    இன்னொரு தடவ சொல்லுங்க… அவரு டெஸ்டிங் ஃபீல்டுல இருக்காருனு நிரூபிக்கிறாரு!!!

  13. 13. அருட்பெருங்கோ Says:

    வாங்க கோபி,

    /அருமையான கவிதை ;) /
    எனக்கொரு உண்ம தெரிஞ்சாகனும்… அருமையான கவிதைனு சொல்லிட்டு பக்கத்துல எதுக்கு ஒரு சிரிப்பான் போட்டீங்க? :)

    /அருள் என்ன சோகம் ன்னு வகைப்படுத்தியிருக்கிங்க? என்ன ஆச்சு?/

    பின்ன என்னங்க பெங்களூரில இருக்கும்போது அமராவதிய வாரம் ஒரு தடவ போய் பாத்துக்கலாம், அப்புறம் கைதராபாத் வந்த பின்னாடி மாசம் ஒரு தடவனு ஆச்சு, இப்போ மும்பை வந்தாச்சு அடுத்து எப்போ போய் அமராவதிய பாக்குறது?

    அமராவதி, எங்க ஊரு ஆறு ;)

  14. 14. G.Ragavan Says:

    // தேவ் | Dev said…
    வாய்யா காதல் முரசு… ஜி.ரா. கவிதை என்பது லாஜிக் இல்லாத மேஜிக்… இதுல்ல போய் டெஸ்ட் கேஸ் ரன் பண்ணப் பார்த்தா தகுமா? //

    அடடே தேவ்! கவிதைல லாஜிக் பாக்கக் கூடாதா! தெரியாமப் போச்சேய்யா! நமக்கும் கவிதைக்கும் ரொம்பத் தூரம்.

    // அருட்பெருங்கோ said…
    வாங்க தல,

    /வாய்யா காதல் முரசு…/

    நான் வர்றேன்னு தான் கதறுறேன்… யாரும் கன்டுக்க மாட்டேங்கறாங்க…

    //// ஜி.ரா. கவிதை என்பது லாஜிக் இல்லாத மேஜிக்… இதுல்ல போய் டெஸ்ட் கேஸ் ரன் பண்ணப் பார்த்தா தகுமா? /

    இன்னொரு தடவ சொல்லுங்க… அவரு டெஸ்டிங் ஃபீல்டுல இருக்காருனு நிரூபிக்கிறாரு!!! //

    ஹலோ…வாப்பா அருட்பெருங்கோ….நாங்கள்ளாம் பெருபாமென்சு டெசுடிங்..தெரிஞ்சிக்கப்பா!

  15. 15. surya Says:

    its nice Mr.mano
    மொழி படம் பார்த்தீர்களா?
    நமக்கு பிடித்தவர்களை
    நினைத்துக்கொண்டு
    நிலவைப் பார்த்தால்
    நிலவில் அவர்கள்
    முகம் தெரியுமாம்
    so
    “எந்த மூலைக்குப் போனாலும்
    உன்னைப் பார்த்துக் கொண்டே இருந்திருப்பேன்…”
    பார்த்துக்கொண்டே
    இருங்கள்

  16. 16. பிரேம்குமார் Says:

    நேத்து ஒரு நாளு தான் உங்க வலைப்பூவை பாக்கல. அந்த நேரம் பாத்து கவிதை போட்டுடீங்களா?

    அழகான‌ கவிதை நண்பா…வாழ்த்துக்கள்
    நீங்கள் அமராவதியை நினைத்து ஏங்குவது புரிகிறது அம்பிகாபதியே

  17. 17. Bala Says:

    It is really amazing.
    I read one of your poetry collection in a mail, so nice.
    It goes like this
    “thotu pesuvathu natpukazhagam
    thodamal pesuvathu kadhalukazhagam
    nam kangal naangum kaathalil irka
    uthadugal matum natpileye irupathuyen”

    What are you conveying here? I have three interpretations
    1.Thou we say its frndshp, we are in love.
    2.Lips will come together when we say “natpu” and not when “kadhal”.
    3.Third one the literal meaning, so i wanabe clear….

  18. 18. அருட்பெருங்கோ Says:

    வாங்க ஜிரா,

    /அடடே தேவ்! கவிதைல லாஜிக் பாக்கக் கூடாதா! தெரியாமப் போச்சேய்யா! நமக்கும் கவிதைக்கும் ரொம்பத் தூரம்./

    தெரியாதா உங்க்களுக்கு? லாஜிக் எல்லாம் பார்த்தா கவிதைய ரசிக்க முடியாதே ;)

    //// ஜி.ரா. கவிதை என்பது லாஜிக் இல்லாத மேஜிக்… இதுல்ல போய் டெஸ்ட் கேஸ் ரன் பண்ணப் பார்த்தா தகுமா? /

    இன்னொரு தடவ சொல்லுங்க… அவரு டெஸ்டிங் ஃபீல்டுல இருக்காருனு நிரூபிக்கிறாரு!!! //

    ஹலோ…வாப்பா அருட்பெருங்கோ….நாங்கள்ளாம் பெருபாமென்சு டெசுடிங்..தெரிஞ்சிக்கப்பா! //

    அதுக்காக கவிதையிலும் காதலிலும் பெருபாமென்சு டெசுடிங்க் பண்ணாதீங்க :)

    நெதெர்லாந்து எப்படி இருக்கு?

  19. 19. அருட்பெருங்கோ Says:

    வாங்க சூர்யா,

    /its nice Mr.mano/
    நன்றிங்க!!!

    /மொழி படம் பார்த்தீர்களா?
    நமக்கு பிடித்தவர்களை
    நினைத்துக்கொண்டு
    நிலவைப் பார்த்தால்
    நிலவில் அவர்கள்
    முகம் தெரியுமாம்
    சொ
    “எந்த மூலைக்குப் போனாலும்
    உன்னைப் பார்த்துக் கொண்டே இருந்திருப்பேன்…”
    பார்த்துக்கொண்டே
    இருங்கள் /

    அப்படிப்பார்த்தா பிடிச்சவங்கள நெனச்சுட்டு நிலவ மட்டுமல்ல எந்தப்பொருளப் பார்த்தாலுமே அவங்க முகமா தான் தெரியும் ;)

  20. 20. அருட்பெருங்கோ Says:

    வாங்க ப்ரேம்,

    எப்படி இருக்கீங்க?

    /நேத்து ஒரு நாளு தான் உங்க வலைப்பூவை பாக்கல. அந்த நேரம் பாத்து கவிதை போட்டுடீங்களா? /

    ரொம்ப நாள் கழிச்சு நேத்துதான் கொஞ்சம் நேரம் கிடைச்சுதுங்க… அதான்…

    /அழகான‌ கவிதை நண்பா…வாழ்த்துக்கள்
    நீங்கள் அமராவதியை நினைத்து ஏங்குவது புரிகிறது அம்பிகாபதியே /

    நன்றி பிரேம்!!! அமராவதியையும் இதயத்தில் அமரப் போகும் யுவதியையும் நினைத்து… ;)

    (என்னங்க அம்பிகா பதி நு சொல்லிட்டீங்க? பதி ந்னா கணவன்னு தான அர்த்தம்? அப்போ அம்பிகாபதின்னா? ;) )

  21. 21. அருட்பெருங்கோ Says:

    vaanga baalaa,

    /It is really amazing.
    I read one of your poetry collection in a mail, so nice.
    It goes like this
    “thotu pesuvathu natpukazhagam
    thodamal pesuvathu kadhalukazhagam
    nam kangal naangum kaathalil irka
    uthadugal matum natpileye irupathuyen”

    What are you conveying here? I have three interpretations
    1.Thou we say its frndshp, we are in love.
    2.Lips will come together when we say “natpu” and not when “kadhal”.
    3.Third one the literal meaning, so i wanabe clear…. /

    தொடாமல் பேசுவது காதலுக்கு அழகு… காதலர்களின் (நான்கு) கண்களும் காதலில் இருக்கின்றன என்றால் அவை தொட்டுக்கொள்ளாமலே ஆயிரம் கதைகள் பேசுகின்றன…

    தொட்டுப் பேசுவது நட்புக்கு அழகு… காதலர்களின் (நான்கு) உதடுகளும் நட்பிலேயே இருக்கின்றன என்றால்….என்றால்……

    இதுக்கு மேல நான் எதுவும் சொல்லல… போய் கமல் படம் பாருங்க ;)

  22. 22. Anonymous Says:

    Hai Arutperungo,

    Not only your kavithai, but ur reply also so nice…. Kamal padam parkavenam.. unga kavithai padithaalae andha effect dhan varudhu…

    Sathish

  23. 23. பிரேம்குமார் Says:

    நான் நல்லா இருக்கேன் தலைவா. நீங்களும் மும்பையும் நலமா?

    நான் இலக்கிய காதல் ஜோடி அம்பிகாபதி‍ அமராவாதியை மனதில் வைத்து கொண்டு சொன்னேன். இருந்தாலும் நீங்க சொல்வதில் ஏதும் உள்குத்து இருக்கிறதா என ஆராய முற்படுகிறேன் (இப்பவே கண்ணக் கட்டுதே)

  24. 24. saravansivan Says:

    Nanbare,

    Naan ungalin pudhu visiri. Ezhuthukkal athanaiyum arumai. Unga Mumbai sogathai ennal paripooranamaga unara mudigiradhu, karanam ippodhu naanum arugamaiyil pune vil thavithu kondu than irukiren..Bangalorilavadhu parava illai, hosur pakkamirunthu tamizh manam adikadi veesum..Siramam than, enna seiya..Kulothungan kaanadha Gulobalizationaal vandha vidhi..

  25. 25. maha Says:

    hai, friend, unga kavithai elam super, nan matum ela en friends elarum unga kavithai padichanga, kathal pathi matum eluthiringale, engalukaga natpu pathium eluthungalen please

  26. 26. அருட்பெருங்கோ Says:

    /Hai Arutperungo,

    Not only your kavithai, but ur reply also so nice…. Kamal padam parkavenam.. unga kavithai padithaalae andha effect dhan varudhu…

    Sathish /

    என்னது கவிதையெல்லாம் கமல் படம் மாதிரி இருக்கா?

    நல்லா இருக்குனு சொல்றீங்களா, இல்ல நல்லா இல்லைனு சொல்றீங்களான்னு புரியலையே ;)

  27. 27. அருட்பெருங்கோ Says:

    வாங்க பிரேம்,

    /நான் நல்லா இருக்கேன் தலைவா. நீங்களும் மும்பையும் நலமா?/
    நீங்க நல்லா இருப்பீங்கன்னு தான் எனக்குத் தெரியுமே!!!
    ம்ம்ம் மும்பை மட்டும் தான் நலமா இருக்கு…

    /நான் இலக்கிய காதல் ஜோடி அம்பிகாபதி‍ அமராவாதியை மனதில் வைத்து கொண்டு சொன்னேன். இருந்தாலும் நீங்க சொல்வதில் ஏதும் உள்குத்து இருக்கிறதா என ஆராய முற்படுகிறேன் (இப்பவே கண்ணக் கட்டுதே)/

    அந்த ஜோடி வேன்டாம் விடுங்க…
    நான் சொன்னதுல உள்குத்தா? ஆள விடுங்க சாமி…

  28. 28. அருட்பெருங்கோ Says:

    /Nanbare,

    Naan ungalin pudhu visiri. Ezhuthukkal athanaiyum arumai. Unga Mumbai sogathai ennal paripooranamaga unara mudigiradhu, karanam ippodhu naanum arugamaiyil pune vil thavithu kondu than irukiren..Bangalorilavadhu parava illai, hosur pakkamirunthu tamizh manam adikadi veesum..Siramam than, enna seiya..Kulothungan kaanadha Gulobalizationaal vandha vidhi.. /
    வாங்க சிவம்,

    நீங்க புனேவா? நல்லது…

    ம்ம்ம் என்ன பண்றது என்ன இருந்தாலும் பெண்களூர் மாதிரி மும்பை இல்ல தான் :)
    எப்போ மும்பைக்கு பை சொல்லப் போறேன்னு காத்திட்டு இருக்கேன்!!!

  29. 29. அருட்பெருங்கோ Says:

    /hai, friend, unga kavithai elam super, nan matum ela en friends elarum unga kavithai padichanga, kathal pathi matum eluthiringale, engalukaga natpu pathium eluthungalen please/

    வாங்க மகா,

    ரொம்ப நன்றிங்க…

    ம்ம்ம் இனிமேல் காதலோடு மற்ற விசயங்களையும் எழுத முயற்சி செய்றேன்…

  30. 30. nrramesh Says:

    kathal kan mun theriyaatha kal adi pondrathu.. antha adi yaarukku yeppa venaalum vizhum … so pozhachikko muzhuchikko

Leave a Reply