Jul 17
நம் சந்திப்புகள்
இரவில் வேண்டாமென நிந்திக்கின்றன…
நம் நிழல்கள்!
*
கதை சொல்கிறேனென சொல்லி
நீ சொல்வதெல்லாம் கதை.
செய்வதெல்லாமோ கவிதை!
*
முகம் துடைத்த
கைக்குட்டையைத் துவைக்காதே.
அழுக்கு படிந்ததைத் துவைக்கலாம்…
அழகு படிந்ததை?
*
பிடித்துவிட எத்தனிக்கையில்
மறைந்து விடுகிறது வானவில்.
கூடவே என் வானமும்.
*
என் காதல் கேள்விகளுக்கு நீயே விடை என்றிருந்தேன்.
நீயோ கேள்விகள் எதுவுமின்றி என்னிடமிருந்து,
‘விடைபெற்றாய்’!
*
களிமண்ணை சிற்பம் ஆக்கினாய்.
பிறகு ஏனோ உடைத்துப் பார்த்தாய்.
மண்ணாகவே இருந்திருக்கலாம்!
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
July 18th, 2007 at 12:02 am
Nalla irukku.
Why the shadow is crying?
July 18th, 2007 at 12:07 am
/ Nalla irukku.
Why the shadow is crying?/
காதலர்கள் பகலில் சந்தித்தால் நிழல்களும் சந்தித்துக் காதலிக்க முடியுமாம். காதலர்கள் இரவில் சந்தித்தால் நிழல்கள் என்ன செய்யும்? அதனால்தான் காதலர்களை இரவில் சந்திக்க வேண்டாமெனப் புலம்புகின்றன அவர்களுடைய நிழல்கள்.
சரிதானே என்பீ?
July 18th, 2007 at 12:50 am
அழகான கவிதைகள் நண்பா
July 18th, 2007 at 3:46 am
/ அழகான கவிதைகள் நண்பா :-)/
நன்றி தல
July 18th, 2007 at 7:05 am
முகம் துடைத்த
கைக்குட்டையைத் துவைக்காதே.
அழுக்கு படிந்ததைத் துவைக்கலாம்…
அழகு படிந்ததை?///
சூப்பெரோ சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்.:)
July 19th, 2007 at 12:29 am
//
காதலர்கள் பகலில் சந்தித்தால் நிழல்களும் சந்தித்துக் காதலிக்க முடியுமாம். காதலர்கள் இரவில் சந்தித்தால் நிழல்கள் என்ன செய்யும்? அதனால்தான் காதலர்களை இரவில் சந்திக்க வேண்டாமெனப் புலம்புகின்றன அவர்களுடைய நிழல்கள்.
சரிதானே என்பீ? //
Yes boss, I understood that.
What I asked was different.
I thought, the green letters represent real & the black letters represent shadows.
And the black letters are carrying some sadness.
thats why I asked why the shadow is crying.
correct me if i am wrong.
July 19th, 2007 at 1:26 am
வாங்க என்பீ,
/Yes boss, I understood that.
What I asked was different./
நாந்தான் உங்க கேள்விய சரியா புரிஞ்சிக்கல
/I thought, the green letters represent real & the black letters represent shadows.
And the black letters are carrying some sadness.
thats why I asked why the shadow is crying./
பசுமையானக் காதல் கவிதைகளுக்கு பச்சை நிறம், சோகமான காதல் கவிதைகளுக்கு கருப்பு நிறம் கொடுப்பது என்பது என்னுடைய வழக்கம்
எப்பவும் அது தனித்தனிப் பதிவுகளில் வரும். இங்கே ஒரே பதிவில் போட்டு விட்டதால் உங்களைக் கொஞ்சம் குழப்பிவிட்டது
காதலுக்கும் நிறம உண்டுதானே?்
/correct me if i am wrong.
:)/
நீங்க சரியாதான் கேட்டிருக்கீங்க… நாந்தான் குழ(ம்)ப்பிட்டேன்…
July 19th, 2007 at 3:15 am
/ முகம் துடைத்த
கைக்குட்டையைத் துவைக்காதே.
அழுக்கு படிந்ததைத் துவைக்கலாம்…
அழகு படிந்ததை?///
சூப்பெரோ சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்.:)/
நன்றிங்க மேடம்!!!
September 14th, 2007 at 4:38 pm
kathalin enthachcheyalum kavithaithakal thane kavinjare…
nice….
September 14th, 2007 at 4:39 pm
nice….