காதல் கூடம் - 1 காதல் கூடம் - 2
Aug 15

நம் காதல் தேசத்தில்…

நீ…
தேசிய மலர்!

உன் கைக்குட்டை…
தேசிய கொடி!

உன் பிறந்தநாள்…
தேசிய தினம்!

உன் பாதச்சுவடு…
தேசிய சின்னம்!

என்று கொண்டாடினேன்.

இன்றோ…
உன் மௌனமே…
தேசிய கீதமானது!

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

12 Responses to “ஓரு தேசிய கவிதை!”

  1. delphine Says:

    வாழ்த்துக்கள்.. அருட் பெருங்கோ..

  2. ஜெஸிலா Says:

    எழுத்துக்கு கொடி வண்ணம் முயற்சித்ததில் வெள்ளையில் ஏதேனும் வாக்கியங்கள் தெரியாமல் போய்விட்டதா? புலம்பல் தாங்கவில்லையடா சாமி :-))

  3. அருட்பெருங்கோ Says:

    / வாழ்த்துக்கள்.. அருட் பெருங்கோ../

    நன்றிங்க மேடம்!!!

  4. அருட்பெருங்கோ Says:

    /எழுத்துக்கு கொடி வண்ணம் முயற்சித்ததில் வெள்ளையில் ஏதேனும் வாக்கியங்கள் தெரியாமல் போய்விட்டதா? புலம்பல் தாங்கவில்லையடா சாமி :-))/

    ஜெஸிலா,

    கொடி வண்ணமெல்லாம் இல்லைங்க எப்பவுமே இதே வண்ணம்தான!!!

    புலம்பல கேட்கிறவங்க பாடு கொஞ்சம் கஷ்டம் தான்…என்ன பண்றது :)

  5. delphine Says:

    அடுத்த காதல் புலம்பல் எப்போ அருட் பெருங்கோ?

  6. அருட்பெருங்கோ Says:

    / அடுத்த காதல் புலம்பல் எப்போ அருட் பெருங்கோ?/

    ்புலம்பலுக்குன்னேதான் புதன் கிழமைய ஒதுக்கி வச்சிட்டேனே மேடம் :)

  7. பிரேம்குமார் Says:

    ஆகா, ஒரு கொல (காதல்) வெறியோட தான்ப்பா திரியிறாங்க….

  8. அருட்பெருங்கோ Says:

    / ஆகா, ஒரு கொல (காதல்) வெறியோட தான்ப்பா திரியிறாங்க…./

    தல,

    பெயரிலேயே காதலை வத்திருக்கும் தாங்கள் மென்மையான காதல் உணர்வுகளை கொல வெறி என்று கொச்சைப்படுத்தலாமா? ;-)

  9. இராம் Says:

    காதல் முரசு ஐயா’வே,

    நன்றாக இருக்கிறது உங்களின் இந்த கவிதை……

  10. அருட்பெருங்கோ Says:

    / காதல் முரசு ஐயா’வே,/

    ஏன்?ஏன்??ஏன்??? எனக்கு கோபம் வந்தா அப்புறம் அழுகாச்சி வந்துடும் :)

    /நன்றாக இருக்கிறது உங்களின் இந்த கவிதை……/

    நன்றிங்க ராயல் ராம்!!!

  11. G.Ragavan Says:

    என்ன செய்வது?
    மௌனம் சம்மதம் என்று
    தவறாக மொழி பெயர்த்த
    நீ தேசத்துரோகிதான்!

  12. Arun Says:

    Siva, Good

Leave a Reply