|
May
28
|
அர்த்தமிழந்த சொற்களை சுமக்கும்
உன் பழைய காதல் கடிதமொன்று
தன்னை அழித்துக்கொள்ள உயிரில்லாமல் தவிக்கிறது.
*
காதலித்து கைவிட்டதற்குப் பதிலாக
காதலிக்கவில்லையென நீ
பொய்யே சொல்லியிருக்கலாம்
*
நீ சொன்னபடியே
உன்னை மறந்துவிடுகிறேன்.
என்னுடன் கலந்துவிடு.
*
என்னை இதயத்தில் சுமந்தாய்.
உன்னை உயிரில் வைத்தேன்.
இதய மாற்று சிகிச்சை எளிது.
உயிர் மாற்று சிகிச்சை?
*
செல்லரித்துப் போன
உனது பழையப் படமொன்று
என் செல்லரித்துக் கொண்டிருக்கிறது.
May 28th, 2008 at 9:46 am
//செல்லரித்துப் போன
உனது பழையப் படமொன்று
என் செல்லரித்துக் கொண்டிருக்கிறது//
Superuuuuuuu…
May 28th, 2008 at 9:48 am
me the firstuuu…
எங்க போனீங்க Sri…
May 28th, 2008 at 10:00 am
நல்ல கவிதை நண்பரே! எனக்கு மிகவும் பிடித்த வரி:
//அர்த்தமிழந்த சொற்களை சுமக்கும்
உன் பழைய காதல் கடிதமொன்று
தன்னை அழித்துக்கொள்ள உயிரில்லாமல் தவிக்கிறது//
காலம்தான் எப்படி எல்லாம் ஒரு கடிதத்தின் அர்த்தத்தை மாற்றுகிறது!!
நட்புடன்
தீக்ஷண்யா
May 28th, 2008 at 10:15 am
@ செந்தில்குமார்,
நன்றிங்க. ஸ்ரீ சாப்பிடப்போயிருக்காங்க இப்போ வந்துடுவாங்க
May 28th, 2008 at 10:19 am
ponaa pooguthunnu vittukodutthutten ungalukkaaga….!!
(evlo naalaa plan panneenga..?!? )
May 28th, 2008 at 10:20 am
@தீக்ஷண்யா,
/நல்ல கவிதை நண்பரே!/
நன்றிங்க!
/காலம்தான் எப்படி எல்லாம் ஒரு கடிதத்தின் அர்த்தத்தை மாற்றுகிறது!! /
ம்ம்ம் சில சமயம் அர்த்தமிழக்கிறது!
May 28th, 2008 at 10:20 am
May 28th, 2008 at 10:52 am
/ inga than irukken Senthil anna….!!
ponaa pooguthunnu vittukodutthutten ungalukkaaga….!!
(evlo naalaa plan panneenga..?!? )/
telephone booth மாதிரி ஆகிப்போச்சா நம்ம ப்ளாக்?
/Arul anna Kavithai nalla irunthathu..!!/
அதான் ஏற்கனவே சொல்லிட்டீங்களே
நன்றி!
May 28th, 2008 at 10:58 am
//telephone booth மாதிரி ஆகிப்போச்சா நம்ம ப்ளாக்?//
:-@
May 28th, 2008 at 11:04 am
//செல்லரித்துப் போன
உனது பழையப் படமொன்று
என் செல்லரித்துக் கொண்டிருக்கிறது.
//
ரசனை மிக்க வரிகள்
May 28th, 2008 at 11:16 am
// Sri Says:
May 28th, 2008 at 10:20 am
//
ரிப்பீட்டு ஹி ஹி
May 28th, 2008 at 11:57 am
//இதய மாற்று சிகிச்சை எளிது.
உயிர் மாற்று சிகிச்சை?//
கலக்குறீங்க….!!!
…..மறித்து போனாலும்,
மறக்க முடியாததும்
மறுக்க முடியாததுமாய்
இருக்கும் நினைவுகள்…..
காதல் பற்றியும்
காதலி பற்றியதுமாய் தான் இருக்குமோ…???!!!…..
May 28th, 2008 at 12:00 pm
@Sri,
அழாதீங்க!
@ நிர்ஷன்,
நன்றிங்க!
@ ஸ்ரீ,
பெயரையும் சேர்த்தே ரிப்பீட்டுவீங்க போல.. பேர மாத்துங்கப்பா!
May 28th, 2008 at 12:06 pm
//பேர மாத்துங்கப்பா//
yen anna athu paattukku irunthuttu porathu atha yen maattha solreenga….?!?
naan than kavithai ezhuthala atleast kavithai ezhutharavar orutharavathu en perla irukkarennu naan santhosha padaren athu ungalukku pidikkaliya…?!?
May 28th, 2008 at 1:30 pm
அனைத்து கவிதையும் சூப்பரா இருக்கு…
எல்லாமே நியாயமான கேள்வியா இருக்கு..
நல்லா கேளுங்க அருட்பெருங்கோ அண்ணா..
May 28th, 2008 at 5:51 pm
@ஆல்பர்ட்,
நன்றிகள்!
/..மறித்து போனாலும்,
மறக்க முடியாததும்
மறுக்க முடியாததுமாய்
இருக்கும் நினைவுகள்
காதல் பற்றியும்
காதலி பற்றியதுமாய் தான் இருக்குமோ???!!!../
இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இருந்தும் இல்லாமல் போகலாம். கலாம் கலாம் அப்துல்கலாம்
என்ன சொல்றதுன்னு தெரியாமதான் இப்படி உளர்றேன்
May 28th, 2008 at 5:53 pm
/yen anna athu paattukku irunthuttu porathu atha yen maattha solreenga.?!?
naan than kavithai ezhuthala atleast kavithai ezhutharavar orutharavathu en perla irukkarennu naan santhosha padaren athu ungalukku pidikkaliya?!?/
சரி சரி அழாதீங்க. தமிழ் ஸ்ரீ, இங்கிலீசு ஸ்ரீ னே ரெண்டு பேரையும் கூப்பிட்டுக்கறேன்
May 28th, 2008 at 5:57 pm
/அனைத்து கவிதையும் சூப்பரா இருக்கு/
நன்றிங்க மகாராஜா!
/எல்லாமே நியாயமான கேள்வியா இருக்கு../
எந்த கேள்விய சொல்றீங்க?
/நல்லா கேளுங்க அருட்பெருங்கோ அண்ணா..
/
அருட்பெருங்கோ அண்ணாவா? விட்டா வானத்தைப்போல விஜயகாந்த் மாதிரி ஆக்கிடுவீங்க போல இருக்கே
May 28th, 2008 at 6:03 pm
nice kavithai sir/////
காதலித்து கைவிட்டதற்குப் பதிலாக
காதலிக்கவில்லையென நீ
பொய்யே சொல்லியிருக்கலாம்
May 28th, 2008 at 6:35 pm
நன்றிங்க மலர்ப்ரியன்.
ஒரே ஒரு விண்ணப்பம். நீங்க பேர் சொல்லியே கூப்பிடுங்க. சார் எல்லாம் வேண்டாம்!
May 28th, 2008 at 9:23 pm
உன் பிரிவால் தனியே……..
அDAIத்து அழுகிறது – என் இதயம்…….
எனக்கு தெரிகிறது – அது………..
அDAIக்கப் போகிறது…………………
நிரந்தரமாகவே……………..
ur poems are so sad……………
ever
subash
May 28th, 2008 at 9:45 pm
செல்லரித்துப் போன
உனது பழையப் படமொன்று
என் செல்லரித்துக் கொண்டிருக்கிறது.
F A N T A S T I C
May 28th, 2008 at 10:57 pm
“செல்லரித்துப் போன
உனது பழையப் படமொன்று
என் செல்லரித்துக் கொண்டிருக்கிறது.”
அருமை அருள்… காதல் சாமியார் நீங்க..:-)
May 29th, 2008 at 11:14 am
என்ன அருள் இப்டி சொல்லிடீங்க… ??
நீங்க “அப்துல் கலாம்”னு சொல்றீங்க..
நம்ம அன்பர்கள்,
“ur poems are so sad……………”, “காதல் சாமியார்”னு லாம் சொல்றாங்க…
இதெல்லாம் வெச்சு பார்க்கும் போது………..
……….. (monitor)அ பாக்க விடாம மூக்க நுழைச்ச
பக்கத்து சீட்டு (இன்றைய) பச்சை சுடிதார்,
“அருள்- corporate cultured தேவதாசோ??”"னு
கேட்டாங்க……
எனக்கு கூட
“…….ரொம்ப நல்லவன் டா இவன்” வடிவேல் காமெடி ஞாபகம் வந்துடுச்சு….!!!
May 29th, 2008 at 1:19 pm
அருள்…………….
இதயும் சேர்த்துக்கங்க…………..
அவள் வீட்டு – நாய்………….
வாலை ஆட்டுகிறது………….
அவள் காலை காட்டுகிறாள்………….
ever
Subash
May 29th, 2008 at 2:46 pm
@சுபாஷ்,
எல்லாக் கவிதையும் ஒரே மாதிரி இருக்காதில்ல? கொஞ்சம் சோகமும் இருக்கட்டும். நன்றி!
May 29th, 2008 at 2:48 pm
/ F A N T A S T I C /
நன்றிங்க சரவணக்குமார்.
/அருமை அருள் காதல் சாமியார் நீங்க..:-)/
நன்றிங்க. காதல் சாமியாரா? மொட்டையடிக்காம விடமாட்டீங்க போல?
May 29th, 2008 at 2:52 pm
@ ஆல்பர்ட்,
corporate cultured தேவதாசா?
அந்த பச்சை சுடிதார் தங்கச்சிய ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்க!
என்ன ரொம்ப நல்லவன்(?)னு சொல்லிட்டீங்க. நீங்களும் நல்லவராதான் இருக்கனும்
May 29th, 2008 at 6:18 pm
அர்த்தமிழந்த சொற்களை சுமக்கும்
உன் பழைய காதல் கடிதமொன்று
தன்னை அழித்துக்கொள்ள உயிரில்லாமல் தவிக்கிறது..
ஆழமான வரிகள்..
வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ..
May 29th, 2008 at 7:25 pm
வாழ்த்துகளுக்கு நன்றிங்க குட்டி செல்வன்!
May 30th, 2008 at 9:48 am
ரெண்டும் மூணும் சுமாரா இருக்கு.. மத்தது அருமை…அசத்தல்.
கலந்து போடும் போது அது பக்கத்துல எட்டிப்பாக்கமுடியாம சுமாரா ஆகிடுச்சு போல ரெண்டாவதும் மூணாவதும்..
May 30th, 2008 at 3:53 pm
/ரெண்டும் மூணும் சுமாரா இருக்கு/
வசனம் அப்படிதாங்க்கா இருக்கும்
)) உண்மைய சொன்னதுக்கு நன்றி. நல்லா எழுதப்பாக்குறேன்!
/மத்தது அருமை அசத்தல்./
நன்றி
/கலந்து போடும் போது அது பக்கத்துல எட்டிப்பாக்கமுடியாம சுமாரா ஆகிடுச்சு போல ரெண்டாவதும் மூணாவதும்../
இனி கலப்படங்கள் தவிர்க்கப்படும்
May 31st, 2008 at 11:45 am
//செல்லரித்துப் போன
உனது பழையப் படமொன்று
என் செல்லரித்துக் கொண்டிருக்கிறது.//
ரொம்ப அருமையான வரிகள்…
ஆனா எல்லா கவிதையிலும் ஒரு சோகம் இருக்கு……
அது பாசிடிவா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்…..
June 1st, 2008 at 2:29 pm
நன்றிங்க ரீகன்!
எல்லா கவிதையிலுமா? புலம்பல் கவிதை மட்டும்தான இப்படி இருக்கும்!
October 24th, 2008 at 11:50 am
arul sir nan karur than. innakum ippadithan COLOR COLORa arthamatra varthaikal greetingla kiriki koduthu kalagadithuvital innai oruthi.