குறுங்கதையும் குறுந்தொகையும் - 2 ஏமாந்தியா?
Jun 02

உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!

*

இமைப்பொழுதிலும்
கவிதை எழுதுவேன்.
இமைப்பது நீயெனில்.

*

உலகின் பெண்களுக்கெல்லாம்
உனதுருவம் அமைந்துவிட்ட மாயக்கனவிலும்…
உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
உனது பார்வை!

*

நீ குடை விரித்ததும்
குடை சாய்ந்தது
மழை வண்டி!

*

இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்
அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன…
சில கவிதைகள்!

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , , ,

20 Responses to “கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன”

  1. முத்துலெட்சுமி Says:

    அப்ப பிறந்தநாளன்னிக்கு கோயிலுக்கு போயிட்டு வந்தது கவிதை சேகரிக்கவா ?? :-)

  2. Reegan Says:

    // இமைப்பொழுதிலும்
    கவிதை எழுதுவேன்.
    இமைப்பது நீயெனில். //

    // நீ குடை விரித்ததும்
    குடை சாய்ந்தது
    மழை வண்டி! //

    // அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
    கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன…
    சில கவிதைகள்! //

    ரொம்ப அருமையா இருக்கிறது… அருள்….

  3. Sri Says:

    anna ithukku than neenga kovilkku pooneengala..?!?
    naan yennamo maareteenganu ninaichen…!! ;-)

  4. Sri Says:

    //இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
    விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்//
    azhagaana varigal..!! :-)

  5. Senthil Kumar Says:

    //நீ குடை விரித்ததும்
    குடை சாய்ந்தது
    மழை வண்டி!//

    //இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
    விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்
    அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
    கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன…
    சில கவிதைகள்!//

    Superuuu…
    Kovil-la Site adikka Koodathunga…

    ஆனா இந்த மாதிரி கவிதை எழுதுவதற்காக உங்களை மன்னிக்கலாம்…

  6. சேவியர் Says:

    // உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
    இனிப்பாய் இருக்கிறது.
    நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
    நினைத்துக்கொள்வது!//

    அற்புதம் !

  7. Alb Says:

    //உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
    உனது பார்வை!//

    …..கொஞ்சம் குறும்பு நிறைய அழகு..!!
    சூப்பர் அருள் !!!

  8. அருட்பெருங்கோ Says:

    /அப்ப பிறந்தநாளன்னிக்கு கோயிலுக்கு போயிட்டு வந்தது கவிதை சேகரிக்கவா ??/

    நான் என்னைக்குங்க்கா கோயிலுக்கு போனேன்? வீட்டில் எல்லோரோடும் போனதுண்டு அவ்வளவுதான்.

    கவுஜையெழுத கோயிலுக்கு போய்தான் பாக்கனுமா, என்ன? ;)

  9. அருட்பெருங்கோ Says:

    /ரொம்ப அருமையா இருக்கிறது… அருள்/

    நன்றிங்க ரீகன்!

  10. அருட்பெருங்கோ Says:

    @Sri,

    நான் எப்போ கோவிலுக்கு போனேன்? போனவாரம் திருப்பதிக்குதான் போனோம், ஆனா அங்க யாரும் அடிப்பிரார்த்தனையெல்லாம் பண்ணலையே :)

    நன்றி.

  11. அருட்பெருங்கோ Says:

    /Superuuu
    Kovil-la Site adikka Koodathunga/

    அப்படியா செந்தில்? நீங்க கோயில் சிற்பங்களையெல்லாம் பார்த்ததில்லையா? ;)

    /ஆனா இந்த மாதிரி கவிதை எழுதுவதற்காக உங்களை மன்னிக்கலாம்/

    நன்றிங்க!

  12. அருட்பெருங்கோ Says:

    /அற்புதம் !/

    நன்றிங்க சேவியர்!

  13. அருட்பெருங்கோ Says:

    /கொஞ்சம் குறும்பு நிறைய அழகு..!!
    சூப்பர் அருள் !!!/

    நன்றிங்க ஆல்பர்ட்.

  14. கோபிநாத் Says:

    நல்லாருக்கு ராசா ;)

  15. chinnappaiyan Says:

    சூப்பர்!!!

  16. அருட்பெருங்கோ Says:

    கோபிநாத், சின்னப்பையன், இருவருக்கும் நன்றிகள்!

  17. Maragathavalli Says:

    Epdi ipdi…?
    Super… unarvugal niraindha varigal..
    vaazhthukkal

  18. M.Saravana Kumar Says:

    உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
    இனிப்பாய் இருக்கிறது.
    நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
    நினைத்துக்கொள்வது!

    *

    இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
    விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்
    அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
    கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன…
    சில கவிதைகள்!

    *

    உலகின் பெண்களுக்கெல்லாம்
    உனதுருவம் அமைந்துவிட்ட மாயக்கனவிலும்…
    உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
    உனது பார்வை!

    *
    அடடா.. என்னே ஒரு அழகு.. அற்புதம் நண்பரே…
    வாழ்த்துக்கள் ;)
    இன்னும் எதிர்பார்க்கிறோம்..

  19. selva Says:

    உலகின் பெண்களுக்கெல்லாம்
    உனதுருவம் அமைந்துவிட்ட மாயக்கனவிலும்…
    உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
    உனது பார்வை!

    ROmba Nallla Iruku.

    Anubavichu ezhudhareenga, hats off…….

  20. அருட்பெருங்கோ Says:

    மரகதவல்லி, சரவணக்குமார், செல்வா,

    அனைவருக்கும் நன்றிகள்!

Leave a Reply