|
Jun
02
|
உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!
*
இமைப்பொழுதிலும்
கவிதை எழுதுவேன்.
இமைப்பது நீயெனில்.
*
உலகின் பெண்களுக்கெல்லாம்
உனதுருவம் அமைந்துவிட்ட மாயக்கனவிலும்…
உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
உனது பார்வை!
*
நீ குடை விரித்ததும்
குடை சாய்ந்தது
மழை வண்டி!
*
இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்
அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன…
சில கவிதைகள்!
June 2nd, 2008 at 9:57 am
அப்ப பிறந்தநாளன்னிக்கு கோயிலுக்கு போயிட்டு வந்தது கவிதை சேகரிக்கவா ??
June 2nd, 2008 at 10:39 am
// இமைப்பொழுதிலும்
கவிதை எழுதுவேன்.
இமைப்பது நீயெனில். //
// நீ குடை விரித்ததும்
குடை சாய்ந்தது
மழை வண்டி! //
// அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன…
சில கவிதைகள்! //
ரொம்ப அருமையா இருக்கிறது… அருள்….
June 2nd, 2008 at 10:43 am
anna ithukku than neenga kovilkku pooneengala..?!?
naan yennamo maareteenganu ninaichen…!!
June 2nd, 2008 at 10:46 am
//இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்//
azhagaana varigal..!!
June 2nd, 2008 at 11:13 am
//நீ குடை விரித்ததும்
குடை சாய்ந்தது
மழை வண்டி!//
//இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்
அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன…
சில கவிதைகள்!//
Superuuu…
Kovil-la Site adikka Koodathunga…
ஆனா இந்த மாதிரி கவிதை எழுதுவதற்காக உங்களை மன்னிக்கலாம்…
June 2nd, 2008 at 11:21 am
// உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!//
அற்புதம் !
June 2nd, 2008 at 11:39 am
//உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
உனது பார்வை!//
…..கொஞ்சம் குறும்பு நிறைய அழகு..!!
சூப்பர் அருள் !!!
June 2nd, 2008 at 2:40 pm
/அப்ப பிறந்தநாளன்னிக்கு கோயிலுக்கு போயிட்டு வந்தது கவிதை சேகரிக்கவா ??/
நான் என்னைக்குங்க்கா கோயிலுக்கு போனேன்? வீட்டில் எல்லோரோடும் போனதுண்டு அவ்வளவுதான்.
கவுஜையெழுத கோயிலுக்கு போய்தான் பாக்கனுமா, என்ன?
June 2nd, 2008 at 2:46 pm
/ரொம்ப அருமையா இருக்கிறது… அருள்/
நன்றிங்க ரீகன்!
June 2nd, 2008 at 2:48 pm
@Sri,
நான் எப்போ கோவிலுக்கு போனேன்? போனவாரம் திருப்பதிக்குதான் போனோம், ஆனா அங்க யாரும் அடிப்பிரார்த்தனையெல்லாம் பண்ணலையே
நன்றி.
June 2nd, 2008 at 2:51 pm
/Superuuu
Kovil-la Site adikka Koodathunga/
அப்படியா செந்தில்? நீங்க கோயில் சிற்பங்களையெல்லாம் பார்த்ததில்லையா?
/ஆனா இந்த மாதிரி கவிதை எழுதுவதற்காக உங்களை மன்னிக்கலாம்/
நன்றிங்க!
June 2nd, 2008 at 2:52 pm
/அற்புதம் !/
நன்றிங்க சேவியர்!
June 2nd, 2008 at 2:53 pm
/கொஞ்சம் குறும்பு நிறைய அழகு..!!
சூப்பர் அருள் !!!/
நன்றிங்க ஆல்பர்ட்.
June 2nd, 2008 at 11:23 pm
நல்லாருக்கு ராசா
June 2nd, 2008 at 11:56 pm
சூப்பர்!!!
June 3rd, 2008 at 9:15 am
கோபிநாத், சின்னப்பையன், இருவருக்கும் நன்றிகள்!
June 3rd, 2008 at 9:36 am
Epdi ipdi…?
Super… unarvugal niraindha varigal..
vaazhthukkal
June 3rd, 2008 at 9:53 am
உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!
*
இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்
அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன…
சில கவிதைகள்!
*
உலகின் பெண்களுக்கெல்லாம்
உனதுருவம் அமைந்துவிட்ட மாயக்கனவிலும்…
உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
உனது பார்வை!
*
அடடா.. என்னே ஒரு அழகு.. அற்புதம் நண்பரே…
வாழ்த்துக்கள்
இன்னும் எதிர்பார்க்கிறோம்..
June 4th, 2008 at 12:59 pm
உலகின் பெண்களுக்கெல்லாம்
உனதுருவம் அமைந்துவிட்ட மாயக்கனவிலும்…
உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
உனது பார்வை!
ROmba Nallla Iruku.
Anubavichu ezhudhareenga, hats off…….
June 4th, 2008 at 1:13 pm
மரகதவல்லி, சரவணக்குமார், செல்வா,
அனைவருக்கும் நன்றிகள்!