~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருவிழாவின் அத்தனைக் கொலுசு சத்தத்திலும்
எனக்கு மட்டும் தனியாகக் கேட்கும்
உன் கொலுசின் இசை!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெள்ளிக்கிழமை இரவானால் எங்கள் வீட்டுக்கு வருவாய்!
உனக்கான ஒலியும் ஒளியும் தொலைக்காட்சியில் ஓட
எனக்கான ஒலியும், ஒளியும் உன் கொலுசிலும் விழியிலும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கல்லூரியின் கடைசி நாளில்,
“நீ பேசுவதைக் கேட்காமல் இனி எப்படி இருப்பேன்” என்றேன்.
உன் கொலுசைக் கழற்றிக் கொடுத்து விட்டுப்போனாய் நீ!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மொட்டை மாடியில் ப(ந)டித்துக்கொண்டிருப்பேன்.
மெதுவாய்ப் படியேறி வரும் உன் கொலுசு சத்தம்
என் மனசோ சலங்கை கட்டியாடும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கொலுசின் திருகாணிப் பூட்டிவிடுகையில்
தெரியாமல்(!) உன் காலுக்கு முத்தமிடும் என் விரல்.
தெரிந்துகொண்டு சத்தமிடும் உன் கொலுசு!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கொலுசை உங்கள் வீட்டுப் பூனையின் கழுத்தில் கட்டி விட்டு
அதன் சேட்டையைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பாய்.
சத்தம்போட்டு அழுது கொண்டிருக்கும் உன் கொலுசு.
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
August 18th, 2006 at 9:44 am
நன்றாக இருக்கிறது கொலுசு கவிதை.
August 21st, 2006 at 5:30 am
//உனக்கான ஒலியும் ஒளியும் தொலைக்காட்சியில் ஓட
எனக்கான ஒலியும், ஒளியும் உன் கொலுசிலும் விழியிலும்!//
அனுபவித்து எழுதியிருப்பீர்கள் போலிக்கிறது அருள் ?;)) மனசுக்குள் ஜல்ஜல்…
August 21st, 2006 at 5:43 am
//கொலுசின் திருகாணிப் பூட்டிவிடுகையில்
தெரியாமல்(!) உன் காலுக்கு முத்தமிடும் என் விரல்.
தெரிந்துகொண்டு சத்தமிடும் உன் கொலுசு!//
இது ரொம்ப அருமையா இருக்குங்க, படிக்கும்போதே உணர்வுகளை தூண்டற மாதிரி இருந்தது.
August 22nd, 2006 at 9:55 am
“வெள்ளிக்கிழமை இரவானால் எங்கள் வீட்டுக்கு வருவாய்!
உனக்கான ஒலியும் ஒளியும் தொலைக்காட்சியில் ஓட
எனக்கான ஒலியும், ஒளியும் உன் கொலுசிலும் விழியிலும்!…
மனதொன்றின் ஆழமான ஏக்கம்தான். அருமையாகச் சொல்லி இருக்கின்றீர்கள்.
பாராட்டுக்கள் அருள்.
August 23rd, 2006 at 5:59 am
நவீன்,
/அனுபவித்து எழுதியிருப்பீர்கள் போலிக்கிறது அருள் ?;)) /
நீங்களும் இதையேதான் கேட்கறீங்க…நானும் அதையேதான் சொல்றேன்…கற்பனை…கற்பனையைத் தவிர வேறில்லை!!! ;)))
/மனசுக்குள் ஜல்ஜல்… /
அந்த ஜல்ஜல் யாருங்கோ??? (ஏதோ நம்மப் பங்குக்கு ஒரு கேள்வி!)
August 24th, 2006 at 3:58 am
தம்பி,
/இது ரொம்ப அருமையா இருக்குங்க, படிக்கும்போதே உணர்வுகளை தூண்டற மாதிரி இருந்தது. /
அப்படியா? மிக்க மகிழ்ச்சி!!!
பாராட்டியமைக்கு ரொம்ப நன்றிங்க…
September 4th, 2006 at 6:07 am
சத்தியா,
/மனதொன்றின் ஆழமான ஏக்கம்தான். /
:)))
/அருமையாகச் சொல்லி இருக்கின்றீர்கள்.
பாராட்டுக்கள் அருள். /
நன்றி சத்தியா…
September 15th, 2006 at 2:25 am
/* கொலுசை உங்கள் வீட்டுப் பூனையின் கழுத்தில் கட்டி விட்டு
அதன் சேட்டையைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பாய்.
சத்தம்போட்டு அழுது கொண்டிருக்கும் உன் கொலுசு */
/* கல்லூரியின் கடைசி நாளில்,
“நீ பேசுவதைக் கேட்காமல் இனி எப்படி இருப்பேன்” என்றேன்.
உன் கொலுசைக் கழற்றிக் கொடுத்து விட்டுப்போனாய் நீ! */
மிகவும் ரசித்த வரிகள் …. வாழ்த்துக்கள் …
./பழனி
September 22nd, 2006 at 2:22 am
very nice work.. all works are excellent .. shows a lot of feelings.. i feel some kind of thabhu shankar style .. am i right..!!!
September 26th, 2006 at 6:18 am
பழனி,
/மிகவும் ரசித்த வரிகள் …. வாழ்த்துக்கள் … /
ரசித்து வாசித்துப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி!!!!
September 26th, 2006 at 10:50 pm
முத்து,
/very nice work.. all works are excellent .. shows a lot of feelings.. i feel some kind of thabhu shankar style .. am i right..!!! /
உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றிகள்!!!
தபூசங்கர் பாதிப்பு இல்லாமல் காதல் கவிதை எழுதவரவில்லையே என்ன செய்ய? அவருடையக் கவிதைகளை அதிகமாய் நான் ரசிப்பது காரணமாய் இருக்கலாம்…
February 15th, 2007 at 2:53 pm
//மொட்டை மாடியில் ப(ந)டித்துக்கொண்டிருப்பேன்.
மெதுவாய்ப் படியேறி வரும் உன் கொலுசு சத்தம்
என் மனசோ சலங்கை கட்டியாடும்!//
ரசித்த வரிகள்
(ரொம்ப நாள் முன்னாடியே படிச்சிருக்கேன்.. ப்ரியன் அனுப்பியிருக்கார் :-))
August 7th, 2007 at 7:59 am
En kadhaliku golusu vanga kelabbiten……..Pena la ink irukkaa…illa Adilayum kadhal dhana……Unga kadhali kuduthu vaithaval !!
August 7th, 2007 at 11:05 pm
வாங்க கவிதை ப்ரியன்,
/En kadhaliku golusu vanga kelabbiten……..Pena la ink irukkaa…illa Adilayum kadhal dhana……/
நல்லது
பேனாவெல்லாம் ஏதுப்பா? எல்லாம் இ-கலப்பை தான்
/Unga kadhali kuduthu vaithaval !!/
அது அவங்கதான சொல்லனும்
August 7th, 2007 at 11:43 pm
எல்லாமே சூப்பர் !
August 7th, 2007 at 11:55 pm
/ எல்லாமே சூப்பர் !/
நன்றிங்க கோவி!
January 6th, 2008 at 9:08 pm
Very nice Poems, felt like an early morning gentle breeze’s touch.
Srividhya
January 7th, 2008 at 5:59 am
/Very nice Poems, felt like an early morning gentle breeze’s touch.
Srividhya/
பாராட்டுக்கு நன்றிங்க ஸ்ரீவித்யா!!!