Aug 07
தனிமையான சில கணங்களில்
இதயத்தின் நான்கு அறைகளிலிலும்
சூழ்ந்து கொள்ளும் வெறுமையின் கனம்
தாங்க முடியாததாய் இருக்கிறது.
கனவுகளைத் தேடி
உறக்கத்துக்கு ஓடிய விழிகளும் கூட
இப்போதெல்லாம்
வெறும் நினைவுகளை சுமந்தபடி
விழித்திருப்…
.
.
.
.
.
.
.
.
.
இப்படித்தான்…
முழுக்கவிதையும்
வாசிக்க நேர்ந்தால்,
என் துயர் தாங்க மாட்டாயென
பாதியிலேயே கைவிடப்படுகின்றன…
என் பல கவிதைகள்!
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
August 7th, 2007 at 11:01 pm
என்னய்யா ஒரே புலம்பலா இருக்கு……
August 7th, 2007 at 11:07 pm
/ என்னய்யா ஒரே புலம்பலா இருக்கு…… :(/
தல,
நகைச்சுவை திங்கள், காதல் செவ்வாய் மாதிரி இது புலம்பல் புதன்
August 7th, 2007 at 11:11 pm
புலம்பல் புதன் முடிந்து அலம்பல் அடுத்தநாள் வரட்டும்.
நன்றாக இருந்து இந்தக் கவிதை வடிவம்.
August 7th, 2007 at 11:17 pm
வாங்க ஜிரா,
/ புலம்பல் புதன் முடிந்து அலம்பல் அடுத்தநாள் வரட்டும்./
அலம்பல் அடுத்த வாரம் ஆரம்பம்!!!
/நன்றாக இருந்து இந்தக் கவிதை வடிவம்./
நன்றி ராகவன்!!!
August 7th, 2007 at 11:25 pm
//இப்படித்தான்…
முழுக்கவிதையும்
வாசிக்க நேர்ந்தால்,
என் துயர் தாங்க மாட்டாயென
பாதியிலேயே கைவிடைப்படுகின்றன…
என் பல கவிதைகள்!//
சிலிர்க்குது பாஸ்…
August 7th, 2007 at 11:29 pm
வாங்க அகிலன்,
/ //இப்படித்தான்…
முழுக்கவிதையும்
வாசிக்க நேர்ந்தால்,
என் துயர் தாங்க மாட்டாயென
பாதியிலேயே கைவிடைப்படுகின்றன…
என் பல கவிதைகள்!//
சிலிர்க்குது பாஸ்…/
முதன் முறையா வந்திருக்கீங்க

நீங்களே இப்படி சொல்லும்போது கொஞ்சம் நல்லா தான் எழுதியிருக்கேன் போல
August 7th, 2007 at 11:35 pm
ம்.. நன்றாக இருக்கிறது..
இது பாதியா…சரியாக எண்ணுங்கள்..14முழு வரிகள் ஒரு அரை வரி எழுதி இருக்கிறீர்கள்…ஒன்பது வரிகள் புள்ளிகளாக விட்டிருக்கிறீர்கள்..
அப்படின்னா பாதிக்கும் மேல எழுதிட்டீங்க
August 7th, 2007 at 11:42 pm
வாங்க முத்துலெட்சுமி,
/ ம்.. நன்றாக இருக்கிறது../
நன்றிங்க!!!
/இது பாதியா…சரியாக எண்ணுங்கள்..14முழு வரிகள் ஒரு அரை வரி எழுதி இருக்கிறீர்கள்…ஒன்பது வரிகள் புள்ளிகளாக விட்டிருக்கிறீர்கள்..
அப்படின்னா பாதிக்கும் மேல எழுதிட்டீங்க :)/
எழுதப்பட்டவை 9 வரிகள்… எழுதப்படாதவை 9 வரிகள்…
ஈற்றில் உள்ள 6 வரிகளும் கைவிடப்பட்ட கவிதையில் சேராது.
எனவே கைவிடப்பட்ட கவிதையில் பாதி தான் எழுதியிருக்கேன்!!!
கணக்கு சரியா வருதுங்களா?
August 7th, 2007 at 11:52 pm
அப்படியா அந்த கணக்கு
சரி சரி அப்ப நீங்க பாதி என்ன பாதிக்கும் மேலயே எழுதாம விட்டுருக்கீங்க..விழித்திருப் ..ன்னு அந்த வரி பாதியிலயே முடிஞ்சிருச்சே..எழுதினது 8அரை வரிதான்..சோ ..ரொம்பவே படிக்கறவங்களை பத்தி மனசுல கவலைப்பட்டிருக்கீங்க…
அக்குவேறு ஆணிவேற அலசிட்டனோ கவிதையை…
August 8th, 2007 at 12:00 am
/ அப்படியா அந்த கணக்கு
சரி சரி அப்ப நீங்க பாதி என்ன பாதிக்கும் மேலயே எழுதாம விட்டுருக்கீங்க..விழித்திருப் ..ன்னு அந்த வரி பாதியிலயே முடிஞ்சிருச்சே..எழுதினது 8அரை வரிதான்../
ஒத்துக்கறேன்…நீங்க கணக்குல புலிதான்னு ஒத்துக்கறேன்…நெக்ஸ்டு கவிதைல சரி பண்ணிட்டு மீட் பண்ணுவோம் :)))
/சோ ..ரொம்பவே படிக்கறவங்களை பத்தி மனசுல கவலைப்பட்டிருக்கீங்க…/
அப்படியும் சொல்லலாம்..பாதிக்கு மேல கவிதை எழுதத்தெரியாம போனது கூட ஒரு காரணமா இருக்கலாம்
/அக்குவேறு ஆணிவேற அலசிட்டனோ கவிதையை… :P/
அக்கா, ஆள விடுங்க
August 8th, 2007 at 1:48 am
\\ அருட்பெருங்கோ said…
அப்படியும் சொல்லலாம்..பாதிக்கு மேல கவிதை எழுதத்தெரியாம போனது கூட ஒரு காரணமா இருக்கலாம்
/அக்குவேறு ஆணிவேற அலசிட்டனோ கவிதையை… :P/
அக்கா, ஆள விடுங்க :)\\\
அருள்
கவிதையும் சூப்பர்
பின்னூட்ட காமெடியும் சூப்பர் ;-))
August 8th, 2007 at 1:53 am
்வாங்க கோபி,
/ \\ அருட்பெருங்கோ said…
அப்படியும் சொல்லலாம்..பாதிக்கு மேல கவிதை எழுதத்தெரியாம போனது கூட ஒரு காரணமா இருக்கலாம்
/அக்குவேறு ஆணிவேற அலசிட்டனோ கவிதையை… :P/
அக்கா, ஆள விடுங்க :)\\\
அருள்
கவிதையும் சூப்பர்
பின்னூட்ட காமெடியும் சூப்பர் ;-))/
நன்றி கோபி!!!
ஆனால் பின்னூட்டத்தில் நடந்த கவிதை திறனாய்வு, மீள் வாசிப்பு, இத்யாதி இத்யாதிகளை நீங்கள் காமெடி என்று சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :)))
August 8th, 2007 at 2:01 am
\\ஆனால் பின்னூட்டத்தில் நடந்த கவிதை திறனாய்வு, மீள் வாசிப்பு, இத்யாதி இத்யாதிகளை நீங்கள் காமெடி என்று சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :))) //
ஆமாம் நான் இதை வழிமொழிகிறேன்..
:))
August 8th, 2007 at 2:13 am
/
ஆமாம் நான் இதை வழிமொழிகிறேன்..
:))/
அக்கா… மறுபடியுமாஆஆஆஆஆஆ???????
August 8th, 2007 at 3:16 am
சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்கோ அருள்… புலம்பல் வேறு விதமா இருக்கும்….. நீங்க புலம்புவதை பார்த்த மன்சுக்கு கஷ்டமா இருக்கு. ஆனால் நல்லாத்தான் புலம்பியிருக்கிறீங்க..
August 8th, 2007 at 4:10 am
/சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்கோ அருள்… புலம்பல் வேறு விதமா இருக்கும்….. நீங்க புலம்புவதை பார்த்த மன்சுக்கு கஷ்டமா இருக்கு. ஆனால் நல்லாத்தான் புலம்பியிருக்கிறீங்க../
்மேடம்,
கல்யாணமா? நான் ரொம்ப சின்னப் பையன்ங்க
கவிதைல காதலிக்கிறதே நல்லா இருக்கு…இப்படியே இருப்போம்
சரி விடுங்க புலம்பல் இல்லாம வழக்கம்போல ஒரு கவிதை(?) வெள்ளிக்கிழமை போட்டுட்லாம்
August 8th, 2007 at 9:56 am
:)) அருள் வித்தியாசமான முயற்சி :)) ரசித்தேன் !! :))
August 9th, 2007 at 5:23 am
Hai Arutperungo, sorry tamila ezhutha theriyala. I am Ms. Bala. Very nice. Keep it up
August 9th, 2007 at 6:48 am
/ :)) அருள் வித்தியாசமான முயற்சி :)) ரசித்தேன் !! :))/
்நன்றி நவீன் :))
August 9th, 2007 at 8:40 am
/Hai Arutperungo, sorry tamila ezhutha theriyala. I am Ms. Bala. Very nice. Keep it up/
்நன்றிங்க பாலா!!!
தமிழில் எழுத இங்கு சென்று பார்க்கவும்
August 24th, 2007 at 4:02 am
புலம்பல் நமக்கு தேவை இல்லை…..கவிதை படிச்சோமா காதல ரசிச்சோமா…..அவ்வளவுதான்
மக்கா…….
August 27th, 2007 at 6:15 am
கவிதை ப்ரியன்,
/ புலம்பல் நமக்கு தேவை இல்லை…..கவிதை படிச்சோமா காதல ரசிச்சோமா…..அவ்வளவுதான்
மக்கா……./
அது!!!!
June 4th, 2008 at 7:26 pm
kavithaiya vida comments romba nalla irunthathu…!!
June 5th, 2008 at 9:58 am
நன்றி ஸ்ரீ!