நினைந்தவர் புலம்பல் - காதல் பூக்கும் மாதம் - 120 கனவுநிலை உரைத்தல் - காதல் பூக்கும் மாதம் - 130
Feb 11

வெள்ளையாக
இருந்தால்
உன் நிழலும்
நிலவுதான்.

‘உன் கூந்தலில்
மேய்ந்து மேய்ந்து
கருப்பாகிப் போயின
என் உதடுகள்’

‘சரி சரி இப்போ சிவப்பாக்கிக்கோ’

‘இச்’

பெண் கிடைத்தாலும்
புதன் கிடைக்காதாம்.

‘பொய் பொய்’

வாரம் தவறாமல் வந்து விடுகிறது புதன்.
வரம் தான் வாங்க வேண்டும்
உன்னைச் சந்திப்பதற்கு.
வியாழன் கிரகத்தில்
நீர் இருக்கிறதா என ஆராய
விண்கலம் அனுப்பினார்களாம்.
அப்படியே
இவள் மனதில்
காதல் இருக்கிறதா என ஆராய
ஒரு பெண்கலம் அலுப்ப சொல்லுங்கள்.
எல்லோரும்
வெள்ளியில் கொலுசு மாட்டினால்
நீயோ கொலுசில் சிரிப்பையும்
சிரிப்பில் வெள்ளியையும் மாட்டுகிறாய்.

சனி தோறும் இருக்கிறாய்
உண்ணா விரதம்.
தினந்தோறும் இருப்பேன்
உன் நா உண்ணும் விரதம்

பிறந்ததும் நீந்த ஆரம்பிக்கும்
மீன் குஞ்சைப்போல
கதிரவன் உதித்ததும்
உன்னை நினைக்க ஆரம்பித்து விடுகிறது
மனது.

‘அப்போ உறங்கும்போது என்னை நினைக்க மாட்டியா?’

‘நான் உறங்கியதுமே
என்னை உன் கனவுக்கு
கடத்திப் போய் விடுகிறது
இந்த உறக்கம்’

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

42 Responses to “திங்.செவ்.புத.வியா.வெள்.சனி.ஞா”

  1. நவீன் ப்ரகாஷ் Says:

    //சனிதோரும் இருப்பேன்
    உண்ணாவிரதம்
    தினந்தோரும் இருப்பேன்
    உன் நா உண்ணும் விரதம் !! //

    :))))

    அருள் காதல் மேளாவே நடத்திவிட்டீர்கள் !! :)) நடக்கட்டும் !!

  2. ப்ரியன் Says:

    அருமை அருட்பெருங்கோ…படித்து சுகித்தேன்…நன்றி

    # டெம்ப்ளேட் கொஞ்சம் கண்ணை பதம் பாக்குதே மாற்றலாமே?!

  3. அருட்பெருங்கோ Says:

    வாங்க நவீன்,

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திக்கிறோமோ?

    /அருள் காதல் மேளாவே நடத்திவிட்டீர்கள் !! :)) நடக்கட்டும் !!/

    நன்றிகள்….

    சரி அதெல்லாம் இருக்கட்டும்… உங்க காதல் நாள் ஸ்பெஷல் என்ன? ;-)

  4. .:: மை ஃபிரண்ட் ::. Says:

    காதல் பூபூக்கும் மாதத்திலேயே என்னை மிகவும் கவர்ந்தது இந்த இடுகைதான். இது வால்பேபர் (wallpaper) சைசில் (size-il) இருந்தால் நல்லது.. நான் என்னுடைய கணிணியின் முகப்பை இந்த வாரத்தில் ஒவ்வொருநாளும் அழகுபடுத்தலாமே!!

    800 X 600 or 1024 X 768.. Thanks.. :-D

  5. பிரேம்குமார் Says:

    அட, பட்டாசு கிளப்புது உங்கள் கவிதைகள். ஒவ்வொன்றும் காதல் தேனில் முக்கியெடுத்த பலா.

  6. நவீன் ப்ரகாஷ் Says:

    //சரி அதெல்லாம் இருக்கட்டும்… உங்க காதல் நாள் ஸ்பெஷல் என்ன? ;-)//

    என்னங்க அருள் :)) நமக்குத்தான் நாளெல்லாம் காதலாச்சே !! காதலுக்கு ஏது நாள் கிழமையெல்லாம் ? :))) இன்னும் எழுதவில்லை அருள் !! :))

  7. சென்ஷி Says:

    super கவிதைகள் - கவிதை கள்

    சென்ஷி

  8. அருட்பெருங்கோ Says:

    வாங்க ப்ரியன்,

    / அருமை அருட்பெருங்கோ…படித்து சுகித்தேன்…நன்றி/

    சுகிக்க வைக்கிற அளவுக்கு கவிதைகள் இருந்ததில் மகிழ்ச்சி!!!

    நன்றிகள்…

    /# டெம்ப்ளேட் கொஞ்சம் கண்ணை பதம் பாக்குதே மாற்றலாமே?!/

    மாற்றிவிட்டேன் ப்ரியன்… சுட்டியமைக்கும் நன்றிகள்!!!

  9. அருட்பெருங்கோ Says:

    வாங்க மை ஃப்ரெண்ட்,

    /காதல் பூபூக்கும் மாதத்திலேயே என்னை மிகவும் கவர்ந்தது இந்த இடுகைதான்./

    மகிழ்ச்சி!

    / இது வால்பேபர் (wallpaper) சைசில் (size-il) இருந்தால் நல்லது.. நான் என்னுடைய கணிணியின் முகப்பை இந்த வாரத்தில் ஒவ்வொருநாளும் அழகுபடுத்தலாமே!!

    800 X 600 or 1024 X 768.. Thanks.. :-D /

    உங்கள் ஆர்வத்திற்கு நன்றி… ஆனால் அந்தப் படத்தின் original resolution E 240 X 180 தான்… நானே 400 X 300 க்கு stretch செய்துதான் போட்டிருக்கேன்… இன்னும் stretch செய்தால் தெளிவாக இருக்காது… central பண்ணுங்க இல்லைனா tiles aa arrange பண்ணிடுங்க…

    நன்றிகள்!!

  10. அருட்பெருங்கோ Says:

    வாங்க பிரேம்,

    /அட, பட்டாசு கிளப்புது உங்கள் கவிதைகள். ஒவ்வொன்றும் காதல் தேனில் முக்கியெடுத்த பலா. /

    அப்படியா? ;-)

    நன்றி நண்பா!

    நீங்க எப்போ சரவெடி கொளுத்தப் போறீங்க?

  11. கோபிநாத் Says:

    ம்ம்….அருள்..
    தூள் கிளப்புரிங்க…

    ஒவ்வொரு நாளும் அருமை….

    வாழ்த்துக்கள் நண்பா…

  12. சத்தியா Says:

    ம்ம்…
    நாட்களை வைத்து
    நச்சென்று கவிதைகள்
    அத்தனையும் அழகுதான்!

    ம்… பாராட்டுக்கள் அருள்!

  13. G.Ragavan Says:

    :-) ஆகா. கோ, வாரவிழா வாரவிழான்னு சொல்வாங்களே…அது இதுதானா? ;-) காதல் நெஞ்சில் வார விழா போலத் தெரியுது.

    ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி எல்லாம் சரிதான். ஆனால் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொருவர்தானே?

  14. சேதுக்கரசி Says:

    திங்கள் - ஐஸ் ஐஸ்
    செவ்வாய் - ம்ம்ம்
    புதன் - ஓவர்
    வியாழன் - ஓகே
    வெள்ளி - வெவ்வே (நாங்களும் தாங்க கொலுசில் சிரிப்பு மாட்டிக்கிறோம்)
    சனி - சீச்சீ
    ஞாயிறு - நன்று

  15. அருட்பெருங்கோ Says:

    நவீன்,

    /என்னங்க அருள் :)) நமக்குத்தான் நாளெல்லாம் காதலாச்சே !! காதலுக்கு ஏது நாள் கிழமையெல்லாம் ? :))) இன்னும் எழுதவில்லை அருள் !! :))/

    எல்லா நாளும் எல்லாப் பொழுதும் காதல் இருக்க வேண்டும் என்பது உண்மைதான்… உலகமேக் கொண்டாடும் நாளுக்கு ஒரு சிரப்பு இருக்கில்லையா?

    சீக்கிரம் எழுதுங்கள்!!!

  16. சுந்தர் / Sundar Says:

    இனிமை !
    இளமை !
    அருமை !

  17. அருட்பெருங்கோ Says:

    வாங்க சென்ஷி (முதல் வருகை! :-) )

    / super கவிதைகள் - கவிதை கள்

    சென்ஷி/

    நன்றி கள் ;-)

  18. அருட்பெருங்கோ Says:

    வாங்க கோபி,

    / ம்ம்….அருள்..
    தூள் கிளப்புரிங்க…

    ஒவ்வொரு நாளும் அருமை….

    வாழ்த்துக்கள் நண்பா…/

    நன்றிங்க… நாள் தோறும் காதல் தான்… கவிதையில் மட்டும் ;-)

  19. அருட்பெருங்கோ Says:

    வாங்க சத்தியா,

    / ம்ம்…
    நாட்களை வைத்து
    நச்சென்று கவிதைகள்
    அத்தனையும் அழகுதான்!

    ம்… பாராட்டுக்கள் அருள்!/

    நன்றிகள் சத்தியா… உங்கள் பிளாக்கரில் புதிய கவிதைகளைக் காணவில்லையே?

  20. கார்த்திக் பிரபு Says:

    யோவ் படம்யா நான்லாம் என்ன எழுதுறேன்னு எனக்கே நினைக்க கேவலமா இருக்கு!!

    ஒவ்வொரு முறை ஊருக்கு போய்ட்டு வரும் போது போடுற பதிவுகள் ஸ்பெசலாய் இருக்கிறதே ..என்னய்யா ஏதாவ்து விஷேசமா??

  21. அருட்பெருங்கோ Says:

    வாங்க ராகவன்,

    / :-) ஆகா. கோ, வாரவிழா வாரவிழான்னு சொல்வாங்களே…அது இதுதானா? ;-) காதல் நெஞ்சில் வார விழா போலத் தெரியுது./

    காதல் விழாக் கொண்டாடனும்னா… காதல்் விழாம இருக்கனுமே!!! :-(

    /ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி எல்லாம் சரிதான். ஆனால் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொருவர்தானே?/

    ஒருத்தர்க்கே இங்க வழியக்காணோமாம்… இதுல ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொருத்தரா?

    உங்கள மாதிரியே என்னையும் நெனச்சுட்டீங்க போல…

  22. G.Ragavan Says:

    // அருட்பெருங்கோ said…
    வாங்க ராகவன்,

    காதல் விழாக் கொண்டாடனும்னா… காதல்் விழாம இருக்கனுமே!!! :-( //

    ஓ! மடியில் விழா(க்) காதலா ;-)

    ////ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி எல்லாம் சரிதான். ஆனால் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொருவர்தானே?//

    ஒருத்தர்க்கே இங்க வழியக்காணோமாம்… இதுல ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொருத்தரா?

    உங்கள மாதிரியே என்னையும் நெனச்சுட்டீங்க போல… //

    தன்னைப் போலப் பிறரையும் நேசின்னு ஏசுநாதரு சொல்லீருக்காருப்பா!

  23. அருட்பெருங்கோ Says:

    வாங்க சேதுக்கரசி,

    /திங்கள் - ஐஸ் ஐஸ்/
    ஐஸ் மாதிரி உருகறேன்னு சொல்றீங்களா? இல்லீங்க மெழுகு மாதிரி!!!

    /செவ்வாய் – ம்ம்ம்/
    ம்ம்ம்!!!

    /புதன் – ஓவர்/
    இல்லை உண்மை!

    /வியாழன் – ஓகே/
    என்ன பெண்கலம் இருக்கா? இருந்தா ஒன்னு கொடுங்க…

    /வெள்ளி - வெவ்வே (நாங்களும் தாங்க கொலுசில் சிரிப்பு மாட்டிக்கிறோம்)/
    எல்லாக் கொலுசும் எங்கக் கொலுசு மாதிரி வராது ;-)

    /சனி – சீச்சீ/
    இதுக்கு பதில் நாளைக்கு சிறப்புக் கவிதைகள்ல இருக்கு!

    /ஞாயிறு – நன்று/
    நன்றியோ நன்றீ!!! :-)))

  24. சத்தியா Says:

    “நன்றிகள் சத்தியா… உங்கள் பிளாக்கரில் புதிய கவிதைகளைக் காணவில்லையே?”…

    ம்ம்… உண்மைதான் அருள். அங்கே நீண்ட இடைவெளிதான். அதை நிவர்த்தி செய்யும் நோக்கோடு… காதலர் தினக் கவிதை நாளை அங்கே மலரும். ஓகேதானே?

  25. அருட்பெருங்கோ Says:

    வாங்க சுந்தர்,

    / இனிமை !
    இளமை !
    அருமை !/

    தங்கள் வருகைக்கும்
    தருகைக்கும்நன்றியுடன்,
    ஒரு புன்னகை :-)

  26. இராம் Says:

    அருட்பெருங்கோ,

    அட்டகாசமா இருக்குங்க…. :)

  27. அருட்பெருங்கோ Says:

    வாங்க கார்த்திக்,

    / யோவ் படம்யா நான்லாம் என்ன எழுதுறேன்னு எனக்கே நினைக்க கேவலமா இருக்கு!!/

    என்ன இப்படி சொல்லிட்டீங்க? உங்க கவிதைக்கு உங்க காதலியோட பாராட்டு தான் ரொம்ப முக்கியம்… ஏன்னா அவங்களுக்கு மட்டும்தான அதோட சூழ்நிலை எல்லாம் நல்லாப் புரியும்…

    கவிதைகளை வாசிக்க எத்தனையோ உதடுகள் இருக்கலாம்… ஆனால் முழுமையாக அனுபவிக்கஓர் இதயம்தான் இருக்க முடியும்!!!

    /ஒவ்வொரு முறை ஊருக்கு போய்ட்டு வரும் போது போடுற பதிவுகள் ஸ்பெசலாய் இருக்கிறதே ..என்னய்யா ஏதாவ்து விஷேசமா??/

    அட நீ வேறப்பா இதெல்லாம் ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதி வச்சது… யாருக்கும் அனுப்பாம வச்சிருந்தா துருப் பிடிச்சிரும்போல இருந்துச்சு… :-)
    அதான் பதிவுல ஏத்திட்டேன்!!!

  28. அருட்பெருங்கோ Says:

    //ஓ! மடியில் விழா(க்) காதலா ;-)//

    மடியில விழாக் காதலா இருந்தா என்ன?
    விழுந்து ‘மடிஞ்ச’ காதலா இருந்தா என்ன?

    ////ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி எல்லாம் சரிதான். ஆனால் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொருவர்தானே?//

    ஒருத்தர்க்கே இங்க வழியக்காணோமாம்… இதுல ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொருத்தரா?

    உங்கள மாதிரியே என்னையும் நெனச்சுட்டீங்க போல… //

    //தன்னைப் போலப் பிறரையும் நேசின்னு ஏசுநாதரு சொல்லீருக்காருப்பா!//

    அப்பா சாமி உங்க அளவுக்கு நேசிக்க வேணாம்… ஏழுல ஒரு பங்கு நேசிங்க போதும்!!! :-)

  29. அருட்பெருங்கோ Says:

    / “நன்றிகள் சத்தியா… உங்கள் பிளாக்கரில் புதிய கவிதைகளைக் காணவில்லையே?”…

    ம்ம்… உண்மைதான் அருள். அங்கே நீண்ட இடைவெளிதான். அதை நிவர்த்தி செய்யும் நோக்கோடு… காதலர் தினக் கவிதை நாளை அங்கே மலரும். ஓகேதானே?/

    ஓ… நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டது இதற்காகத்தானா? அப்படின்னா மலரப்போவது மிக சிறப்பான கவிதையாகதான் இருக்கும்!!!

  30. ஜி Says:

    ஏம்பா அருட்பெருங்கோ…

    காதல்ல இவ்வளவு விசயத்த சொல்றீங்களே…அது என்ன அவ்வளவு பெரிய மேட்டரா… இப்படி சொல்லி சொல்லியே காதலிக்க வச்சிருவீங்க போலிருக்குதே…

    வேண்டாம் ஜி…
    உணர்ச்சிகள கட்டுப்படுத்து…
    இது உனக்கான ஓட்டு இல்ல…
    வேட்டு….

  31. அருட்பெருங்கோ Says:

    வாப்பா இராம்,

    / அருட்பெருங்கோ,

    அட்டகாசமா இருக்குங்க…. :)/

    நன்றி…. நம்ம பதிவுக்கு முதன் முறையா வந்திருக்கீங்க… அதுக்கும் ஒரு வாழ்த்து ;-)

  32. சேதுக்கரசி Says:

    //எல்லாக் கொலுசும் எங்கக் கொலுசு மாதிரி வராது ;-)//

    ஆகா! எங்க கொலுசு(கவிதை)யும் நல்லாத் தான் இருக்கும்.. என்னிக்காவது பதிவு போட்டேன்னா சொல்றேன் :-D

  33. அருட்பெருங்கோ Says:

    வாங்க ஜி,

    /ஏம்பா அருட்பெருங்கோ…

    காதல்ல இவ்வளவு விசயத்த சொல்றீங்களே…அது என்ன அவ்வளவு பெரிய மேட்டரா… இப்படி சொல்லி சொல்லியே காதலிக்க வச்சிருவீங்க போலிருக்குதே…/

    ஹி ஹி மனசுல இப்பவே ஆச வந்திருச்சு போல… ;-)

    /வேண்டாம் ஜி…
    உணர்ச்சிகள கட்டுப்படுத்து…
    இது உனக்கான ஓட்டு இல்ல…
    வேட்டு…./

    கட்டுப்படுத்துறது என்னைக்குமே ஆபத்து ஜி… இந்த ஓட்டும் , வேட்டும் இல்லாம வாழ்க்கைல தப்பிச்சிட முடியுமா? ;)

  34. அருட்பெருங்கோ Says:

    @ சேதுக்கரசி,

    /ஆகா! எங்க கொலுசு(கவிதை)யும் நல்லாத் தான் இருக்கும்.. என்னிக்காவது பதிவு போட்டேன்னா சொல்றேன் :-D/

    போடுங்க போடுங்க… நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்… :-]

  35. சிறில் அலெக்ஸ் Says:

    இந்த வாரம் காதல் வாரமா
    வரமா?

    அருமையா வந்திருக்குதுங்க.
    வாழ்த்துக்கள்.

  36. அருட்பெருங்கோ Says:

    சிறில்

    /இந்த வாரம் காதல் வாரமா
    வரமா?/

    காதல் வந்தால் வாரமெல்லாம் வரம்தான்… :-)

    /அருமையா வந்திருக்குதுங்க.
    வாழ்த்துக்கள். /

    வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சிறில்…

  37. சேவியர் Says:

    அசத்தறீங்க அடுட்பெருங்கோ !!

  38. அருட்பெருங்கோ Says:

    வாங்க சேவியர்,

    /அசத்தறீங்க அடுட்பெருங்கோ !! /

    நன்றிங்க…

    என்னது அடுட் பெருங்கோவா?
    உண்மையிலேயே பேரு ரொம்ப கஷ்டமாதான் இருக்கோ?

  39. நளாயினி Says:

    00.அவ்வளவு லவ்வோ. நிறைய ரசித்தேன்.

  40. அருட்பெருங்கோ Says:

    வாங்க நளாயினி,

    /அவ்வளவு லவ்வோ. நிறைய ரசித்தேன்./

    எப்படி சொன்னாலும் காதல் ரசிப்புக்குரியதுதானே?

  41. நிலவு நண்பன் Says:

    காதலும் காதல் சார்ந்த இடமும் இது

  42. அருட்பெருங்கோ Says:

    வாங்க நிலவு நண்பன்,

    / காதலும் காதல் சார்ந்த இடமும் இது/

    புது டெம்பிளேட் மாற்றியபின், தலைப்பின் கீழ் போடுவதற்காக நான் யோசித்த வரி இது :)

    நீங்களும் அதையே சொல்றீங்க. மகிழ்ச்சி!!!

Leave a Reply