Mar 22

எனக்கு என்னைப் பிடித்திருப்பதே
உனக்கு என்னைப் பிடித்திருப்பதால்தான்.
*
அந்த மூன்று வார்த்தைகளைக் கேட்டாலும்
”எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்” என்று
வெட்கப்படுகிறவளை என்ன செய்ய?
*
கோபமாய் நீயென்னை முறைக்கும்போதெல்லாம்
எனக்கு வருத்தமாயிருக்கிறது.
ஓவியனாய்ப் பிறக்கவில்லையென!
*
உன் வாசனையை
என்னுடன் கூட்டிச்செல்வதற்காகவே
தினமும் உன் கைக்குட்டை வாங்கிச் செல்வேன்.
*
உனக்கொரு ரகசியம் சொல்வதாக நானும்,
எனக்கொரு ரகசியம் சொல்வதாக நீயும் சந்தித்தபோது,
இரண்டுமே ஒன்றுதான் என்பதறிந்து
ரகசியமாய்ச் சிரித்துக் கொள்ளும் காதல்!
*
இதுவரை நீ வந்த
கனவுகளையெல்லாம் சேர்த்து
ஒரே கனவாக காணும்
ஓர் இரவு கிடைக்குமா?
*
ஒவ்வொரு சந்திப்பிலும் நிரூபிக்கிறாய்.
கவிதையென்பது எழுதப்படுவதன்று
நிகழ்த்தப்படுவது என்று!
*
தூசிவிழுந்த இடக்கண்ணில்
நீ ஊதிவிடுவதைக் கண்டு
பொறாமையில் மூடிக்கொள்ளும் வலக்கண்!
*
என் பிறந்தநாளுக்கு அனுப்ப
காதல் தேடும் வாழ்த்து
நீ!
*
நான் தேடுகிறேனென்பதற்காக உடனே கிடைத்துவிடாதே.
ஊடலும் கூடலும் மட்டுமல்ல…
காதலில் தேடலும் சுகம்தான்!
*

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Related Posts...

written by அருட்பெருங்கோ \\ tags: , , ,


32 Responses to “காதல் தேடும் வாழ்த்து”

  1. 1. மீறான் அன்வர் Says:

    //தூசிவிழுந்த இடக்கண்ணில்
    நீ ஊதிவிடுவதைக் கண்டு
    பொறாமையில் மூடிக்கொள்ளும் வலக்கண்!//

    நல்லவேல மக்கா நீங்க யாரயும் காதலிக்கல, பின்னே இப்பவே இப்படின்னா சரி யாதுக்கும் மனசுல போட்டுவச்சுக்குறேன் சாய்ந்திரம் கடற்கறைக்குபோறோம்ல ஏதாவது சிக்குதான்னுபார்ப்போம்.

    காதலிக்காமல் வருத்தப்படும் வாலிபர் சங்கம், மெரினா

  2. 2. வீரசுந்தர் Says:

    அருமையான கவிதைகள்!

  3. 3. . Says:

    (கோபமாய் நீயென்னை முறைக்கும்போதெல்லாம்
    எனக்கு வருத்தமாயிருக்கிறது.
    ஓவியனாய்ப் பிறக்கவில்லையென)

    Oru Kavinchan Oviyanaai uruvedukkum tharunangal alagu..Wonderful..keep it up

  4. 4. கோபிநாத் Says:

    ஆகா…ராசா..காதல் வாழ்த்தா!!!குசும்புய்யா உனக்கு ;) )

    மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்பி ;) )

  5. 5. கோபிநாத் Says:

    \\கோபமாய் நீயென்னை முறைக்கும்போதெல்லாம்
    எனக்கு வருத்தமாயிருக்கிறது.
    ஓவியனாய்ப் பிறக்கவில்லையென!\\

    சூப்பரு ;)

  6. 6. எழில்பாரதி Says:

    அருமையான கவிதை!!!!!

    உனக்கொரு ரகசியம் சொல்வதாக நானும்,
    எனக்கொரு ரகசியம் சொல்வதாக நீயும் சந்தித்தபோது,
    இரண்டுமே ஒன்றுதான் என்பதறிந்து
    ரகசியமாய்ச் சிரித்துக் கொள்ளும் காதல்!//

    அருமையான வரிகள்!!!!

    பிறந்த நாள் அதுவுமா சூப்பர் கவிதை!!!!!

  7. 7. Dreamzz Says:

    //நான் தேடுகிறேனென்பதற்காக உடனே கிடைத்துவிடாதே.
    ஊடலும் கூடலும் மட்டுமல்ல…
    காதலில் தேடலும் சுகம்தான்!/
    adada… super lines :)

    nice kavidhai..

  8. 8. Sri Says:

    //தூசிவிழுந்த இடக்கண்ணில்
    நீ ஊதிவிடுவதைக் கண்டு
    பொறாமையில் மூடிக்கொள்ளும் வலக்கண்!//

    எனக்கு பிடித்த அருமையான வரிகள்…..

  9. 9. Senthil Says:

    Hi Arul…

    Arumaiyana Kavithaigal….

    Senthil
    Bangalore

  10. 10. காயத்ரி Says:

    //இதுவரை நீ வந்த
    கனவுகளையெல்லாம் சேர்த்து
    ஒரே கனவாக காணும்
    ஓர் இரவு கிடைக்குமா?//

    எனக்கு இதுதான் ரொம்ப பிடிச்சது.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருள். இன்னிக்கும் என்னிக்கும் எப்பவும் சந்தோஷமா இருங்க!!

  11. 11. Sri Says:

    hi many more happy returns of the day Arul.

  12. 12. Maragathavalli Says:

    en kavi?
    kavingana imsikiradhu podadha?
    oviyana vera avadhaaram edukka aasaiya?

    arumaiyana varigal… vaazhthukkal

    Belated birthday wishes!!!!

  13. 13. கோபால் Says:

    நான் தேடுகிறேனென்பதற்காக உடனே கிடைத்துவிடாதே.
    ஊடலும் கூடலும் மட்டுமல்ல…
    காதலில் தேடலும் சுகம்தான்!

    superb…

  14. 14. அருட்பெருங்கோ Says:

    \நல்லவேல மக்கா நீங்க யாரயும் காதலிக்கல, பின்னே இப்பவே இப்படின்னா\

    அடப்பாவி நல்ல எண்ணம்யா!

    \யாதுக்கும் மனசுல போட்டுவச்சுக்குறேன் சாய்ந்திரம் கடற்கறைக்குபோறோம்ல ஏதாவது சிக்குதான்னுபார்ப்போம்.\

    வாழ்த்துகள் ;-)

    \காதலிக்காமல் வருத்தப்படும் வாலிபர் சங்கம், மெரினா\

    சங்கத்த மொதல்ல கலைங்கப்பா!

  15. 15. அருட்பெருங்கோ Says:

    /அருமையான கவிதைகள்!/

    நன்றிங்க வீரசுந்தர்

  16. 16. அருட்பெருங்கோ Says:

    /Oru Kavinchan Oviyanaai uruvedukkum tharunangal alagu..Wonderful..keep it up/

    வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க முக்கியப்புள்ளி!

  17. 17. அருட்பெருங்கோ Says:

    /ஆகா…ராசா..காதல் வாழ்த்தா!!!குசும்புய்யா உனக்கு ;) )/

    குசும்பா? அப்படின்னா? இது கவுஜ மாப்ள ;)

    /மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்பி ;) )/

    ரொம்ப ரொம்ப தாமதமான நன்றி மாப்பி! ஆணித்தொல்ல அதிகமாப்போச்சு!

    /சூப்பரு ;) /
    நன்றி !!!

  18. 18. அருட்பெருங்கோ Says:

    /அருமையான வரிகள்!!!!

    பிறந்த நாள் அதுவுமா சூப்பர் கவிதை!!!!!/

    நன்றிங்க எழில்!!!

  19. 19. அருட்பெருங்கோ Says:

    /எனக்கு பிடித்த அருமையான வரிகள்…../

    /hi many more happy returns of the day Arul./

    வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீ!

  20. 20. அருட்பெருங்கோ Says:

    /Arumaiyana Kavithaigal…./

    நன்றிங்க செந்தில்!

  21. 21. அருட்பெருங்கோ Says:

    /எனக்கு இதுதான் ரொம்ப பிடிச்சது.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருள். இன்னிக்கும் என்னிக்கும் எப்பவும் சந்தோஷமா இருங்க!!/

    கவிதைய வாசிச்சதுக்கும், பிறந்த நாள் வாழ்த்துக்கும் நன்றிங்க காயத்ரி!!

  22. 22. Divya Says:

    \\தூசிவிழுந்த இடக்கண்ணில்
    நீ ஊதிவிடுவதைக் கண்டு
    பொறாமையில் மூடிக்கொள்ளும் வலக்கண்!\\

    ரொம்ப அசத்தலாக இருக்கிறது இவ்வரிகள்!

    Belated Birthday wishes ,
    God bless you!!

  23. 23. நிஜமா நல்லவன் Says:

    ///உனக்கொரு ரகசியம் சொல்வதாக நானும்,
    எனக்கொரு ரகசியம் சொல்வதாக நீயும் சந்தித்தபோது,
    இரண்டுமே ஒன்றுதான் என்பதறிந்து
    ரகசியமாய்ச் சிரித்துக் கொள்ளும் காதல்!///

    இது ரொம்ப பிடிச்சிருக்கு.

  24. 24. சகாரா Says:

    தேடல் நல்லாருக்கு ;-) )

  25. 25. Sathya.VK Says:

    Really very nice thinking!!!!!!!!!!!!!1

    Supreb!!!!!

    Great Man!!!!!!!!!!!

  26. 26. அருட்பெருங்கோ Says:

    /ரொம்ப அசத்தலாக இருக்கிறது இவ்வரிகள்!/
    நன்றி திவ்யா!

    /Belated Birthday wishes ,
    God bless you!!/
    இதற்கும் மனமார்ந்த நன்றிகள்

  27. 27. அருட்பெருங்கோ Says:

    /தேடல் நல்லாருக்கு ;-) )/
    நன்றிங்க சகாரா!

  28. 28. அருட்பெருங்கோ Says:

    /Really very nice thinking!!!!!!!!!!!!!1

    Supreb!!!!!

    Great Man!!!!!!!!!!!/
    நன்றிங்க சத்யா!

  29. 29. அருட்பெருங்கோ Says:

    /இது ரொம்ப பிடிச்சிருக்கு./
    நன்றிங்க நல்லவன்!

  30. 30. bala Says:

    arul, ungaluku kavi eludharadhu vittutu oviyam varaya polamnu aasai ya..
    andha field a vachu konjam peru vaazhthutu irukuranga, pavam boss avanga…
    vitrungalen… apuram

    தூசிவிழுந்த இடக்கண்ணில்
    நீ ஊதிவிடுவதைக் கண்டு
    பொறாமையில் மூடிக்கொள்ளும் வலக்கண்

    kannula thhosi vilundha oothum podhu innoru moodikaradhuku, innaiku seriyana vilakam kedachiruku… :)
    idhaiyum try panren…

  31. 31. அருட்பெருங்கோ Says:

    பாலா,

    நன்றி. இதையும் முயற்சி பண்றீங்களா? என்னமோ.. நல்லாருந்தா சரி!!!

  32. 32. NANDHINI Says:

    THEDALUM SUGAMTHAN ……………… SUMAIYANA SUGAMANA SUGAM.

Leave a Reply