Nov 29
அதிகாலை வேளையில்
உனக்காகத் தான்
நடக்க ஆர்ம்பித்தேன்
சில நேரம் தென்றலாய்த்
தேகம் தீண்டுகிறாய்
சில நேரம் புயலாய்ப்
புரட்டிப் போடுகிறாய்
வாரி விட்டத் தலைமுடியை
நீ கலைத்து மகிழ்வதையும்
வண்டியில் போகும்போது
நீ உரசி மோதுவதையும்
விரும்பி இரசிக்கிறேன்
உலகின் எந்த மூலைக்குப் போனாலும்
உன் முகம் தான்
உன் ஸ்பரிசம் தான்
நாட்கணக்காய் உண்ண மறந்தாலும்
நொடிப்பொழுதும் உனை மறந்தேனா?
உன்னையே உயிர் மூச்சாகக் கொண்டேன்
சாகும் வரையும் உன்னையே சுவாசித்திருப்பேன்
காற்றே!
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
June 4th, 2008 at 6:35 pm
ஓ காற்றா………..?!?
June 4th, 2008 at 6:49 pm
anna onemore doubt…..!!
neenga kaadhalikka ponne kidaikkaliyaa..?!?