காதல் வா(வ)ரம் - 4 ( காதல் நாள் வாழ்த்துகள்! ) ஹலோ யார் பேசறது? - 2
Feb 14

இறுக்கி மூடிய இமைகளுக்குள்ளும்
எப்படியேனும் நுழைந்துவிடுகிறது உன் நினைவு!
*
எல்லா கணங்களும் உன் நினைவுதானென்று
பொய் சொல்லவில்லை. ஆனால்…
ஒரு நொடிக்கு குறைந்தது ஒரு முறையேனும்
உன்னைதான் நினைக்கிறேன்.
*
நீ பிரிந்தபிறகும் கூட
‘நீ பிரியாமல் இருந்தால்…’ எனத் துவங்கி
ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறது இதயம்!
*
இதயம் லேசாக்கிய உன் நினைவெல்லாம்
இன்று சுமக்க முடியா கனமாய் மாறுவதேன்?
*
உன்னை நினைத்துக்கொள்ள மறக்கும்வரை
பிரிந்துவிட்டதாய் சொல்வதெல்லாம் பொய்தான்!
*
முட்களை மட்டும்
பூக்கத் தெரிந்த ரோஜாச்செடி
என் காதல்!
*

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

16 Responses to “காதல் வாரம் - 5”

  1. பிரேம்குமார் Says:

    காதல் வாரத்தின் ஐந்தாவது பகுதியும் அருமை!

  2. ஸ்ரீ Says:

    நொடிக்கு ஒரு முறை நினைக்குறீங்களா :O. “Exception” வருவதற்கு அது தான் காரணம் மாமே :)

  3. Anonymous Says:

    Ko !! Ungaloda 2 KAVITHAI ANANTHAVIKATAN la vanthirukku… Vazhthukkal…

    Nambi (ursnambi@rediffmail.com)

  4. கருணா Says:

    “இறுக்கி மூடிய இமைகளுக்குள்ளும்
    எப்படியேனும் நுழைந்துவிடுகிறது உன் நினைவு”

    “நீ பிரியாமல் இருந்தால்…”

    “முட்களை மட்டும்…”

    நெஞ்சைத் தொட்டது…

    “கோ” வின் கோலங்கள் தொடரட்டும்

  5. aruna Says:

    //முட்களை மட்டும்
    பூக்கத் தெரிந்த ரோஜாச்செடி
    என் காதல்!//

    என்ன சொல்வது?முட்கள் பூக்குமா என்று கேட்பதைத் தவிர? அருமை!!
    அன்புடன் அருணா

  6. மங்களூர் சிவா Says:

    //முட்களை மட்டும்
    பூக்கத் தெரிந்த ரோஜாச்செடி
    என் காதல்!//

    ஏனப்பா ஜோகம் திடீர்னு :(

  7. Dreamzz Says:

    கடைசி கவிதை… டச் செய்துடீங்க ! என்னத்த சொல்ல!

  8. ரசிகன் Says:

    //நீ பிரிந்தபிறகும் கூட
    ‘நீ பிரியாமல் இருந்தால்…’ எனத் துவங்கி
    ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறது இதயம்!
    //
    //முட்களை மட்டும்
    பூக்கத் தெரிந்த ரோஜாச்செடி
    என் காதல்!//

    கலக்கல் மாமே…:)

  9. prema Says:

    இறுக்கி மூடிய இமைகளுக்குள்ளும்
    எப்படியேனும் நுழைந்துவிடுகிறது உன் நினைவு!
    *
    எல்லா கணங்களும் உன் நினைவுதானென்று
    பொய் சொல்லவில்லை. ஆனால்…
    ஒரு நொடிக்கு குறைந்தது ஒரு முறையேனும்
    உன்னைதான் நினைக்கிறேன்.

    Unga kavithai ellame arumai ..eppadithaan ippadi yosikiringa ..matravarkal manasilum irukkum unmayin velippadu ungal kavithai …vazhthukkal….

  10. Anonymous Says:

    //நீ பிரிந்தபிறகும் கூட
    ‘நீ பிரியாமல் இருந்தால்…’ எனத் துவங்கி
    ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறது இதயம்!
    //
    அழகான கவிதைக்கு இந்தாங்க ஒரு பூ.
    என்ன கடைசியில் முள் குத்திடுச்சு…
    ————–குந்தவை———–

  11. அருட்பெருங்கோ Says:

    @பிரேம்,
    நன்றிங்க பிரேம்.

    @ஸ்ரீ,
    கவுஜைக்கும் ஜாவாவுக்கும் என்ன சம்பந்தம் மாப்ள?

  12. அருட்பெருங்கோ Says:

    @ப்ரேமா,
    கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க ப்ரேமா.

    @குந்தவை,
    வாழ்த்துப்பூவுக்கு நன்றிங்க குந்தவை.

  13. கோபால் Says:

    என்னங்க அருட்பெருங்கோ பிப் 15 க்கு சோகக் காதல் கவிதை, பிப் 14 யாராவது முடியாதுனு சொல்லிட்டாங்களா? எப்போதும் போல் கவிதை அருமை வாழ்த்துக்கள். அப்படியே என்னோட பிளாக்குக்கும் வருகை தந்து உங்க கருத்த தெரிவிங்க‌.

  14. manikandan Says:

    அழகான கவிதை வாழ்த்து manikandan.nellai

  15. R.REGHU Says:

    YOUR KAVITHAI ELLAM SUPPER.

  16. அருட்பெருங்கோ Says:

    நன்றிங்க ரெகு

Leave a Reply