தண்டவாளப்பயணம் (சங்கம்னா ரெண்டு போட்டிக்காக) பிறந்த வீடா? புகுந்த வீடா?
May 05

நீ நினைக்கிறேன்.

நான் பேசுகிறாய்.

நமக்குள் காதல் வராமல்

என்ன செய்யும்?

 

*

 

பூக்களற்ற தீவுகளுக்கு

மணம்வீசப் பயணிக்கிறது.

உன் கூந்தலிலிருந்து

பிரிந்த இழையொன்று.

 

*

 

நேரில் கோபித்துக்கொண்டு

கனவில் வந்து கொஞ்சும்

மக்கு நீ!

 

*

 

குடையின்றி நீ வருகையில்

வெயிலுக்கும் மழைக்கும் சண்டை!

 

*

 

நீ நிலாச்சோறுண்ணும்

பௌர்ணமி இரவுகளில்

காதல் கள்ளுண்ணும்

நிலா!

 

இசையுடன் கேட்க : (நன்றி ஜோஷ்வா ஸ்ரீதர் ;))

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , , , ,

21 Responses to “காதல் (திங்)கள் (குரல் பதிவு)”

  1. Sri Says:

    //நீ நினைக்கிறேன்.

    நான் பேசுகிறாய்.

    நமக்குள் காதல் வராமல்

    என்ன செய்யும்?//
    :-)koonutteenga……!!
    first puriyala….. :-)
    ippo purinjathu….!!

  2. Sri Says:

    //இழையொன்று//

    இழையா??? இலையா???

    இல்ல இதழா???

  3. அருட்பெருங்கோ Says:

    நன்றி ஸ்ரீ.

    இழை - thread/fibre!
    ஒரு முடிய குறிப்பிட்டேன்.

  4. ஸ்ரீ Says:

    அடடா மாப்பி அட்டகாசம். இதை நீ பாட்டா பாடி இருந்தா நல்லா இருந்திருக்குமே! என்ன நான் சொல்றது ;)

  5. அருட்பெருங்கோ Says:

    எதுக்கு மாப்ள? இப்பவே மக்கள் பயந்து போயிருக்காங்க. இன்னும் வேற கொடும படுத்தனுமா? ;)

  6. Asha Peter Says:

    நல்ல கற்பனை.
    நல்ல கவிதைகள்.
    ஆனால், உங்கள் கவிதைகளில் தபூ சங்கரின் தாக்கம் நிறைய உள்ளதே?
    ஏன்? தவிர்க்கலாமே!!

  7. அருட்பெருங்கோ Says:

    ஆஷா பீட்டர்,

    நன்றிங்க. காதல் கவிதையெழதும்போது தபூசங்கர் தாக்கம் இல்லாம இருக்குமா?

    மாத்திக்கப் பாக்கறேன்!!

  8. Senthil Kumar Says:

    Good words…

    :)))))))

    Senthil,
    Bangalore

  9. அருட்பெருங்கோ Says:

    நன்றிங்க செந்தில்!

  10. adaleru Says:

    கலக்கற மாப்ள

  11. முத்துலெட்சுமி Says:

    கவிதை வழக்கம்போல அருமை.. குரல் என்னவோ ரொம்ப தயக்கமா இருக்கு..

  12. அருட்பெருங்கோ Says:

    அடலேறு, நன்றிங்க!

    முத்தக்கா, நன்றி! ம்ம்ம் நண்பர்களும்கூட அதான் சொன்னாங்க…குரல் நடுங்குதுன்னு… இதுக்கெல்லாம் பயிற்சி வேணும் போல :)

  13. Selva Says:

    Unga kavidhaigal, kadhai ellam romba nalla iruku

    Romba Nalla yosikareenga, Innum Nalla Yosikka Vazhthukal

  14. அருட்பெருங்கோ Says:

    வாசிப்புக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க செல்வா!

  15. Manju Raj Says:

    kavidhai ellame superb……..really i enjoyed a lot……..i expect more

  16. Mastan Oli Says:

    again superb….

    how does it possible a.perungo?

    all are supebs…

    unmelaye kalakurenge arutpesungo…

  17. அருட்பெருங்கோ Says:

    மஞ்சு, மஸ்தான்,

    இருவருக்கும் நன்றிகள்!

  18. ponnakk Says:

    இனி பகலில் முத்தமிடாதே.
    நிழல்கள் வெட்கப்படுகின்றன.

    *

    nalla karppanai

    பூக்களற்ற தீவுகளுக்கு

    மணம்வீசப் பயணிக்கிறது.

    உன் கூந்தலிலிருந்து

    பிரிந்த இழையொன்று.
    sathiyama konittinga… oh my god wat a imagination…ethanai oru naesam..

  19. Reegan Says:

    //நீ நினைக்கிறேன்.

    நான் பேசுகிறாய்.

    நமக்குள் காதல் வராமல்

    என்ன செய்யும்?//

    - arrambame asaththal, konjam confiuse irundhathu..but suuuuuuuuuuuper……..

  20. kalai Says:

    Kavithayil, kaathalai katchithamaai kakki irukkureergal :)
    athanai arumai…

  21. அருட்பெருங்கோ Says:

    பொன்னக், ரீகன், கலை,

    மூவருக்கும் நன்றிகள்!

Leave a Reply