Apr 29
அணிகலன் இல்லாத கோபத்தில்
என் முத்தமெடுத்து அணிந்து கொள்கின்றன
உன் இதழ்கள்.
*
கண்ணில் முத்தமிட வந்தேன்.
இமை ம(ப)றித்துக்கொண்டது.
*
“ஆயிரம் முத்தங்களுடன்,
_____”
என்று கையொப்பமிட்ட கடிதங்கள் போதும்.
ஓர் இதழொப்பம் செய்.
*
கேட்டதும் கிடைக்கும் முத்தம் யாருக்கு வேண்டும்?
உன் முத்தச்சண்டையை விட
முத்தத்துக்கான சண்டையே என் விருப்பம்.
*
ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
வெட்கத்துடன் சொல்கிறாய் -
“லூசு… குட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்”
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
April 29th, 2008 at 9:04 am
April 29th, 2008 at 9:46 am
//உன் முத்தச்சண்டையை விட
முத்தத்துக்கான சண்டையே என் விருப்பம்.//
அருமை..அருமை..தொடரட்டும் உமது முத்தச்சண்டை
April 29th, 2008 at 9:50 am
கலக்குறீங்க பாஸ்!! காதல் சொட்டுது!!
அதுலயும் கடைசி கவிதை முதல்ல புரியல.. புரிஞ்சப்பறம் ஆஹா!!!
April 29th, 2008 at 10:19 am
தலைப்பும் கவிதைகளும் அழகு
//அணிகலன் இல்லாத கோபத்தில்
என் முத்தமெடுத்து அணிந்து கொள்கின்றன
உன் இதழ்கள்.
//
வெகு அழகு
//ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
வெட்கத்துடன் சொல்கிறாய் -
“லூசு… குட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்//
ஆகா, என்னமா சிந்திக்கிறாங்கய்யா…
April 29th, 2008 at 10:54 am
//ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
வெட்கத்துடன் சொல்கிறாய் -
“லூசு… குட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்”//
ஐ.. அந்தப் புள்ள ரொம்ப வெவரமா இருக்கும் போலருக்கே..
April 29th, 2008 at 10:57 am
யோவ்வ்வ் இப்படி ஆளாளுக்கு கிளம்பிட்டா நாங்க எல்லாம் போனி பண்ண வேணாமா…. கடைசி கவிதை ஜூப்பரு…………….
April 29th, 2008 at 11:08 am
@ஸ்ரீ,
நன்றிங்க.
@ராம்,
நன்றி ராம். கவுஜ சண்டதான் தொடரும்
April 29th, 2008 at 11:08 am
@வீரசுந்தர்,
நன்றி சுந்தர். கடைசி கவிதை மொதல்ல எப்படி புரியும்? கடைசியிலதான் புரியும்.
@பிரேம்,
நன்றி தல. சிந்தனை செய் மனமே னு பாட்டெல்லாம் இருக்கே தெரியாதா?
April 29th, 2008 at 11:08 am
@ஆழியூரான்,
புள்ளைக எல்லாம் வெவரமாத்தாம்யா இருக்காங்க!
@நந்தா,
கி கி சமுதாயத்துக்கு ஏதோ நம்மாள முடிஞ்ச சேவை
நன்றி.
April 29th, 2008 at 11:14 am
April 29th, 2008 at 12:10 pm
நன்றிங்க்கா.
அந்த பதில் மொக்கதான்
April 29th, 2008 at 12:39 pm
/அணிகலன் இல்லாத கோபத்தில்
என் முத்தமெடுத்து அணிந்து கொள்கின்றன
உன் இதழ்கள்./
:))))))))
April 29th, 2008 at 1:16 pm
இதற்கு பெயர்தான் நட்சித்திர கவிதையோ… சூப்பர்
April 29th, 2008 at 1:34 pm
திகழ்மிளிர், அந்த சிரிப்புக்கு என்னங்க அர்த்தம்?
அபூ, நட்சத்திர கவிதையா? புரியலயே. எதுக்கும் நன்றி சொல்லிக்கிறேன்.
April 29th, 2008 at 4:21 pm
உங்களது கவிதைகளின் இடையே * வருதே.. அதான் சொன்னேன்.. ஆனால் அதற்கு வேரொரு அர்த்தம் உண்டு தமிழ் தளங்கள்
என்ற விண்ணில்
நட்சத்திரம் போல்
மிண்ணுகிறது…
உங்களது கவிதைகள்
April 29th, 2008 at 9:46 pm
அருள் கவிதைகள் அருமை!!!!!
//அணிகலன் இல்லாத கோபத்தில்
என் முத்தமெடுத்து அணிந்து கொள்கின்றன
உன் இதழ்கள்.//
சூப்பர்….
//கேட்டதும் கிடைக்கும் முத்தம் யாருக்கு வேண்டும்?
உன் முத்தச்சண்டையை விட
முத்தத்துக்கான சண்டையே என் விருப்பம்.//
*
//ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
வெட்கத்துடன் சொல்கிறாய் -
“லூசு… குட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்”//
அருமையிலும் அருமை……..
April 30th, 2008 at 9:24 am
ஆகா.. அபூ ரொம்ப கூச்சமா இருக்கே!
April 30th, 2008 at 9:25 am
ரொம்ப நன்றிங்க எழில்
April 30th, 2008 at 6:20 pm
//கடைசி கவிதை மொதல்ல எப்படி புரியும்//
நான் கீழ இருந்து மேல வாசிச்சேன்!!
(எப்படி!!!!
)
April 30th, 2008 at 6:52 pm
கீழ இருந்து மேல வாசிச்சா மேல இருக்கிற கவிதைதான கடைசி கவிதை?
April 30th, 2008 at 7:43 pm
ஹீரோ டயலாக் சூப்பர்.
(அட கவித நல்லா இருக்குன்னு அர்த்தம்பா)
May 1st, 2008 at 2:39 pm
நன்றிங்க சிவா.
புதிய அர்த்தங்களை புரிய வைத்தமைக்கு!
May 2nd, 2008 at 10:54 am
//கண்ணில் முத்தமிட வந்தேன்.
இமை ம(ப)றித்துக்கொண்டது.//
Kavithai Superrrrrrrruuuuuuuuuuuuuuuuu…
Senthil,
Bangalore
May 2nd, 2008 at 1:30 pm
நன்றிங்க செந்தில்!
May 6th, 2008 at 1:38 pm
Superb Arul..
Pattya Kelapunga…
Ravi
May 6th, 2008 at 7:40 pm
கடைசி கவிதை நல்லாயிருக்குய்யா……
May 6th, 2008 at 9:32 pm
நன்றிங்க ரவி.
இராம், நன்றிப்பா! அது ஏன்யா கடைசி கவிதையே எல்லாருக்கும் பிடிக்குது?
May 7th, 2008 at 12:15 pm
chumma sollakoodadhu romba simple and uber.
May 7th, 2008 at 12:46 pm
//ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
வெட்கத்துடன் சொல்கிறாய் -
“லூசு… குட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்”//
superrrbb lines! i really enjoyed reading these lines. good one.
May 8th, 2008 at 9:38 am
கருணாகரன், தமிழ்,
இருவருக்கும் நன்றிகள்!!
June 3rd, 2008 at 11:06 pm
superb………………………
June 4th, 2008 at 11:38 am
நன்றி நித்யா!