முதல் நாள் இன்று - ஒளிப்பதிவு சிறுகதை – காதல் எனப்படுவது யாதெனில்
Jun 26

நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!

*

இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!

*

குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!

*

உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!

*

எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

49 Responses to “காதல் கவிதைகள்”

  1. அதிரை அபூ Says:

    Nice.. Very nice….. good one….

  2. sri Says:

    Anna nice kavithai’s..!! :-)

  3. .:: மை ஃபிரண்ட் ::. Says:

    super. ;-)

  4. Srianand Says:

    romba nalla kavithaikal ….
    இனி மொட்டைமாடியில் தூங்காதே.
    போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
    நிலா!

    *

    romba nalla varikal

  5. Senthil Kumar Says:

    all kavithai’s are superrrr!!!!!!!!

  6. Dhans Says:

    ரொம்ப நல்ல இருக்குடா கவிதைலாம். எங்கடா ரொம்ப நாலா பையன காணோம்னு நேத்துதான் நெனச்சேன் இனிக்கு கக்கிட்ட. :)

  7. முத்துலெட்சுமி Says:

    வழக்கம்போல அருமை.. ரோஜாக்கவிதை நல்ல கற்பனை தான்

  8. முத்துலெட்சுமி Says:

    ஸ்ரீக்காக காதலெனப்படுவது யாதெனில் இன்னும் எழுதலையா?

  9. நிர்ஷன் Says:

    /உன் வீட்டு ரோஜா மொட்டு
    மலரவே இல்லையென குழம்பாதே.
    மலர்தான் உன்னை முத்தமிட
    எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!

    //

    அருமையான வரிகள்.

  10. ஸ்ரீ Says:

    //எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
    எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
    உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!//

    இது நல்லா கீதுபா.

  11. Senthil Kumar Says:

    //உன் வீட்டு ரோஜா மொட்டு
    மலரவே இல்லையென குழம்பாதே.
    மலர்தான் உன்னை முத்தமிட
    எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!//

    Thabu sankar Effect–aa…

  12. RamyaRamani Says:

    மிகவும் அழகான கவிதைகள்.

    \\இனி மொட்டைமாடியில் தூங்காதே.
    போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
    நிலா!\\

    இந்த வரிகள் அருமை :)

  13. Alb Says:

    எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
    எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
    உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!….

    அருமையான வரிகள் அருள்!! ;-)
    வாழ்த்துகள் ;-) ;-)

  14. மாதரசன் Says:

    ரொம்ப நாளுக்குப் பின் ஒரு நல்ல கவிதையை வாசித்த திருப்தி…

  15. அருட்பெருங்கோ Says:

    அதிரை அபூ, sri, my friend, srianand, senthil kumar,

    அனைவருக்கும் நன்றிகள்!!!

  16. அருட்பெருங்கோ Says:

    /ரொம்ப நல்ல இருக்குடா கவிதைலாம். எங்கடா ரொம்ப நாலா பையன காணோம்னு நேத்துதான் நெனச்சேன் இனிக்கு கக்கிட்ட./

    என்னது கக்கிட்டனா??? :-)

    ஏற்கனவே, வர வர நீ எழுதறதெல்லாம் மொக்கையா இருக்குன்னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க… நீயும் இப்படி சொல்லிட்டியா? :P

    உன்னோட செல்பேசி எண் மடலனுப்பு - arutperungo@arutperungo.com

  17. அருட்பெருங்கோ Says:

    /வழக்கம்போல அருமை.. ரோஜாக்கவிதை நல்ல கற்பனை தான்/

    நன்றிங்க்கா :)

    /ஸ்ரீக்காக காதலெனப்படுவது யாதெனில் இன்னும் எழுதலையா?/

    அடுத்த வாரம் புலம்பல் புதன்ல எழுதிட்றேன் ;)

  18. அருட்பெருங்கோ Says:

    நன்றிங்க நிர்ஷன்.

    நன்றி ஸ்ரீ!

    செந்தில், அது இலியானா எஃபெக்ட் ;)

  19. அருட்பெருங்கோ Says:

    நன்றிங்க ரம்யா.

    நன்றிங்க ஆல்பர்ட்.

    நன்றிங்க மாதரசன்.

  20. சேர்ம ராஜா Says:

    அருமை
    அருள்..

  21. Ananymous Says:

    Arul ..
    Ellam nalla than pa irukku … Ana namma “காதல் கூடம்” mattum romba naala pathilaye nikkuthu pa .. Atha konjam mudikka koodatha .. :-( :-)

  22. Reegan Says:

    // இனி மொட்டைமாடியில் தூங்காதே.
    போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
    நிலா! //

    ஏற்கனவே இவளுக எல்லாம் அலப்பறைய குடுக்குறாளுக…
    இதுல நீங்க வேற… அப்ப அப்ப வந்து புகச்சல குடுத்துட்டு போறீங்க …

  23. Subha Says:

    ம்ம்ம்ம்……. ரொம்ப நல்லா இருக்கு..:)

  24. சேவியர் Says:

    //நீ வந்து பேசுகையில்
    பூக்களுக்கு வருத்தம்தான்.
    காற்றிலேயே தேன் குடித்து
    திரும்பி விடுகின்றனவாம்
    தேனீக்கள்!//

    அசத்தல் :)

  25. mani Says:

    HI VERY VERY NISE KAVITHAI

  26. M.Saravana Kumar Says:

    இனி மொட்டைமாடியில் தூங்காதே.
    போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
    நிலா!

    அடடா.. அழகான கலக்கல் கவிதையிது..
    :)

  27. M.Saravana Kumar Says:

    எப்படி இப்படியெல்லாம் தோனுது நண்பரே.. ;)

    நமக்கு குப்பற படுத்து யோசிச்சாலும் வர மாட்டேங்குது.. :(

  28. அருட்பெருங்கோ Says:

    நன்றிங்க சேர்மராஜா!

    ananymous,
    முடிச்சிட்றேன் :)

    ரீகன்,
    என்ன இப்படி சொல்லிட்டீங்க? :(

  29. அருட்பெருங்கோ Says:

    ரொம்ப நன்றிங்க சுபா!

    நன்றிங்க சேவியர்!

    நன்றிங்க மணி!

    நன்றிங்க சரவணக்குமார். எப்பவும் சொல்றதுதான், வெட்டியா இருந்தாதான் இப்படியெல்லாம் தோனும்! :)

  30. ssubash12@yahoo.com - Srilanka Says:

    நிலா - தன் நட்சத்திரக் குழந்தைகளுக்கு
    உன்னைக் காட்டி உணVOOட்டுகிறது -
    அதோ பார்……………..
    அழகிய நிலா என்று……………..

    UR POEMS ARE SO LOVABLE ………….ARUL……

    GREETINGS FROM
    S*SUBASH

  31. junaid Says:

    all poems are very nice. http://www.junaid-hasani.blogspot.com. this is my blog spot. hope u read that also. thanking you.

  32. M.Saravana Kumar Says:

    அட.. நானும் வெட்டி பய தான்..
    ஆனா வெட்டியா இருக்கிற அந்த தவத்த ;-) எந்த சிந்தனையாலும் சிதைக்க கூடாதுன்னு விரும்பற ஒரு ஆளு..

  33. M.Saravana Kumar Says:

    :)
    என்ன பண்றது.. அப்பிடியே வாழ்ந்து பழகிட்டோம்..
    :)

  34. karthik Says:

    thabu shankar,arivumathi ivargal varisaiyil in arutperungo

    vazhthukkal tholar,
    karthik param

  35. அருட்பெருங்கோ Says:

    /நிலா - தன் நட்சத்திரக் குழந்தைகளுக்கு
    உன்னைக் காட்டி உணVOOட்டுகிறது -
    அதோ பார்……………..
    அழகிய நிலா என்று……………..
    UR POEMS ARE SO LOVABLE ………….ARUL……/
    வாழ்த்துக்கு நன்றிங்க சுபாஷ்!

    / all poems are very nice. http://www.junaid-hasani.blogspot.com. this is my blog spot. hope u read that also. thanking you./
    நன்றிங்க ஜுனைத்! வாசிக்கிறேன்!

    / அட.. நானும் வெட்டி பய தான்..
    ஆனா வெட்டியா இருக்கிற அந்த தவத்த எந்த சிந்தனையாலும் சிதைக்க கூடாதுன்னு விரும்பற ஒரு ஆளு../
    சரவணக்குமார் நீங்க எங்கேயோ போயிட்டீங்க :)

    / என்ன பண்றது.. அப்பிடியே வாழ்ந்து பழகிட்டோம்../
    பழக்கத்த மாத்துங்க! ;)

    / thabu shankar,arivumathi ivargal varisaiyil in arutperungo
    vazhthukkal tholar,
    karthik param/
    கார்த்திக், இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் டூ மச்சா தெரியல???

  36. nellaiyan Says:

    கவிதை ரொம்ப நல்லாயிருக்கு’ல, இருந்தாலும் ஒரு சந்தேகம்
    “இனி மொட்டைமாடியில் தூங்காதே.
    போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
    நிலா!”
    நிலா அடம்பிடிக்கிறது பயத்தினாலா, இல்ல வெக்கத்தினாலா!!!

  37. ramesh Says:

    good

  38. அருட்பெருங்கோ Says:

    /நிலா அடம்பிடிக்கிறது பயத்தினாலா, இல்ல வெக்கத்தினாலா!!!/

    தலைவிகிட்ட இருந்து ஒளிய வாங்கிகிட்டே இருக்கலாம்னு அல்லது
    தலைவிய பாத்துட்டே இருக்கனும்னு…

    /good/

    நன்றிங்க ரமேஷ்!

  39. karthikeyan Says:

    kavitahikal mihavum nantraka irukkintrana
    etahi thotaraum

  40. அருட்பெருங்கோ Says:

    /kavitahikal mihavum nantraka irukkintrana
    etahi thotaraum/
    நன்றிங்க கார்த்திக்கேயன்!

  41. sivakumar Says:

    கவிதைகள் are very very nice

  42. அருட்பெருங்கோ Says:

    /கவிதைகள் are very very nice/

    நன்றிங்க சிவக்குமார்!

  43. thiruppal Says:

    fantastic keep it up

  44. அருட்பெருங்கோ Says:

    /fantastic keep it up/

    நன்றிங்க thiruppal!

  45. Somesh Kumar Says:

    un ezhuthKKOlil Maikkhu bathilaaga Kaathalai ittu ezhuthukiRaaYO… Vaazhga un Kaathal… vaLarga un kavithai

  46. அருட்பெருங்கோ Says:

    வாழ்த்துக்கு நன்றிங்க சோமேஷ்குமார்!

  47. vhalarmathi Says:

    கவிதை எல்லாம் மிகவும் அருமையா இருக்கு..
    படிச்சதும் ஒரு கவிதை உலகத்துல இருக்குற மாதிரி இருந்துச்சு..
    ரொம்ப நல்லா இருக்கு..என் வாழ்த்துக்கள்..

  48. அருட்பெருங்கோ Says:

    /கவிதை எல்லாம் மிகவும் அருமையா இருக்கு..
    படிச்சதும் ஒரு கவிதை உலகத்துல இருக்குற மாதிரி இருந்துச்சு..
    ரொம்ப நல்லா இருக்கு..என் வாழ்த்துக்கள்../

    பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க வளர்மதி!

  49. suresh Says:

    super

Leave a Reply