|
Apr
18
|
‘எனக்கு உன்னைப்போல
கவிதையெழுதத் தெரியாது’ என்கிறாய்.
எனக்கும்தான் உன்னைப்போல
கவிதை பேசத் தெரியாது!
*
கல்லூரியில் கூட
யாரையும் பார்த்து தேர்வெழுதியதில்லை.
காதலில் மட்டும்
உன்னைப் பார்த்துதான் கவிதையெழுதுகிறேன்.
*
கவிதையெழுதுவதில்
என் விரல்களை வென்றுவிடுகின்றன
உன் இதழ்கள்!
*
நீ கையொப்பமிட்டு தரும்
எந்தப் புத்தகமும்
கவிதைப் புத்தகம்தான்!
*
இப்படி வாசிக்க…
ஆயிரம் கவிதைகள் இருக்கின்றன.
நேசிக்க…நீ மட்டும்தான்!
*
ஒருவழியா வேர்ட்பிரசுக்கு மாறி ஒரு கவுஜைப் பதிவும் எழுதியாச்சு. ப்ளாக்கர் – வேர்ட்பிரஸ் மாற்றம் நடந்தபோதும், வேர்ட்பிரஸ் நீட்சிகளைப் பயன்படுத்தத் துவங்கியபோதும் சிரமமிருந்தாலும் எப்படியோ சமாளிச்சாச்சு! வேர்ட்பிரசுக்கு மாறினது குறித்த விரிவான பதிவு ஓரிரு நாளில் பதிக்கிறேன். புது வீடு எப்படியிருக்குனு சொல்லிட்டுப்போங்க
April 19th, 2008 at 10:39 pm
சூப்பரா இருக்கு மாப்பி தளம் இப்போ. வாழ்த்துக்கள். கலக்கு
April 20th, 2008 at 6:41 pm
ம்ம்ம் நன்றி ஸ்ரீ! இன்னும் நல்லா பண்ணலாம். அதுக்கு வேர்ட்பிரஸ்கூட இன்னும் கொஞ்சம் சண்டை போடனும்
April 21st, 2008 at 8:46 am
//‘எனக்கு உன்னைப்போல
கவிதையெழுதத் தெரியாது’ என்கிறாய்.
எனக்கும்தான் உன்னைப்போல
கவிதை பேசத் தெரியாது!//
ஆரம்பமே அசத்தல்………!!!!!!!
அருமையான கவிதைகள்…..!!!
April 21st, 2008 at 8:50 am
//கவிதை காதல் – வேர்ட்பிரசில் முதல் பதிவு!//
சொன்ன மாதிரியே செஞ்சிட்டீங்க………:-)
April 21st, 2008 at 8:53 am
புதிய தளமும் கவிதைகளும் அருமை அருட்பெருங்கோ !!
பிலாகரிலிருந்து வோர்ட்பிரஸ்கு மாற வழிமுறைகளை எங்களுக்கும் சொல்லித்தரலாமே ?
April 21st, 2008 at 9:06 am
வழக்கம் போல அருமையான கவிதைகள் அருள்…
வாழ்த்துகள் புதிய தளத்திற்க்கு…..
Senthil,
Bangalore
April 21st, 2008 at 9:36 am
@ஸ்ரீ,
நன்றிங்க! சொன்ன மாதிரி செஞ்சுட்டனா? செய்ற மாதிரி முன்னாடியே சொல்லிட்டேன்
April 21st, 2008 at 9:42 am
@தனசேகர்,
நன்றிங்க தனசேகர்.
கண்டிப்பா எழுதறேன். ஆனா நான் எழுதறது மொக்க கலந்துதான் இருக்கும்
ரவி எழதியிருக்கிற வேர்ட்பிரெஸ் நிறுவுவது, இற்றைப்படுத்துவது எப்படி? ங்கற பதிவ படிச்சுப்பாருங்க!
April 21st, 2008 at 9:43 am
@செந்தில்,
நன்றிங்க செந்தில்!
April 21st, 2008 at 9:48 am
Really fantastic…. My hearty Congrats….
April 21st, 2008 at 9:55 am
//சொன்ன மாதிரி செஞ்சுட்டனா? செய்ற மாதிரி முன்னாடியே சொல்லிட்டேன்.//
ம்ம்மம்……அடுத்த பதிவு எப்போ???:-)
April 21st, 2008 at 10:03 am
@selna,
really fantastic னு எத சொல்றீங்க? கவிதையவா? தளத்தையா? எதுவா இருந்தாலும் நன்றிங்க!!!
@Sri,
இது எதோ போட்டு வாங்கற மாதிரி இருக்கே
அடுத்த பதிவு கவிதை கிடையாது. வேர்ட்பிரசுக்கு மாறினத பத்தி சாயுங்காலமா எழுதனும்!
April 21st, 2008 at 10:06 am
yennathu poottu vangarena…!??!
achachoo enakku athellam theriyathu….:-(
April 21st, 2008 at 10:09 am
ஆகா, எதுக்கு சீரியசாகறீங்க? கூல்!
April 21st, 2008 at 10:10 am
April 21st, 2008 at 10:29 am
வீடு அழகா இருக்கு கோ. ஏகப்பட்ட அறைகள் இருக்குதே. சுத்திப் பாக்கவே நாள் ஆகும் போல!
//இப்படி வாசிக்க…
ஆயிரம் கவிதைகள் இருக்கின்றன.
நேசிக்க…நீ மட்டும்தான்!
//
அருமை…
(ஆனா ‘இப்படி’ தேவையா?)
//நீ கையொப்பமிட்டு தரும்
எந்தப் புத்தகமும்
கவிதைப் புத்தகம்தான்!
//
ஆகா கவித, கவித (சரி, காசோலை புத்தகம் கொடுத்தா?)
April 21st, 2008 at 10:44 am
/வீடு அழகா இருக்கு கோ. ஏகப்பட்ட அறைகள் இருக்குதே. சுத்திப் பாக்கவே நாள் ஆகும் போல!/
நன்றி தல! இதுல இன்னொரு வசதியும் இருக்கு. அறைகள என்னோட விருப்பப்படி வரிசை கட்டியிருக்கேன். அத உங்க விருப்பப்படியும் மாத்திக்கலாம். ஒரு அறையோட தலைய பிடிச்சி இழுத்து இன்னொரு அறைக்கு கீழ விட்டுப்பாருங்க
ஒரு அறையவே உங்களுக்கு பிடிக்கலன்னா அந்த பச்ச நிற பொத்தான அமுக்குங்க!
/அருமை (ஆனா ‘இப்படி’ தேவையா?)/
சரி தூக்கிடலாம்.
/ஆகா கவித, கவித (சரி, காசோலை புத்தகம் கொடுத்தா?)/
கி கி காச விட அந்த கையொப்பத்துக்கு மதிப்பு அதிகமில்லையா?
April 21st, 2008 at 10:46 am
epavum pola…. nanbare…
pinnitinga….
vaazhuthukkal…..
valarga inum….
anbudan
Maragathavalli
April 21st, 2008 at 11:27 am
/epavum pola. nanbare
pinnitinga
vaazhuthukkal..
valarga inum. /
வாழ்த்துக்கு நன்றிங்க மரகதவல்லி!
April 21st, 2008 at 12:08 pm
அருமை
உங்களது கவிதை மட்டும் இல்லை
தள வடிவமைப்புத்தான்…..
வாழ்த்துக்கள்….
April 21st, 2008 at 1:33 pm
@அபூபக்கர்,
வாழ்த்துகளுக்கு நன்றிங்க அபூ. தள வடிவமைப்புக்கு நான் தனியா எதுவும் பண்ணலையே! எல்லாமே இணையத்துல இலவசமா கிடைக்கிறதுதான்!
April 23rd, 2008 at 11:18 am
all kavathi are super ………………….
April 23rd, 2008 at 11:30 am
நன்றிங்க மதி.
April 30th, 2008 at 5:07 pm
lovesai anbu ammu
October 12th, 2008 at 10:39 am
Attakasam!
January 24th, 2009 at 1:01 pm
super sir