பொருள் – 1 :
களவும் – திருட்டு ( முதலான தீயப் பழக்கங்களை )
கற்று மற – எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு பிறகு மறந்து விட வேண்டும்……
பொருள் – 2:
களவும் கற்று – களவு வாழ்க்கையின் நினைவுகளை
மற – கற்பு ( திருமண ) வாழ்க்கையில் மறக்கவும்….
இரண்டில் எது சரி ?
இரண்டுமே தவறா?
தமிழறிந்தவர்கள் சொல்லுங்கள்!
பிறகு,
தாயை நேசிப்பதாகச் காட்டிக்கொள்ள மனைவியைக் கொடுமைப் படுத்தும் கணவர்களுக்குப் பிடித்தப் பழமொழி – தாய்க்குப் பின் தாரம்!
ஏதோ தாய்க்கு அடுத்த நிலையில் தாரத்தை வைப்பது போல அந்தப் பழமொழி அர்த்தப்படுத்தப் பட்டு விட்டது.
பொதுவாக ஒருத் துறையில் சிறந்து விளங்கும் ஒருவரை அதேத் துறையில் கடந்த காலத்தில் சிறந்து விளங்கிய ஒருவரோடு ஒப்பிட்டுப் பேசும்போது,
அவருக்குப் பிறகு இவர்தான் சிறந்தவர் என்று சொல்லுவது வழக்கம்.
உ-ம் : சிவாஜிக்குப் பிறகு சிறந்த நடிகர் கமல்தான்! ( உதாரணத்துக்கு தான் சொல்லியுள்ளேன்… )
அது போல ஒருவனுடைய வாழ்விலும் முதல் 25 – 30 வருடங்களுக்குத் தாய்த் துணையாய் இருக்கிறாள்…
அதற்குப் பிறகு அல்லது அவளுடைய காலத்துக்குப் பிறகு துணையாய் இருப்பவள் – மனைவி…
எனவே சுருக்கமாக சொன்னால்,
தாய்க்குப் பின் தான் தாரம் – என்பது தவறு
தாய்க்குப் பின் தாரம் தான் என்பதே சரி - எனது கருத்து
You may like these too...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
May 14th, 2006 at 8:16 am
“மணமானவர்கள் மட்டும்” என்றதால்
கருத்து கூறவில்லை.
அன்புடன்,
துபாய் ராஜா.