ஒரு காதல் பயணம் - 10 எட்டாக்கனி
Jun 12

அது ஓர் அழகிய நிலாக்காலம்.
கவலை வெயில் சுடாத இனிய இரவைப்போன்றது.
இரவின் மடியில் இனிய உறக்கத்தில் நான்.

என்னைத் தேடி மெல்ல வருகிறது ஒரு கனவு.
ஆனால், கலைகிற கனவுகள் எனக்குப் பிடிப்பதில்லை.
கனவைத் துரத்தி விடுகிறேன் நான்.

அதன் வருகையும் என் துரத்தலும் தொடர்கதை.
கனவைத் துரத்தி துரத்தி கடைசியில் கனவின் பின்னே நான்.
அதனை விரட்டும் முயற்சியில் தொடங்கிய என் துரத்தல்
எப்படியாகினும் அதனை பிடித்து விடுகிற முயற்சியில் முடிகிறது.

ஓர் பௌர்ணமி இரவில் அந்தக் கனவும் கை (கண்?) கூடுகிற‌து.
கனவுக்கே உண்டான இயல்போடு
அது கலைந்து விட முயலும்போதெல்லாம்
நனவாகும் ஆசைகாட்டி அதனை என்னோடு இருத்திக் கொள்கிறேன்.

இறுதியில், தான் நனவாகப் பிறக்கவில்லை
தான் கலைவதற்காக தான் பிறந்ததாக
எனக்கந்த கனவு சொல்கிற‌போது
நான் மரணிக்கிறேன்.

கலைகிற கனவுகள் எனக்குப் பிடிப்பதில்லை.
இப்போதும் என் கனவு கலையவில்லை.
கனவு காண்கையிலேயே,
எனக்கு தான் நிகழ்ந்துவிட்டது…
மரணம்!

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

29 Responses to “என் கனவு”

  1. ஜி Says:

    :))

    கனவு கண்டுக் கொண்டிருக்கும்போதே மரணித்தால் கனவு அப்படியே கண்டினியூ ஆகுமா??

  2. அருட்பெருங்கோ Says:

    /கனவு கண்டுக் கொண்டிருக்கும்போதே மரணித்தால் கனவு அப்படியே கண்டினியூ ஆகுமா??
    /

    நல்ல கேள்விதான். கனவு காண்கையிலேயே மரணிக்கும்போது, கனவு கலைவதை உணரவேண்டிய வலியிருக்காது. சரியா ஜி?

    ஆனால் கனவு கலைவதை விரும்பாத எல்லோருக்கும் அது வாய்த்துவிடுவதில்லை.

  3. காயத்ரி Says:

    //கனவுக்கே உண்டான இயல்போடு
    அது கலைந்து விட முயலும்போதெல்லாம்
    நனவாகும் ஆசைகாட்டி அதனை என்னோடு இருத்திக் கொள்கிறேன்.//

    ம்ம்.. நல்லாருக்கு! எல்லாருக்கும் வர்ற ஆசைதான். ஆமா ஏம்ப்பா இவ்ளோ சோகம்?

  4. அருட்பெருங்கோ Says:

    //கனவுக்கே உண்டான இயல்போடு
    அது கலைந்து விட முயலும்போதெல்லாம்
    நனவாகும் ஆசைகாட்டி அதனை என்னோடு இருத்திக் கொள்கிறேன்.//

    ம்ம்.. நல்லாருக்கு! எல்லாருக்கும் வர்ற ஆசைதான். ஆமா ஏம்ப்பா இவ்ளோ சோகம்? //

    ம்ம் ந‌ன்றிங்க‌ காய‌த்ரி…
    என்ன‌ செய்றது… சிலருக்கு ச‌ந்தோச‌ம் நாலுகால் பாய்ச்ச‌லில் வ‌ந்தால் சோக‌ம் பின்னாடியே எட்டுகால் பாய்ச்ச‌லில் வ‌ருகிற‌து.

  5. G.Ragavan Says:

    ஒரு கனவு போயின்
    மறு கனவு
    காண்பதற்கு
    இரவும் உண்டு
    உறக்கமும் உண்டு
    கலையும் கனவுக்கு
    காவு கொடுப்பதா
    ஏற்கோம் ஏற்கோம்

  6. அருட்பெருங்கோ Says:

    /ஒரு கனவு போயின்
    மறு கனவு
    காண்பதற்கு
    இரவும் உண்டு
    உறக்கமும் உண்டு
    கலையும் கனவுக்கு
    காவு கொடுப்பதா
    ஏற்கோம் ஏற்கோம் /

    ராகவன்,

    ஒரு கனவு போயின்
    மறு கனவு
    காண்பதற்கு
    இரவும் உண்டு
    உறக்கமும் உண்டு தான்…

    ஆனால் கண்கள்???

    கலைகிற கனவின் பின்னே
    அலைகிற கண்கள்…

    கனவு கலைவதை காண்ச் சகியாமல்
    இயக்கம் நிறுத்தும் மூளை…

    கனவைப் போலவே
    கலைந்து போகிற மனசு…

    சவமாகிறது…உடல்!

  7. பிரேம்குமார் Says:

    அருட்பெருங்கோ,

    ரொம்பவே அழகான, ஆழமான கருத்துக்கொண்ட படைப்பு இது.

    வாழ்த்துக்க‌ள்

    // G.Ragavan said…
    ஒரு கனவு போயின்
    மறு கனவு
    காண்பதற்கு
    இரவும் உண்டு
    உறக்கமும் உண்டு
    கலையும் கனவுக்கு
    காவு கொடுப்பதா
    ஏற்கோம் ஏற்கோம்
    //

    ரிப்பீட்டு

  8. மீறான் அன்வர் Says:

    feelingsum oru sugamthaan thalaivaa

    anubavikkiRavanukkuthaan athoota sugamtheRiyum

    maraNaththiRkuppin kalayaatha kanavuthaan…..

    azakaa irukku… ;-) thodarungkaL

    appatiyee tracka maathungka thalaa… kadalleeyum konjam comedy pannungka….

    athukkaaha kadala kai vittutaatheengka :))

    natputan
    mIRAn anwar

  9. Anonymous Says:

    What a lovely blog…unga karpanai/kavidhai romba azhaga irukke :) reallllly fantastic!
    i got to real all of them.
    - Yazhini

  10. நவீன் ப்ரகாஷ் Says:

    கனவுகள் சோகம் விதைக்கிறதா அருள் ?? :)))

  11. அருட்பெருங்கோ Says:

    //அருட்பெருங்கோ,

    ரொம்பவே அழகான, ஆழமான கருத்துக்கொண்ட படைப்பு இது.

    வாழ்த்துக்கள்//

    ஆமாம் பிரேம் அழகான, ஆழமானதுதான் கனவு!!!
    வாழ்த்துக்களுக்கு நன்றிகள்…

    // G.Ragavan said…
    ஒரு கனவு போயின்
    மறு கனவு
    காண்பதற்கு
    இரவும் உண்டு
    உறக்கமும் உண்டு
    கலையும் கனவுக்கு
    காவு கொடுப்பதா
    ஏற்கோம் ஏற்கோம்
    //

    ரிப்பீட்டு //

    அவருக்கு சொன்னதே உமக்கும் ரிப்பீட்டு!!!

  12. அருட்பெருங்கோ Says:

    //feelingsum oru sugamthaan thalaivaa

    anubavikkiRavanukkuthaan athoota sugamtheRiyum

    maraNaththiRkuppin kalayaatha kanavuthaan…..

    azakaa irukku… ;-) thodarungkaL

    appatiyee tracka maathungka thalaa… kadalleeyum konjam comedy pannungka….

    athukkaaha kadala kai vittutaatheengka :))

    natputan
    mIRAn anநர் //

    சோகமும் சுகம்தான்.

    நானும் கனவைத் தொடரத்தான் பார்க்கிறேன்…

    காதல் கவிதை பண்றதா? காமெடி பண்றதா?

    ரெண்டும் ஒன்னுதான்னு சொல்றீங்களா?

  13. அருட்பெருங்கோ Says:

    //What a lovely blog…unga karpanai/kavidhai romba azhaga irukke :) reallllly fantastic!
    i got to real all of them.
    - Yazhinஇ //

    நன்றி யாழினி.

    படித்துவிட்டு சொல்லுங்கள்.

  14. அருட்பெருங்கோ Says:

    //கனவுகள் சோகம் விதைக்கிறதா அருள் ?? :))) //

    நவீன்,

    கனவுகள் கலையும்போது , நினைவாக சோகத்தை விதைத்து விட்டே செல்கின்றன!!!

  15. துர்கா|†hµrgåh Says:

    ரொம்ப நாளாக இந்த பக்கம் வரவில்லை.வந்த பொழுது இனிய கவிதை விருந்து:)
    ///கனவு கண்டுக் கொண்டிருக்கும்போதே மரணித்தால் கனவு அப்படியே கண்டினியூ ஆகுமா??
    ///
    அடஅடா ஜி அண்ணா…நீங்க இம்புட்டு பெரிய அறிவாளியா?என்னமா கேள்வி கேட்குறீங்க!ஒரு தடவை try பண்ணி பாருங்க.அப்போ கனவு கண்டினியூ ஆகுமா இல்லையா என்று தெரியும்.

  16. arun Says:

    dream is a celluloid movie developed and screened only once.

  17. .:: மை ஃபிரண்ட் ::. Says:

    வந்தார் காதல் இளவரசன்..
    அழகிய கவிதையோடு. :-D

  18. காயத்ரி Says:

    என்ன மனோ? வந்து வந்து பாக்கறேன்..புதுசா ஒன்னும் எழுதலயா? :(

  19. அருட்பெருங்கோ Says:

    //ரொம்ப நாளாக இந்த பக்கம் வரவில்லை.வந்த பொழுது இனிய கவிதை விருந்து:)//

    வ‌ருகைக்கும், க‌ருத்துக்கும் ந‌ன்றி துர்கா.

  20. அருட்பெருங்கோ Says:

    /dream is a celluloid movie developed and screened only once./

    அருண்,

    உங்கள் கருத்துக்கு நன்றி.
    சில சமயம் ஒருமுறை மட்டுமே வருகிற‌ கனவுகள், கண்களையேக் களவாடிக்கொண்டு போய்விடுகின்றன.

  21. G.Ragavan Says:

    // அருட்பெருங்கோ said…
    /ஒரு கனவு போயின்
    மறு கனவு
    காண்பதற்கு
    இரவும் உண்டு
    உறக்கமும் உண்டு
    கலையும் கனவுக்கு
    காவு கொடுப்பதா
    ஏற்கோம் ஏற்கோம் /

    ராகவன்,

    ஒரு கனவு போயின்
    மறு கனவு
    காண்பதற்கு
    இரவும் உண்டு
    உறக்கமும் உண்டு தான்…

    ஆனால் கண்கள்???

    கலைகிற கனவின் பின்னே
    அலைகிற கண்கள்…

    கனவு கலைவதை காண்ச் சகியாமல்
    இயக்கம் நிறுத்தும் மூளை…

    கனவைப் போலவே
    கலைந்து போகிற மனசு…

    சவமாகிறது…உடல்! //

    எந்தக் கண்களும்
    கண்டதில்லை கனவை
    கண்டவைகள் கனவல்ல
    எந்தக் கண்களும்
    கண்டதில்லை மனதை
    காணாத கூட்டணிக்குக்
    காணும் கண்களையும்
    வாழும் வாழ்க்கையையும்
    படையல் போட
    மடையலாக வேண்டுமோ!
    கசப்பென்றாலும்
    களிம்பைத் தின்பவன்
    நலம் பெறுவான்
    நஞ்சென்று புரிந்தும்
    கசப்பைத் தின்பவன்?

  22. அருட்பெருங்கோ Says:

    //வந்தார் காதல் இளவரசன்..
    அழகிய கவிதையோடு. :-D //

    நன்றி மை ஃப்ரெண்ட்…

  23. அருட்பெருங்கோ Says:

    /எந்தக் கண்களும்
    கண்டதில்லை கனவை
    கண்டவைகள் கனவல்ல
    எந்தக் கண்களும்
    கண்டதில்லை மனதை
    காணாத கூட்டணிக்குக்
    காணும் கண்களையும்
    வாழும் வாழ்க்கையையும்
    படையல் போட
    மடையலாக வேண்டுமோ!
    கசப்பென்றாலும்
    களிம்பைத் தின்பவன்
    நலம் பெறுவான்
    நஞ்சென்று புரிந்தும்
    கசப்பைத் தின்பவன்?
    /

    ந‌ன்றி ராக‌வ‌ன்.

    ப‌லியிடப்ப‌ட்ட‌‌தை
    இனியெங்கே ப‌டைய‌ல் போட?

  24. சிறில் அலெக்ஸ் Says:

    எப்டி இருக்கீங்க உங்களுக்கென ஒரு அழைப்பு .. பதிவு போடுங்க.

    http://theyn.blogspot.com/2007/06/7-9.html

  25. நளாயினி Says:

    வித்தியாசமான கவிதை. ஆனாலும் மனசு பாரமாச்சு.

  26. அருட்பெருங்கோ Says:

    / எப்டி இருக்கீங்க உங்களுக்கென ஒரு அழைப்பு .. பதிவு போடுங்க./

    சிறில்

    பதிவு போட்டாச்சு :)

  27. அருட்பெருங்கோ Says:

    / வித்தியாசமான கவிதை. ஆனாலும் மனசு பாரமாச்சு./

    நன்றிங்க நளாயினி…
    கொஞ்சம் சோகக்கவிதை முயற்சி பண்ணினேன்…அதான்…

  28. ponnakk Says:

    கலைகிற கனவுகள் எனக்குப் பிடிப்பதில்லை.
    இப்போதும் என் கனவு கலையவில்லை.
    கனவு காண்கையிலேயே,
    எனக்கு தான் நிகழ்ந்துவிட்டது…
    மரணம்!

    ShareThis

    ennatha solvathu…arut…

  29. அருட்பெருங்கோ Says:

    சொல்ற மாதிரி ஒன்னுமில்லங்கறீங்களா? :)

Leave a Reply