ஒரு காதல் பயணம் - 4 கவிதை ஆறு
Jun 26

அவன் :

உன்
விழி பேசியதை
மொழி பெயர்த்தால்
கவிதை என்கிறார்கள்.

*

இதயத்தில் நிறைந்து
விழி வழியே
வழிகிறது
நம் காதல்!

*

பார்த்து பார்த்து
செய்த கண்கள் உனக்கு!
அதைப் பார்த்துக்
கொண்டிருப்பதற்காகவே
செய்த கண்கள் எனக்கு!

*

தினமும்
உன் வருகைக்காகக்
காத்திருக்கின்றன..
பகலில் என் கண்களும்..
இரவில் என் கனவும்..

*

உனக்குத் தெரியுமா?
நம் கண்களும் கூடக்
காதலிக்கின்றன!
தொட்டுக் கொள்ளாமல்
அவை ஆயிரம்
க(வி)தைகளைப் பேசுவதைப் பார்!
நம்மைப் போல…

*

திறந்தே இருப்பதால்தான்
என்செவியில் உன்வார்த்தைகள்
ஒலிக்கிறதென்றால்,
இமைகள் மூடிய பின்னும்
என் விழியில் உன் பிம்பம் விழுகிறதே…
அது எப்படி?

*

என் கண்களுக்கு ஏனிந்தப் பேராசை?
எல்லாக் கணமும் உன் கண்களைப்
பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமாம்!
உன் கண்கள் இமைக்கும் பொழுது மட்டுமே
என் கண்களும் இமைப்பதைப் பார்!

*

அவள் :

போதும்…போதும்…
கவிதைகள் கொஞ்சம்
ஓய்வெடுக்கட்டும்!
நீ கண்களால் மட்டும்
காதல் செய்!

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

18 Responses to “கண்களால் காதல் செய்!”

  1. Naveen Prakash Says:

    //உன்
    விழி பேசியதை
    மொழி பெயர்த்தால்
    கவிதை என்கிறார்கள்.// :))

    தங்கள் பக்கமெல்லாம் காதல் வாசம் ! அருள் எனக்கொரு சந்தேகம். நீங்க வாசம் செய்தது கரூரிலா இல்லை காதலூரிலா?? : ))

    விழிமொழியினை அழகாக மொழிபெயர்த்துள்ளீர்கள் !!

  2. அருட்பெருங்கோ Says:

    /தங்கள் பக்கமெல்லாம் காதல் வாசம் ! அருள் எனக்கொரு சந்தேகம். நீங்க வாசம் செய்தது கரூரிலா இல்லை காதலூரிலா?? : )) /

    ஆஹா கேட்பது யார் காதல் கவி நவீன் தானே?

    /விழிமொழியினை அழகாக மொழிபெயர்த்துள்ளீர்கள் !!/

    மொழி பெயர்ப்பு மட்டுமே என்னுடையது.. அழகாய் இருந்தால் அதற்குக் காரணம் விழியும் விழியின் மொழியும்!!

    அன்புடன்,
    அருள்.

  3. சத்தியா Says:

    “போதும்…போதும்…
    கவிதைகள் கொஞ்சம்
    ஓய்வெடுக்கட்டும்!
    நீ கண்களால் மட்டும்
    காதல் செய்!…..

    அருமை!……

  4. தேவ் | Dev Says:

    //திறந்தே இருப்பதால்தான்
    என்செவியில் உன்வார்த்தைகள்
    ஒலிக்கிறதென்றால்,
    இமைகள் மூடிய பின்னும்
    என் விழியில் உன் பிம்பம் விழுகிறதே…
    அது எப்படி//

    அது எப்படி?

    அருள், காதலைச் சொல்லும் பதிவுகளுக்கு கருப்பு உடை ஏனோ? மாற்றலாமே!!!

  5. ப்ரியன் Says:

    /*பார்த்து பார்த்து
    செய்த கண்கள் உனக்கு!
    அதைப் பார்த்துக்
    கொண்டிருப்பதற்காகவே
    செய்த கண்கள் எனக்கு!*/

    /*தினமும்
    உன் வருகைக்காகக்
    காத்திருக்கின்றன..
    பகலில் என் கண்களும்..
    இரவில் என் கனவும்..*/

    /*இமைகள் மூடிய பின்னும்
    என் விழியில் உன் பிம்பம் விழுகிறதே…
    அது எப்படி?*/

    இவை அழகு அருள்!

    /*உன் கண்கள் இமைக்கும் பொழுது மட்டுமே
    என் கண்களும் இமைப்பதைப் பார்!*/

    இதெல்லாம் ஓவரு ஆமா சொல்லிபுட்டேன்.

    /*
    போதும்…போதும்…
    கவிதைகள் கொஞ்சம்
    ஓய்வெடுக்கட்டும்!*/

    பெண்கள் போதும் போதும் னு சொன்னா வேணும் வேணும் னு அர்த்தமாம்…

  6. அருட்பெருங்கோ Says:

    நன்றி சத்தியா…

    வழமை போன்ற பாராட்டுக்கு!!

  7. அருட்பெருங்கோ Says:

    தேவ்,

    வருகைக்கும் தருகைக்கும் நன்றி!

    /அருள், காதலைச் சொல்லும் பதிவுகளுக்கு கருப்பு உடை ஏனோ? மாற்றலாமே!!! /

    ம்ம்ம்….மாற்றுகிறேன் விரைவில்…. :))

  8. அருட்பெருங்கோ Says:

    ப்ரியன்,

    விரிவான ரசிப்புக்கும் விமர்சனத்துக்கும் நன்றிகள்!!

    /இதெல்லாம் ஓவரு ஆமா சொல்லிபுட்டேன்./

    :))

    /பெண்கள் போதும் போதும் னு சொன்னா வேணும் வேணும் னு அர்த்தமாம்… /

    நான் பெண்களுடன் அதிகம் பழகியதில்லை ப்ரியன்! உங்களைப் போலத் தெரிந்தவர்கள் சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!!

  9. ப்ரியன் Says:

    /*நான் பெண்களுடன் அதிகம் பழகியதில்லை ப்ரியன்! உங்களைப் போலத் தெரிந்தவர்கள் சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!! */

    நானே அர்த்தமாம் னு தான் சொல்லியிருக்கேன் அர்த்தம் னு சொல்லலே,சோ…எனக்கும் பெண்களுடன் அதிக பழக்கமில்லை எனக் கொள்க :)

  10. அருட்பெருங்கோ Says:

    /நானே அர்த்தமாம் னு தான் சொல்லியிருக்கேன் அர்த்தம் னு சொல்லலே,சோ…எனக்கும் பெண்களுடன் அதிக பழக்கமில்லை எனக் கொள்க :)
    /

    புரிகிறது ப்ரியன்…

    பெண்ணிடம் னு சொல்லியிருக்கனுமோ?? மன்னிச்சுக்குங்க :))

  11. sivagnanamji(#16342789) Says:

    // கருவூரிலா…..காதலூரிலா…//

    என்ன கேள்வி இது?
    காதலூரில் இருந்துதானே கருவூருக்கு
    வர முடியும்!

  12. yal_ahathian Says:

    un -vezi -pesithai- nan- moozi -peyarthal -kavithai- enkerarkal

    nalla- katpanai- nice

  13. அருட்பெருங்கோ Says:

    சிவஞானம் ஐயா,

    //என்ன கேள்வி இது?
    காதலூரில் இருந்துதானே கருவூருக்கு
    வர முடியும்!//

    காதல் இன்னும் “கரு”வூருக்கே வரவில்லை…அதற்குள் சிலேடையா??? ;)))

    ஆனாலும் ரசித்தேன்!!!

  14. அருட்பெருங்கோ Says:

    yal ahathian,

    வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிகள்!!!

  15. cheena (சீனா) Says:

    கவிதை அருமை. எளிமையான சொற்கள் = எளிதாகப் புரிகிறது - நன்று

  16. அருட்பெருங்கோ Says:

    / கவிதை அருமை. எளிமையான சொற்கள் = எளிதாகப் புரிகிறது - நன்று/

    நன்றிங்க சீனா

  17. Anu Says:

    /தங்கள் பக்கமெல்லாம் காதல் வாசம் ! அருள் எனக்கொரு சந்தேகம். நீங்க வாசம் செய்தது கரூரிலா இல்லை காதலூரிலா?? : )) /

    ஆஹா கேட்பது யார் காதல் கவி நவீன் தானே?

    /விழிமொழியினை அழகாக மொழிபெயர்த்துள்ளீர்கள் !!/

    மொழி பெயர்ப்பு மட்டுமே என்னுடையது.. அழகாய் இருந்தால் அதற்குக் காரணம் விழியும் விழியின் மொழியும்!!

    yaarudaya vizhi :P

  18. அருட்பெருங்கோ Says:

    என்னோட விழிதான் :)))

Leave a Reply