(enom + google) -> dreamhost & blogger -> wordpress அம்மா வாழ்ந்த மச்சுவீடு
Apr 23

நிழல் தேடி நெருங்கும்பொழுதெல்லாம்
வெயில் பொழியும் விருட்சம்
நீ.

*

நம் பிரிவைப் பற்றி அறியாமல்
வழக்கம்போல வந்து ஏமாறுகின்றன
உன் கனவுகள்.

*

கிழிக்க மனமின்றி
பத்திரப்படுத்திய உன் கடிதங்களை
வாசிக்கும்பொழுதெல்லாம் கிழிகிறது
மனம்.

*

நம் பிரிவுக்குப் பிறகு
128 முறை தூக்கியெறிந்திருக்கிறேன்
நீ பரிசளித்த பொருட்களை.
*

நீயும் தேவதைதான்.
நம் காதலும் தெய்வீகமானதுதான்.
என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்?

*

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: , ,

32 Responses to “என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்?”

  1. Sri Says:

    m nice…!!

  2. Senthil Says:

    //கிழிக்க மனமின்றி
    பத்திரப்படுத்திய உன் கடிதங்களை
    வாசிக்கும்பொழுதெல்லாம் கிழிகிறது
    மனம்.///

    கண்டிப்பா எங்க மனதை
    கிழிக்கிறீங்க….
    I like this… very nice kavithai…

    Senthil,
    Bangalore

  3. Sri Says:

    //நம் பிரிவுக்குப் பிறகு
    128 முறை தூக்கியெறிந்திருக்கிறேன்
    நீ பரிசளித்த பொருட்களை.//

    :-) super…..!!

  4. அருட்பெருங்கோ Says:

    @ஸ்ரீ,

    நன்றிங்க. நன்றிங்க. (கணக்கு சரியா போச்சா? ;) )

  5. Sri Says:

    :-)

  6. அருட்பெருங்கோ Says:

    /கண்டிப்பா எங்க மனதை
    கிழிக்கிறீங்க./

    அவ்ளோ கொலவெறியோட இருக்கா கவுஜ?

    /I like this very nice kavithai/

    நன்றிங்க செந்தில்!

  7. ஸ்ரீ Says:

    அட்ராசக்கை அட்ராசக்கை அட்ராசக்கை . அருமையான கவிதைகள். ஆத்தா இவரு மறுபடியும் பொலம்ப ஆரம்பிச்சுட்டாரு :’(

  8. பிரேம்குமார் Says:

    ஓ இன்றைக்கு புதன் கிழமையா? உன் பொலம்பல பாத்தவுடனே தான்யா நினைவுக்கு வருது

    //நம் பிரிவுக்குப் பிறகு
    128 முறை தூக்கியெறிந்திருக்கிறேன்
    நீ பரிசளித்த பொருட்களை.
    //

    :-(((

  9. Govindaraj Says:

    kavidhaikal…..
    vasanangalai matdithu madithu….
    pala varigalil eludhvadhu…..

  10. அருட்பெருங்கோ Says:

    ஸ்ரீ,

    நன்றி மச்சி. ஆத்தாகிட்ட சொல்லாதப்பா பயமா இருக்கு!

  11. அருட்பெருங்கோ Says:

    பிரேம்,

    புதன்தான் புலம்பலுக்கு சிறந்த நாள்னு பிபிசி ல சொன்னாங்களே நீங்க பாக்கலயா? அப்பறம் எதுக்கு அவ்ளோ பெரிய சோகம்?

  12. அருட்பெருங்கோ Says:

    கோவிந்தராஜ்,

    இது உங்களுக்கு இப்போதான் தெரியுமா? :)

  13. சுரேகா Says:

    கவிதை அருமை..!

    என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்? இறைவா? அப்படின்னு கேட்டிருந்தால் ஒரு அற்புத முரண்தொடை ரெடி..

  14. அருட்பெருங்கோ Says:

    /கவிதை அருமை..!/

    நன்றிங்க சுரேகா!

    /என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்? இறைவா?/

    இது நல்லாருக்கே :)

  15. சேர்ம ராஜா Says:

    Super…

  16. subash - srilanka Says:

    automatically i cry when i read ur pains

  17. subash - srilanka Says:

    கிழிக்க மனமின்றி
    பத்திரப்படுத்திய உன் கடிதங்களை
    வாசிக்கும்பொழுதெல்லாம் கிழிகிறது
    மனம்

    even in last my heart expects u only….. when will u understand?????????? ask that girl……..

  18. அருட்பெருங்கோ Says:

    நன்றி சேர்மராஜா!

    சுபாஷ், நீங்க ஏன் இவ்வளோ சீரியஸ் ஆகறீங்க? புலம்பல் கவுஜையெல்லாம் படிச்சா அனுபவிக்கவும் கூடாது; ஆராயவும் கூடாது. ரசிச்சுட்டு விட்டுடுங்க.

    (ஆனாலும் உங்களோட அக்கறைக்கு நன்றி :) )

  19. முத்துலெட்சுமி Says:

    புலம்பல் கவிதையை படிச்சுட்டு ரசிக்கனுமா.. அது எப்படி ..? புலம்பலை கேட்டா நாங்களும் கொஞ்சம் வருத்தப்படனும் இல்லலயா அடுத்தவங்க கஷ்டத்த ரசிக்கலாமான்னு ..
    எல்லாபுலம்பலையும் படித்தேன்..ஹ்ம்..வழக்க்ம் போல ந்ல்ல புலம்பல் ..உண்மையான புலம்பல்..

    .

  20. அருட்பெருங்கோ Says:

    /புலம்பல் கவிதையை படிச்சுட்டு ரசிக்கனுமா.. அது எப்படி ..? புலம்பலை கேட்டா நாங்களும் கொஞ்சம் வருத்தப்படனும் இல்லலயா அடுத்தவங்க கஷ்டத்த ரசிக்கலாமான்னு ../

    ஆகா… இப்படி மடக்கி மடக்கி கேள்வி கேட்டா நான் நெஜமாலுமே அழுதுறுவேன்.

    /எல்லாபுலம்பலையும் படித்தேன்..ஹ்ம்..வழக்க்ம் போல ந்ல்ல புலம்பல் ..உண்மையான புலம்பல்.. /

    அக்கா…அது என்ன உண்மையான புலம்பல்? உண்மையாலுமே என்ன புலம்ப வச்சிடுவீங்க போல இருக்கே…

  21. subash - srilanka Says:

    நம் பிரிவுக்குப் பிறகு
    128 முறை தூக்கியெறிந்திருக்கிறேன்
    நீ பரிசளித்த பொருட்களை./

    i am sure that, u also have love failture

  22. subash - srilanka Says:

    i am so effected by ur poems becoz it may be true in my life also

  23. ila Says:

    Superbuuuuuuuuuu

  24. அருட்பெருங்கோ Says:

    சுபாஷ், உங்களுக்கு என் மேல ஏன் இப்படியொரு கொலவெறி? இந்த விசயத்த இதோட நிறுத்திடுவோம். சிரிச்சுப்படிக்கிற மாதிரி வேற எதாவது எழுதறேன் விடுங்க!

    இளா, நன்றிங்க!

  25. தினேஷ் Says:

    அருமை…

  26. அருட்பெருங்கோ Says:

    நன்றி தினேஷ்!

  27. சந்தோஷ் Says:

    உங்க கவிதைய பாத்து உங்க ஆலு உங்கள ஆத்திகனா மாத்திடுவாங்க.கவலபடாதீங்க‌ அருமையான‌ புலம்பல்…..

  28. அருள் Says:

    நல்ல கவிதை…….
    ஏதோ நாத்திகம், பெரியாரியம் அப்படின்னி பேசுவிங்கன்னு ஆவலோட வந்தா……கவிதை எழுதி ஏமாத்திபுட்டிங்களே………

  29. அருட்பெருங்கோ Says:

    சந்தோஷ்,

    மறுபடியும் மொதல்ல இருந்தா? என்னால முடியல! :) நன்றி.

    அருள்,

    அதயெல்லாம் என்ன விட அழகா, தெளிவா பேசற பெருந்தலைகள் பதிவுலகத்துல இருக்காங்க. அதனால நாம கவுஜயெழுதி கவுஜயாக வாழ்வோம்.

  30. Sophia Says:

    கிழிக்க மனமின்றி
    பத்திரப்படுத்திய உன் கடிதங்களை
    வாசிக்கும்பொழுதெல்லாம் கிழிகிறது
    மனம்

    Unmaya apadiye soilliteingale siva…. :(
    really superb

  31. radha Says:

    kavithai ellam nallathan irukku … aana indha ezhuthu irukku parunga adhudhan kanna romba kashta paduthudhu. kombu ezhuthuku munna pinna varudhu, kaalum apadiye… vera edhachum font use panna koodadha thozhare?

  32. அருட்பெருங்கோ Says:

    @ சோஃபியா,

    உண்மையா? அட ஏங்க நீங்க வேற…

    @ராதா,

    நன்றிங்க. எழுத்து பிரச்சினைக்கு காரணம் உலாவி(browser)யாதான் இருக்கனும். ஏன்னா எனக்கு Internet explorer, Firefox ரெண்டலயும் சரியாவே தெரியுது. நீங்க என்ன browser, என்ன version பயன்படுத்துறீங்கனு சொல்லுங்க.

Leave a Reply