Apr 23
நிழல் தேடி நெருங்கும்பொழுதெல்லாம்
வெயில் பொழியும் விருட்சம்
நீ.
*
நம் பிரிவைப் பற்றி அறியாமல்
வழக்கம்போல வந்து ஏமாறுகின்றன
உன் கனவுகள்.
*
கிழிக்க மனமின்றி
பத்திரப்படுத்திய உன் கடிதங்களை
வாசிக்கும்பொழுதெல்லாம் கிழிகிறது
மனம்.
*
நம் பிரிவுக்குப் பிறகு
128 முறை தூக்கியெறிந்திருக்கிறேன்
நீ பரிசளித்த பொருட்களை.
*
நீயும் தேவதைதான்.
நம் காதலும் தெய்வீகமானதுதான்.
என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்?
*
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
April 23rd, 2008 at 9:25 am
m nice…!!
April 23rd, 2008 at 9:30 am
//கிழிக்க மனமின்றி
பத்திரப்படுத்திய உன் கடிதங்களை
வாசிக்கும்பொழுதெல்லாம் கிழிகிறது
மனம்.///
கண்டிப்பா எங்க மனதை
கிழிக்கிறீங்க….
I like this… very nice kavithai…
Senthil,
Bangalore
April 23rd, 2008 at 9:43 am
//நம் பிரிவுக்குப் பிறகு
128 முறை தூக்கியெறிந்திருக்கிறேன்
நீ பரிசளித்த பொருட்களை.//
April 23rd, 2008 at 11:27 am
@ஸ்ரீ,
நன்றிங்க. நன்றிங்க. (கணக்கு சரியா போச்சா?
)
April 23rd, 2008 at 11:29 am
April 23rd, 2008 at 11:29 am
/கண்டிப்பா எங்க மனதை
கிழிக்கிறீங்க./
அவ்ளோ கொலவெறியோட இருக்கா கவுஜ?
/I like this very nice kavithai/
நன்றிங்க செந்தில்!
April 23rd, 2008 at 12:21 pm
அட்ராசக்கை அட்ராசக்கை அட்ராசக்கை . அருமையான கவிதைகள். ஆத்தா இவரு மறுபடியும் பொலம்ப ஆரம்பிச்சுட்டாரு :’(
April 23rd, 2008 at 3:21 pm
ஓ இன்றைக்கு புதன் கிழமையா? உன் பொலம்பல பாத்தவுடனே தான்யா நினைவுக்கு வருது
//நம் பிரிவுக்குப் பிறகு
128 முறை தூக்கியெறிந்திருக்கிறேன்
நீ பரிசளித்த பொருட்களை.
//
:-(((
April 23rd, 2008 at 3:28 pm
kavidhaikal…..
vasanangalai matdithu madithu….
pala varigalil eludhvadhu…..
April 23rd, 2008 at 5:09 pm
ஸ்ரீ,
நன்றி மச்சி. ஆத்தாகிட்ட சொல்லாதப்பா பயமா இருக்கு!
April 23rd, 2008 at 5:09 pm
பிரேம்,
புதன்தான் புலம்பலுக்கு சிறந்த நாள்னு பிபிசி ல சொன்னாங்களே நீங்க பாக்கலயா? அப்பறம் எதுக்கு அவ்ளோ பெரிய சோகம்?
April 23rd, 2008 at 5:09 pm
கோவிந்தராஜ்,
இது உங்களுக்கு இப்போதான் தெரியுமா?
April 23rd, 2008 at 6:02 pm
கவிதை அருமை..!
என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்? இறைவா? அப்படின்னு கேட்டிருந்தால் ஒரு அற்புத முரண்தொடை ரெடி..
April 23rd, 2008 at 6:44 pm
/கவிதை அருமை..!/
நன்றிங்க சுரேகா!
/என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்? இறைவா?/
இது நல்லாருக்கே
April 23rd, 2008 at 6:48 pm
Super…
April 23rd, 2008 at 7:04 pm
automatically i cry when i read ur pains
April 23rd, 2008 at 7:22 pm
கிழிக்க மனமின்றி
பத்திரப்படுத்திய உன் கடிதங்களை
வாசிக்கும்பொழுதெல்லாம் கிழிகிறது
மனம்
even in last my heart expects u only….. when will u understand?????????? ask that girl……..
April 23rd, 2008 at 7:40 pm
நன்றி சேர்மராஜா!
சுபாஷ், நீங்க ஏன் இவ்வளோ சீரியஸ் ஆகறீங்க? புலம்பல் கவுஜையெல்லாம் படிச்சா அனுபவிக்கவும் கூடாது; ஆராயவும் கூடாது. ரசிச்சுட்டு விட்டுடுங்க.
(ஆனாலும் உங்களோட அக்கறைக்கு நன்றி
)
April 23rd, 2008 at 8:23 pm
புலம்பல் கவிதையை படிச்சுட்டு ரசிக்கனுமா.. அது எப்படி ..? புலம்பலை கேட்டா நாங்களும் கொஞ்சம் வருத்தப்படனும் இல்லலயா அடுத்தவங்க கஷ்டத்த ரசிக்கலாமான்னு ..
எல்லாபுலம்பலையும் படித்தேன்..ஹ்ம்..வழக்க்ம் போல ந்ல்ல புலம்பல் ..உண்மையான புலம்பல்..
.
April 23rd, 2008 at 9:31 pm
/புலம்பல் கவிதையை படிச்சுட்டு ரசிக்கனுமா.. அது எப்படி ..? புலம்பலை கேட்டா நாங்களும் கொஞ்சம் வருத்தப்படனும் இல்லலயா அடுத்தவங்க கஷ்டத்த ரசிக்கலாமான்னு ../
ஆகா… இப்படி மடக்கி மடக்கி கேள்வி கேட்டா நான் நெஜமாலுமே அழுதுறுவேன்.
/எல்லாபுலம்பலையும் படித்தேன்..ஹ்ம்..வழக்க்ம் போல ந்ல்ல புலம்பல் ..உண்மையான புலம்பல்.. /
அக்கா…அது என்ன உண்மையான புலம்பல்? உண்மையாலுமே என்ன புலம்ப வச்சிடுவீங்க போல இருக்கே…
April 23rd, 2008 at 10:31 pm
நம் பிரிவுக்குப் பிறகு
128 முறை தூக்கியெறிந்திருக்கிறேன்
நீ பரிசளித்த பொருட்களை./
i am sure that, u also have love failture
April 23rd, 2008 at 10:36 pm
i am so effected by ur poems becoz it may be true in my life also
April 23rd, 2008 at 10:38 pm
Superbuuuuuuuuuu
April 24th, 2008 at 8:21 am
சுபாஷ், உங்களுக்கு என் மேல ஏன் இப்படியொரு கொலவெறி? இந்த விசயத்த இதோட நிறுத்திடுவோம். சிரிச்சுப்படிக்கிற மாதிரி வேற எதாவது எழுதறேன் விடுங்க!
இளா, நன்றிங்க!
April 24th, 2008 at 2:39 pm
அருமை…
April 24th, 2008 at 4:01 pm
நன்றி தினேஷ்!
April 24th, 2008 at 4:35 pm
உங்க கவிதைய பாத்து உங்க ஆலு உங்கள ஆத்திகனா மாத்திடுவாங்க.கவலபடாதீங்க அருமையான புலம்பல்…..
April 24th, 2008 at 7:34 pm
நல்ல கவிதை…….
ஏதோ நாத்திகம், பெரியாரியம் அப்படின்னி பேசுவிங்கன்னு ஆவலோட வந்தா……கவிதை எழுதி ஏமாத்திபுட்டிங்களே………
April 25th, 2008 at 10:10 pm
சந்தோஷ்,
மறுபடியும் மொதல்ல இருந்தா? என்னால முடியல!
நன்றி.
அருள்,
அதயெல்லாம் என்ன விட அழகா, தெளிவா பேசற பெருந்தலைகள் பதிவுலகத்துல இருக்காங்க. அதனால நாம கவுஜயெழுதி கவுஜயாக வாழ்வோம்.
April 29th, 2008 at 2:21 pm
கிழிக்க மனமின்றி
பத்திரப்படுத்திய உன் கடிதங்களை
வாசிக்கும்பொழுதெல்லாம் கிழிகிறது
மனம்
Unmaya apadiye soilliteingale siva….
really superb
May 7th, 2008 at 5:44 pm
kavithai ellam nallathan irukku … aana indha ezhuthu irukku parunga adhudhan kanna romba kashta paduthudhu. kombu ezhuthuku munna pinna varudhu, kaalum apadiye… vera edhachum font use panna koodadha thozhare?
May 8th, 2008 at 9:43 am
@ சோஃபியா,
உண்மையா? அட ஏங்க நீங்க வேற…
@ராதா,
நன்றிங்க. எழுத்து பிரச்சினைக்கு காரணம் உலாவி(browser)யாதான் இருக்கனும். ஏன்னா எனக்கு Internet explorer, Firefox ரெண்டலயும் சரியாவே தெரியுது. நீங்க என்ன browser, என்ன version பயன்படுத்துறீங்கனு சொல்லுங்க.