Feb 24

‘காலைவணக்கம்’ சொல்லிக்கொண்டு வந்த மடலில்
சிரித்தபடி அமர்ந்திருந்தது ஒரு குழந்தை.

குழந்தையைப் பார்த்ததும்
பால்யம்…
பள்ளிக்கூடம்…
தமிழய்யா…
தமிழ்…
என்றும்,

தமிழை நினைத்ததும்
கவிதை…
இலக்கியம்…
திரைப்படம்…
இசை…
என்றும்,

இசையை நினைத்ததும்
இளையராஜா…
எஸ்பிபி…
எஸ்பிபி சரண்…
சென்னை 28…
என்றும்,

சென்னையை நினைத்ததும்
வெயில்…
கடல்…
கடற்கரை…
காதல்…
என்றும்,

எதை நினைத்தாலும்
எதனெதற்கோ இழுத்துச் செல்லும் மனதில்
அடுத்து
உன்னை நினைத்ததும்
நீ மட்டுமே நிறைகிறாய்!

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Related Posts...

written by அருட்பெருங்கோ \\ tags: ,


18 Responses to “எதனெதற்கோ இழுத்துச் செல்லும் மனதில்”

  1. 1. Anonymous Says:

    kaadhaluku kavidhai
    kaadhal kavidhaiku arul…

    vaazhthukkal…

  2. 2. கயல்விழி முத்துலெட்சுமி Says:

    கவிதை என்றது காதல் காதல் என்றதும் அருட்பெருங்கோ சரியா :) ))

  3. 3. அருட்பெருங்கோ Says:

    @அனானி,
    கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி. ஆனால் பெயரில்லாமல் ஏன் வரவேண்டும்?

    @முத்துலெட்சுமி,
    நீங்களும் கூட கலாய்க்கறீங்களே. நான் பாவம்ங்க்கா :-)

  4. 4. Anonymous Says:

    unmaithaan arutperungo..

    ontai ennumpothu…athai saarntha ellam gnapakam vara.. avalai ninaithall mattum avalae ellaam aaaka
    v

  5. 5. சின்ன கவுண்டர் (பெயருக்கு மட்டும்) Says:

    அனுபவமோ!…

    உண்மைதான், எனக்கு அனுபவம் உள்ளது..

    வாழ்த்துக்கள்.

    நன்றிகளுடன்

    ஈசுவரன்.மணி

  6. 6. அருட்பெருங்கோ Says:

    /ontai ennumpothu…athai saarntha ellam gnapakam vara.. avalai ninaithall mattum avalae ellaam aaaka/

    கருத்துக்கு நன்றிங்க அனானி.

  7. 7. Dreamzz Says:

    kavidhai kalakkal :)
    super

  8. 8. அருட்பெருங்கோ Says:

    @ஈசுவரன் மணி,
    அனுபவம் எல்லாம் இல்லைங்க. அப்படியே யோசிக்கிறதுதான்!!!

    @ட்ரீம்ஸ்,
    நன்றிங்க ட்ரீம்ஸ்.

  9. 9. கருணா Says:

    நல்லா இருக்குங்க அருள்..

  10. 10. அருட்பெருங்கோ Says:

    நன்றிங்க கருணா!

  11. 11. கோபால் Says:

    அருமை…
    எதார்த்தமான வரிகள்…
    எப்போதும் போல் வாழ்த்துக்கள்

  12. 12. bala Says:

    கடைசில பேப்பர படிக்கவெ இல்ல போல :) )

  13. 13. அருட்பெருங்கோ Says:

    /அருமை… எதார்த்தமான வரிகள்…
    எப்போதும் போல் வாழ்த்துக்கள்/

    நன்றிங்க கோபால்!!!

  14. 14. அருட்பெருங்கோ Says:

    /கடைசில பேப்பர படிக்கவெ இல்ல போல :) )/

    என்ன சொல்ல வர்றீங்கனு புரியல பாலா!

  15. 15. Dinesh V Says:

    எனக்கு பழய நினைப்புக்ள் வருகிறது….
    அருமையான கவிதை….

    வாழ்த்துக்கள்….. தொடருங்கள்…….

  16. 16. Girl of Destiny Says:

    தொடர்ச்சியும் நடையும் அழகாய் வந்துள்ளது.
    மேலும் தொடர்க!

  17. 17. அருட்பெருங்கோ Says:

    /எனக்கு பழய நினைப்புக்ள் வருகிறது….
    அருமையான கவிதை….

    வாழ்த்துக்கள்….தொடருங்கள்……./

    வாழ்த்துகளுக்கு நன்றிகள் தினேஷ்!

  18. 18. அருட்பெருங்கோ Says:

    நன்றிங்க girl of destiny!

Leave a Reply